காமன்வெல்த்தில் தமிழகம் சோடை போனது ஏன்?
காமன்வெல்த்தில் தமிழகம் சோடை போனது ஏன்? சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியா 100 பதக்கங்களை குவித்திருந்தாலும், அதில் தமிழகத்தின் பங்கு என்ன என்று பார்த்தால், சோகம் தான் மிஞ்சுகிறது. மக்கள்தொகை அடிப்படையில், ஏழாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம். ஆனால், மொத்த வீரர்களில் தமிழகத்தின் பங்கு வெறும் 5 சதவீதம். 30 வீரர்கள் மட்டுமே, தமிழகத்தில் இருந்து சென்றனர். இவர்கள் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜொலித்தாலும், தமிழக வீரர்கள் சோடை போயினர். டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மட்டுமே தங்கம் வென்றார். வில்வித்தை வீரர் ஸ்ரீதர், தடகள வீரர் சுரேஷ் சத்யா, வீராங்கனை காமினி ஆகியோர் தங்கம் வெல்ல முடியாவிட்டாலும், பதக்கங்களை பெற்றனர். வீரத்துக்கும், விளையாட்டிற்கும் பெயர் போன தமிழகத்தில் இருந்து சென்ற வீரர்கள், ஜொலிக்காமல் போனதற்கு என்ன காரணம்? இது குறித்து, தெற்காசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்ற விருது பெற்றவரும், 1989ல் இஸ்லாமாபாத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியி...