பாரபட்சம்
பத்தாண்டு அரசுகளின் பாரபட்சம் (மக்கள் தொகை கணக்கெடுப்பில் அம்பலம்) கடந்த பத்தாண்டுகளில், சென்னையைத் தவிர்த்த பிற பகுதிகளை அ.தி.மு.க.,- தி.மு.க., அரசுகள் புறக்கணித்திருப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பத்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், தேசத்தின் வளர்ச்சியில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முக்கிய பங்காற்றுகிறது. எதிர்காலத் திட்டங்களுக்காக இது எடுக்கப்பட்டாலும், கடந்த காலங்களில் நடந்த பாரபட்சத்தையும் இது அம்பலப்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள, 32 மாவட்டங்களில், 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர் இருப்பதாகச் சொல்கிறது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு; இவற்றில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில், முதலிடத்தைப் பிடிப்பது சென்னை; அடுத்த இடங்களைப் பிடிப்பது, அதையொட்டியுள்ள காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள். சென்னையில், 46 லட்சத்து 81 ஆயிரத்து 87, காஞ்சிபுரத்தில் 39 லட்சத்து 90 ஆயிரத்து 897, வேலூரில் 39 லட்ச...