Posts

Showing posts from February, 2013

தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

Image
ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...! வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது: * பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும். * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது. * ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். * ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும். * ஓட்...

சுயதொழிலில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

புதிய தலைமுறை அறக்கட்டளை இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்காகப் பணியாற்றும் ஓர் அரசு சாரா தொண்டு நிறுவனம் என்பது தாங்கள் அறிந்ததே. நமது அறக்கட்டளை இதுவரை 950க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 182 இலவசக் கல்வி மையங்களும், அரியலூர் மாவட்டத்தில்  இளைஞர் திறன் மேம்பாட்டிற்காக ஓர் நிரந்தர இளைஞர் திறன் மேம்பாட்டு மையமும் இயங்கி வருகின்றன. சுயதொழில் 2013 '' வாய்ப்புகள் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன” . ' ஆனால் எப்படி ஆரம்பிப்பது , யாரை அணுகுவது , முக்கியமாக முதலீட்டுக்கு என்ன செய்வது ?’ என்று ஒரு கூடை கேள்விகளை சுமந்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு சொந்தமாக சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வழி வகை செய்யும் நோக்கில் நமது அறக்கட்டளை , “ எம் எஸ் எம் இ – டி ஐ '', குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையத்துடன் (MSME-DI - Micro, Small and Medium Enterprises - Development Institute) இணைந்து   “ சுயதொழில் 2013 ” ( சுயதொழில் முனைவோருக்...

ஏர் எழுபது

"உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது; உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்; உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே!" என்று உழவின் பெருமையையும் மேன்மையையும் திருவள்ளுவப் பேராசான் போற்றிக் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று உலக மக்கள் அனைவருக்கும் முதுகெலும்பாக இருக்கும் உழவுத் தொழிலின் தனிச்சிறப்பை இரு நூல்களின் வாயிலாக எடுத்துக் கூறியுள்ளார் கவிச்சக்ரவர்த்தி கம்பர். கம்பர் என்று கூறினாலே "கம்பராமாயணம்" ஒன்றுதானே அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர் எழுதிய ஒன்பது நூல்களுள், வேளாளர் மரபைப் போற்றி, பொருளாதாரத்தைப் புகழ்ந்துரைக்கும் அதியற்புதமான இரு நூல்கள்தான்; "ஏர் எழுபது" மற்றும்  "திருக்கை வழக்கம்" கம்பர் பாடியதாகக் கருதப்படும் "ஏர் எழுபது", வேளாளர் தம் சிறப்ப...