Saturday, November 29, 2014

பத்ரி சேஷாத்ரி: பிகாரி

பத்ரி சேஷாத்ரி: பிகாரி:



        ஞாயிறு மதியம் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னைக்கு குருவாயூர் விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. முன்பதிவு கேரேஜ் ஒன்றில் 96 பேர் உட்காரலாம். ஆனால் உள்ளே அதற்குமேல் நூறு பேர் நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு கேரேஜிலும் இதுதான் நிலைமை. ஏறி என் இடத்தில் உட்கார்ந்திருந்தவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்தேன். நிற்க, நகர துளிக்கூட இடம் இல்லை. சீட் இல்லாமல் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும், நிற்கும் எல்லோரும் இளைஞர்கள். ஆண்கள். எல்லோரும் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் அழுக்கு உடையில். பலர் கிழிந்த உடைகளில். எல்லோரிடம் முதுகில் மாட்டும் பை ஒன்று. பலர் முகத்தில் தூக்கம். உடல் சோர்வு.

கையோடு கொண்டுவந்திருக்கும் கிண்டிலில் ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். திடீரென ‘பை ஆர் ஸ்கொயர்ட்’ என்றான் ஒருவன். இல்லை ‘டூ பை ஆர்’ என்றான் இன்னொருவன். அவர்கள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். என் உடைந்த இந்தியில் அருகில் நிற்கும் இருவருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அவர்கள் அனைவரும் பிகாரின் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள். திருச்சியில் ரயில்வே தேர்வு ஒன்றை எழுத வந்திருந்தார்கள். தேர்வைக் காலையில் எழுதிவிட்டு இப்போது மீண்டும் ஊர் திரும்புகிறார்கள். சென்னை போய், அங்கிருந்து எதோ ஒரு ரயிலைப் பிடித்து இதோபோல் தொத்தி, கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு பாட்னா சென்று அங்கிருந்து அவரவர் ஊர் செல்லவேண்டும்.

தென்னக ரயில்வேயில் கேங்மேன்/சிக்னல் ஊழியர் குரூப் டி தேர்வாம். ஒருவரிடமிருந்து தேர்வுத் தாள் வாங்கிப் பார்த்தேன். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வினாக்கள் இருந்தன. 90 நிமிடங்கள், 100 கேள்விகள். ஒரு சில கணக்கு வினாக்கள். ஒரு சில பொது அறிவுக் கேள்விகள். கடைசிக் கேள்வி ‘இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் யார்?’ என்றிருந்தது. இதில்தான் ஒரு கேள்வி வட்டத்தின் சுற்றளவு அல்லது பரப்பளவு என்ன என்று இருக்கவேண்டும்.

நான் பேசியவர்கள் அனைவருமே பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். ஒருவர் கையில் ஆண்டிராய்ட் ஃபோனில் http://www.onlinetyari.com/ என்ற தளத்தின் குறுஞ்செயலி ஒன்றை வைத்திருந்தார். அதிலிருந்து (இந்தியிலான) மல்ட்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு விடை தட்டி, சரியா தவறா என்று பார்த்துக்கொண்டே இருந்தார். அடுத்த பரீட்சைக்குத் தயாராகிறாராம்.

படித்த இளைஞர்களுக்கு பிகாரில் உருப்படியான வேலை ஒன்றுமில்லை. எனவே சில ஆயிரம் கிமீ தாண்டி வந்து ரயில்வே ஸ்டேஷனிலேயே தங்கி பரீட்சை எழுதி, என்ன வேலை கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

பிகார் அரசியல் குறித்தும் தமிழகம் குறித்தும் என்னால் முடிந்த இந்தியில் அவர்களுடன் பேசினேன். அவர்களுக்கு இந்தி தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. நிதீஷ் நிஜமாகவே மாநிலத்தை முன்னேற்றியிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் நிதீஷும் லாலுவும் ஒன்றாகச் சேர்வது சாத்தியமில்லை என்றும் சொன்னார்கள். பிகார் பாஜகவில் உருப்படியான, நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தாக இருந்தது. சுஷீல் மோதிமீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்கள். அதே சமயம், மத்தியில் இருக்கும் கட்சியே மாநிலத்தில் வருவதுதான் உபயோகமானது என்றார்கள். எனவே பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள் என்றுதான் தெரிகிறது.

தமிழகத்தில் என்ன நடந்திருக்கிறது, பிகாரில் என்ன நடக்கவில்லை என்பது குறித்துக் கொஞ்சம் பேசினேன். (ஆனால் சரியான இந்தி வார்த்தைகள் தெரியாமல் ஆங்கிலம் கலந்துதான் பேசவேண்டியிருந்தது.) ஓர் இளைஞர் சொன்னார்: “பிகாரில் மக்கள் அரசை நம்பியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அரசு மக்களை நம்பியிருக்கிறது.”

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பிகார் போகவேண்டிய தூரம் மிக அதிகம் என்பது அம்மாநிலத்தின் படித்த இளைஞர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஏதேதோ காரணங்களுக்காக இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்கிறார்கள். அடிமட்ட வேலைகளிலிருந்து அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தலைவர்கள் அனைவரும் அவர்களை ஏமாற்றியுள்ளனர். பாஜகவும் நம்பத்தகுந்த வகையில் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் அக்கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரத் தயாராக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. பாஜகவும் பிகாரைக் காப்பாற்றவில்லையென்றால் இது மிகப்பெரும் மானுடச் சோகத்தில்தான் முடியும்.

Sunday, November 16, 2014

டீத்தூள்கள்


            நம்ம ஊர்ல என்னவோ டஸ்ட் டீ வாங்கி தான் டீ போடுறாங்க. டஸ்ட் டீ டீத்தூள்களின் வகையில லாஸ்ட் ஸ்டேஜ்.

common grades: 

1. Golden Tips
2. Silver Tips
3. Green Tea
4. OP (Broken Orange Pekoe
5. PEKOE ( a high-quality tea made from the downy tips of the young buds of the tea plant  / A grade of black tea consisting of the leaves around the buds)
6. BOP (Broken Orange Pekoe)
7. BOPF(Broken Orange Pekoe Fannings)
8. DEST


இம்புட்டு வெரைட்டி இருக்கு டீத்தூள்கள்ல.  டஸ்ட் டீ டீக்கடைகளில் உபயோகிப்பாங்க. ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.  நல்ல தரமான, ருசியான டீ வேணும்னா BOPF தான். இலங்கையில் எல்லாம் டீ பாக்கெட்கள் மேல எழுதியே இருக்கும். நம்ம ஊர்ல டார்ஜ்லிங் டீ, இப்படி பேர்தான் சொல்லிப்போம். 


sourcehttp://pudugaithendral.blogspot.in/2014/11/blog-post_15.html



Whole leaf grades[edit]

The grades for whole leaf orthodox black tea are: Ceylon orange pekoe (OP) grades'
  • OP1—slightly delicate, long, wiry leaf with the light liquor
  • OPA—bold, long leaf tea which ranges from tightly wound to almost open
  • OP—main grade, in the middle between OP1 and OPA, can consist of long wiry leaf without tips
  • OP Superior—primarily from Indonesia, similar to OP
  • Flowery OP—high-quality tea with a long leaf and few tips, considered the second grade in Assam, Dooars, and Bangladesh teas, but the first grade in China
  • F OP1—as above, but with only the highest quality leaves in the FOP classification
  • Golden Flowery OP1—higher proportion of tip than FOP top grade in Milima and Marinyn regions, uncommon in Assam and Darjeeling
  • Tippy Golden F OP—the highest proportion of tip, main grade in Darjeeling and Assam
  • TGF OP1—as above, but with only the highest quality leaves in the TGFOP classification
  • Finest TGF OP—highest quality grade (Note: "Special" is occasionally substituted for "Finest", with a number 1 at the end to indicate the very finest), often hand processed and produced at only the best plantations, roughly one quarter tips
  • SFTGFOP(1)—sometimes used to indicate the very finest
A joke among tea aficionados is that "FTGFOP" stands for "Far Too Good For Ordinary People".

Broken leaf grades[edit]

  • BT—Broken Tea: Usually a black, open, fleshy leaf that is very bulky. Classification used in Sumatra, Sri Lanka, and some parts of Southern India.
  • BP—Broken Pekoe: Most common broken pekoe grade. From Indonesia, Ceylon, Assam and Southern India.
  • BPS—Broken Pekoe Souchong: Term for broken pekoe in Assam and Darjeeling.
  • FP—Flowery Pekoe: High-quality pekoe. Usually coarser with a fleshier, broken leaf. Produced in Ceylon and Southern India, as well as in some parts of Kenya.
  • BOP—Broken Orange Pekoe: Main broken grade. Prevalent in Assam, Ceylon, Southern India, Java, and China.
  • F BOP—Flowery Broken Orange Pekoe: Coarser and broken with some tips. From Assam, Ceylon, Indonesia, China, and Bangladesh. In South America coarser, black broken.
  • F BOP F—Finest Broken Orange Pekoe Flowery: The finest broken orange pekoe. Higher proportion of tips. Mainly from Ceylon's "low districts".
  • G BOP—Golden Broken Orange Pekoe: Second grade tea with uneven leaves and few tips.
  • GF BOP1—Golden Flowery Broken Orange Pekoe 1: As above, but with only the highest quality leaves in the GFBOP classification.
  • TGF BOP1—Tippy Golden Flowery Broken Orange Pekoe 1: High-quality leaves with a high proportion of tips. Finest broken First Grade Leaves in Darjeeling and some parts of Assam.

Fannings grades[edit]

  • PF—Pekoe Fannings
  • OF—Orange Fannings: From Northern India and some parts of Africa and South America.
  • FOF—Flowery Orange Fannings: Common in Assam, Dooars, and Bangladesh. Some leaf sizes come close to the smaller broken grades.
  • GFOF—Golden Flowery Orange Fannings: Finest grade in Darjeeling for tea bag production.
  • TGFOF—Tippy Golden Flowery Orange Fannings.
  • BOPF—Broken Orange Pekoe Fannings: Main grade in Ceylon, Indonesia, Southern India, Kenya, Mozambique, Bangladesh, and China. Black-leaf tea with few added ingredients, uniform particle size, and no tips.

Dust grades[edit]

  • D1—Dust 1: From Sri Lanka, Indonesia, China, Africa, South America, and Southern India.
  • PD—Pekoe Dust
  • PD1—Pekoe Dust 1: Mainly produced in India.

Monday, November 10, 2014

டிராஃபிக் ராமசாமி

டிராஃபிக் ராமசாமி

Badri Seshadri - http://www.badriseshadri.in/2014/11/blog-post_10.html


                 தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு நிகழ்ச்சியை நான் கடந்த பத்து வாரங்களாகச் செய்துவருகிறேன். தமிழ்நாட்டின் ஒருசில பிரபலமானவர்களை, சுவாரசியமானவர்களை, சாதனையாளர்களைப் பேசவைக்கும் நிகழ்ச்சி. என் வேலை அவர்களைத் தூண்டி, அவர்களைப் பற்றி அவர்களையே சொல்லவைப்பது. இந்நிகழ்ச்சி பற்றி விலாவரியாக எழுதவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம் நான் சந்தித்த ஒரு நபர் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று என் வைராக்கியத்தைச் சற்றே தளர்த்தியிருக்கிறேன்.


 

டிராஃபிக் ராமசாமிக்கு 82 வயதாகிறது. இவருடைய பெயரை அவ்வப்போது பத்திரிகையில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆசாமி என்று கருதியிருக்கிறேன். இவர் ஏன் பல வழக்குகளைப் போடுகிறார் என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை. இவரைப் பின்னிருந்து இயக்குபவர்கள் யார், இவருடைய நோக்கம் என்ன என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் நேரடியாகச் செலவிட்ட இரு நாள்கள் என் மனத்தை வெகுவாக மாற்றிவிட்டது.

இவர் கொஞ்சம் கிறுக்குதான். இன்னமும் இவரை எது உந்துகிறது என்பது முழுமையாக எனக்குப் புரியவில்லை. ஆனால் இவருடைய வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.,

இவருடைய தந்தை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவருடைய உபநயன நிகழ்ச்சியின்போது, ராஜாஜி விருந்தினராக வந்திருக்கிறார். அப்போது ராஜாஜி கொடுத்த சில அறிவுரை இவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற ஒரு சிறு கரு அப்போதுதான் தோன்றியிருக்கிறது. சுமார் 14 வயதாகும்போது வயலில் அறுப்பு முடிந்து கையில் பத்து கிலோ அரிசியுடன் பேருந்தில் வந்துகொண்டிருந்தவரை தாசில்தார் ஒருவர் வழிமறித்து அரிசியைப் பறிமுதல் செய்திருக்கிறார். அப்போது அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்திருக்கிறது. ஆனால் பத்து கிலோவரை பெர்மிட் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். அரிசியைக் கொடுத்துவிட்டு வந்த ராமசாமி ஒரு 3 பைசா கார்டில் கலெக்டருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அதை வைத்து கலெக்டர் தாசில்தாரைப் பணி இடைநீக்கம் செய்ய, தாசில்தார் இவர் வீடுவரை வந்து அரிசியைக் கொடுத்து, கடிதம் எழுதி வாங்கிச் சென்று வேலையில் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இந்தப் புள்ளி மிகவும் முக்கியமானது. நியாயப்படி நடந்துகொண்டால் சட்டம் நமக்குத் துணை புரியும் என்ற எண்ணம் இவருக்குத் தோன்றியிருக்கிறது.

படிப்பு அதிகம் இல்லாத நிலையில் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி பி&சி மில்லில் ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் ஏ.எம்.ஐ.ஈ படித்து இஞ்சினியர் ஆகியிருக்கிறார். இவருக்குத் திருமணம் செய்ய இவர் தந்தை 1,500 ரூ வரதட்சிணை கேட்டிருக்கிறார். அதை எதிர்த்து, பணம் வாங்காமல் அதே பெண்ணை திருமணத்துக்குக் குறித்த நாளிலிருந்து மூன்று நாள்கள் கழித்து திருப்பதியில் மணம் செய்திருக்கிறார். தந்தை இவரையும் மருமகளையும் வீட்டில் சேர்க்கவில்லை.

பி&சி மில்லில் சம்பளத்தைக் குறைக்கவேண்டிய சூழல் வந்தபோது அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்று மும்பை டாடா மில்ஸில் வேலைக்குச் சேர இருந்தார். அப்போது இவர் மனைவியும் வேலையில் இருந்ததால், சென்னையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ள, முழுநேர சமூக சேவகராக ராமசாமி ஆகிறார்.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குசெய்வதைத் தன் பணியாக எடுத்துக்கொண்டார். அதிலிருந்துதான் அவருக்கு ‘டிராஃபிக்’ என்ற முன்னொட்டு கிடைத்தது. விகடனின் ஜூனியர் போஸ்ட் பத்திரிகைதான் அவருக்கு இந்தப் பட்டத்தைத் தந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர் காவல்துறையோடு மோத ஆரம்பிக்கிறார். காவலர்கள் மோட்டார் வாகன ஓட்டுனர்களிடமும் கடைக்காரர்களிடமும் லஞ்சம் வாங்குவதைக் கவனித்தவர் அதுகுறித்துப் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்திருக்கிறார். அதனால் காவலர்கள் அவர்மீது பொய் வழக்கு போட்டு ஏழெட்டு முறை சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஒருமுறை லாக்கப்பில் கட்டிவைத்து அடித்துள்ளார்கள். “போறவன் வர்ரவனெல்லாம் அடிப்பான்” என்றார் என்னிடம். நான்கைந்து நாள்கள் கழித்து பெயில் வாங்கிக்கொண்டு வெளியே வருவார். அப்போதுதான் லீகல் எய்ட்மூலம் வக்கீல்களைக் கொண்டு வாதாடுவது பற்றியெல்லாம் அறிந்திருக்கிறார். இம்மாதிரியெல்லாம் பொய் வழக்குகள் போட்டாலும் ஓய்ந்துபோகவில்லை ராமசாமி.

1990-களின் நடுப்பகுதியில்தான் இவர் நீதித்துறைக்கு ஒரு வழக்கை எடுத்துச் செல்கிறார். உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பாதையை காவல்துறை ஒருவழிப்பாதையாக மாற்றுகிறது. அவ்வாறு செய்த ஓராண்டுக் காலத்தில் சுமார் 22 பேர் விபத்தில் இறக்கின்றனர். அந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து ராமசாமி, ஒருவழிப் பாதை கூடாது என்று ஒரு பொதுநல வழக்கைக் கொண்டுவருகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அப்போது தொடங்கி இன்றுவரை பல முக்கியமான வழக்குகளை இவர் போட்டுள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார்.

மீன்பாடி வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று இவர் போட்ட வழக்கு முக்கியமானது. உரிமம் இல்லாத அந்த வண்டிகள் மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் வருவதில்லை. எனவே எந்த வண்டிகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு அல்லது பிற இழப்புக்குக் காப்பீடு கிடைக்காது. ராமசாமி வம்படியாக இந்த வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரவில்லை. ஒன்று தடை செய்யவேண்டும் அல்லது இந்த வண்டிகளுக்கு உரிமம் தரப்படவேண்டும், காப்பீடும் வேண்டும் என்றுதான் வழக்காடுகிறார். அதேபோலத்தான் நடைபாதைக் கடைகள் தொடர்பான வழக்கும். நடைபாதைக் கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. அவை அகற்றப்படவேண்டும். அதே நேரம் இதனால் பாதிக்கப்படும் கடைக்காரர்களுக்கு வேறு இடம் தரப்படவேண்டும். இவ்வாறுதான் அவருடைய வழக்குகள் இருக்கின்றன.

எல்லாவிதக் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் மீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடுகளின்றி வைக்கப்படும் அரசியல் விளம்பரத் தட்டிகள், ஊருக்கு நடுவே வைக்கப்படும் வெடிக் கடைகள் போன்றவற்றுக்கு எதிராக ராமசாமி தொடுத்துள்ள வழக்குகள் மிக முக்கியமானவை. இந்த வழக்குகளை இவர் தொடர்கிறார். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதும் “வைகோ பல இடங்களில் அனுமதியின்று ஹோர்டிங் வைத்ததனால அவர்மீது வழகு போடப்போறேன்” என்றார். ஏற்கெனவே அஇஅதிமுக, திமுக, தேமுதிக என்று கட்சி வித்தியாசம் இன்றி வழக்கு தொடுத்துள்ளார்.

இவர் தொடுத்த வழக்குகளில் சகாயம் வழக்கு மிக முக்கியமானது. தொடர்ந்து சகாயம், அன்ஷுல் மிஸ்ரா என்று மதுரை கலெக்டர்கள் கிரானைட் முறைகேடுகள் குறித்து அறிக்கைகள் அனுப்பியபின், அவர்கள் மர்மமான முறையில் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அதனை அடிப்படையாக வைத்து ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். உயர்நீதிமன்றம் சகாயத்தின் தலைமையில் இந்தப் பிரச்னைகளை ஆராயவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்கிறது. ராமசாமி கேவியட் மனு தாக்கல் செய்கிறார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்கிறது. தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது. கோர்ட் தமிழக அரசுமீதே அபராதம் விதிக்கிறது. இன்று சகாயம் ஐ.ஏ.எஸ் முழுமையான அதிகாரத்தோடு முறைகேடுகளை விசாரிக்கப் போகிறார்.



ஒருமுறை கருணாநிதி ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குபோடக் கிளம்புகிறார். காவல்துறை ஏவி விடப்பட்டு அவர் பொய் வழக்கில் ரயிலிலிருந்து கைதுசெய்யப்படுகிறார். சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்கப்படாமல், அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மேஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்படுகிறார். வெள்ளிக்கிழமை இரவு. மேஜிஸ்திரேட் தானே ஒரு பேப்பரை அவரிடம் கொடுத்து அதில் “எனக்கு பெயில் கொடுங்கள்” என்று எழுதி வாங்கி திங்கள் அன்று பெயில் கொடுத்து செவ்வாய் விடுவிக்கப்படுகிறார். அந்தக் காவல்துறை அதிகாரிமீது வழக்கு தொடுக்கிறார் ராமசாமி. மூன்றாண்டுகள் கழித்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் வற்புறுத்தலின்பேரில் அந்த அதிகாரி மன்னிப்பு கோருகிறார்.

இப்போது அஇஅதிமுக ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று வழக்கு தொடுக்க அடுத்த வாரம் தில்லி செல்வதாக என்னிடம் சொன்னார் இவர்.

கொஞ்சம் அதீதமான ஆசாமிதான். ஆனால் சட்ட விதிமீறல்கள் என்றால் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடத் தயாராக உள்ளார். தன் வழக்குகளைத் தானே வாதாடுகிறார். கோர்ட் ஸ்டாம்ப் டியூட்டி தவிர ஒரு பைசா செலவு செய்வதில்லை இவர். சில வழக்கறிஞர்கள் இப்போது இவர் சார்பாக வாதாட வருகிறார்கள். காசு வாங்கிக்கொள்ளாமல். மனுவை இவரே தயாரிக்கிறார். இவருக்கு அலுவலகம் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. கணினி, பிரிண்டர் எல்லாம் இலவசமாகக் கிடைத்துள்ளது. சில உணவகங்கள் இவருக்கு தினமும் இலவசமாக உணவு கொடுத்துவிடுகின்றன. இவருக்கு மட்டுமல்ல, இவருடன் செல்வோர் அனைவருக்கும் அந்த உணவகங்களில் உணவு இலவசம். இவருக்கு வாகனம் சில வியாபாரிகளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரும் ஒரு பைசா வாங்காமல் தினமும் வேலைக்கு வந்துசெல்கிறார்.

இவர்மீதான தாக்குதல்கள் காரணமாக, இவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் காவல் தரப்பட்டுள்ளது.

விகடன் பிரசுரம் இவருடைய வாழ்க்கையை ‘ஒன் மேன் ஆர்மி’ என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.



82 வயதில் இவ்வளவு சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கும் ஒரு நபரை நான் வேறு எங்கும் கண்டதில்லை. சட்டம் குறித்தும் அரசியலமைப்பு ஷரத்துகள் குறித்தும் இவர் தானாகவே படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறார். தன்னைப் போலவே இன்னும் சில இளைஞர்களை, முக்கியமாகப் பெண்களை தயார் செய்துகொண்டிருக்கிறார். ஃபாத்திமா என்ற அப்படிப்பட்ட ஒரு பெண்ணை என்னிடம் அறிமுகப்படுத்தினார் ராமசாமி.


அபூர்வமான மனிதர். நாங்கள் பேசியதில் ஒருசில பகுதிகள் மட்டும்தான் ராஜபாட்டை நிகழ்ச்சியில் வந்துள்ளது.

முழுமையாகப் பாருங்கள்.


- Badri Seshadri - http://www.badriseshadri.in/2014/11/blog-post_10.html

Infolinks

ShareThis