Monday, December 8, 2014

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள்

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?



Posted Date : 20:18 (08/12/2014)


Last updated : 20:18 (08/12/2014)
Source: vikatan.com
ந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம்.

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.
3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.
6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.
7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.
13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.
14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.
15. கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.

-இ.கார்த்திகேயன்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

http://news.vikatan.com/article.php?module=news&aid=35904&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1


Saturday, November 29, 2014

பத்ரி சேஷாத்ரி: பிகாரி

பத்ரி சேஷாத்ரி: பிகாரி:



        ஞாயிறு மதியம் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னைக்கு குருவாயூர் விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. முன்பதிவு கேரேஜ் ஒன்றில் 96 பேர் உட்காரலாம். ஆனால் உள்ளே அதற்குமேல் நூறு பேர் நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு கேரேஜிலும் இதுதான் நிலைமை. ஏறி என் இடத்தில் உட்கார்ந்திருந்தவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்தேன். நிற்க, நகர துளிக்கூட இடம் இல்லை. சீட் இல்லாமல் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும், நிற்கும் எல்லோரும் இளைஞர்கள். ஆண்கள். எல்லோரும் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் அழுக்கு உடையில். பலர் கிழிந்த உடைகளில். எல்லோரிடம் முதுகில் மாட்டும் பை ஒன்று. பலர் முகத்தில் தூக்கம். உடல் சோர்வு.

கையோடு கொண்டுவந்திருக்கும் கிண்டிலில் ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். திடீரென ‘பை ஆர் ஸ்கொயர்ட்’ என்றான் ஒருவன். இல்லை ‘டூ பை ஆர்’ என்றான் இன்னொருவன். அவர்கள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். என் உடைந்த இந்தியில் அருகில் நிற்கும் இருவருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அவர்கள் அனைவரும் பிகாரின் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள். திருச்சியில் ரயில்வே தேர்வு ஒன்றை எழுத வந்திருந்தார்கள். தேர்வைக் காலையில் எழுதிவிட்டு இப்போது மீண்டும் ஊர் திரும்புகிறார்கள். சென்னை போய், அங்கிருந்து எதோ ஒரு ரயிலைப் பிடித்து இதோபோல் தொத்தி, கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு பாட்னா சென்று அங்கிருந்து அவரவர் ஊர் செல்லவேண்டும்.

தென்னக ரயில்வேயில் கேங்மேன்/சிக்னல் ஊழியர் குரூப் டி தேர்வாம். ஒருவரிடமிருந்து தேர்வுத் தாள் வாங்கிப் பார்த்தேன். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வினாக்கள் இருந்தன. 90 நிமிடங்கள், 100 கேள்விகள். ஒரு சில கணக்கு வினாக்கள். ஒரு சில பொது அறிவுக் கேள்விகள். கடைசிக் கேள்வி ‘இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் யார்?’ என்றிருந்தது. இதில்தான் ஒரு கேள்வி வட்டத்தின் சுற்றளவு அல்லது பரப்பளவு என்ன என்று இருக்கவேண்டும்.

நான் பேசியவர்கள் அனைவருமே பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். ஒருவர் கையில் ஆண்டிராய்ட் ஃபோனில் http://www.onlinetyari.com/ என்ற தளத்தின் குறுஞ்செயலி ஒன்றை வைத்திருந்தார். அதிலிருந்து (இந்தியிலான) மல்ட்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு விடை தட்டி, சரியா தவறா என்று பார்த்துக்கொண்டே இருந்தார். அடுத்த பரீட்சைக்குத் தயாராகிறாராம்.

படித்த இளைஞர்களுக்கு பிகாரில் உருப்படியான வேலை ஒன்றுமில்லை. எனவே சில ஆயிரம் கிமீ தாண்டி வந்து ரயில்வே ஸ்டேஷனிலேயே தங்கி பரீட்சை எழுதி, என்ன வேலை கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

பிகார் அரசியல் குறித்தும் தமிழகம் குறித்தும் என்னால் முடிந்த இந்தியில் அவர்களுடன் பேசினேன். அவர்களுக்கு இந்தி தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. நிதீஷ் நிஜமாகவே மாநிலத்தை முன்னேற்றியிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் நிதீஷும் லாலுவும் ஒன்றாகச் சேர்வது சாத்தியமில்லை என்றும் சொன்னார்கள். பிகார் பாஜகவில் உருப்படியான, நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தாக இருந்தது. சுஷீல் மோதிமீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்கள். அதே சமயம், மத்தியில் இருக்கும் கட்சியே மாநிலத்தில் வருவதுதான் உபயோகமானது என்றார்கள். எனவே பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள் என்றுதான் தெரிகிறது.

தமிழகத்தில் என்ன நடந்திருக்கிறது, பிகாரில் என்ன நடக்கவில்லை என்பது குறித்துக் கொஞ்சம் பேசினேன். (ஆனால் சரியான இந்தி வார்த்தைகள் தெரியாமல் ஆங்கிலம் கலந்துதான் பேசவேண்டியிருந்தது.) ஓர் இளைஞர் சொன்னார்: “பிகாரில் மக்கள் அரசை நம்பியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அரசு மக்களை நம்பியிருக்கிறது.”

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பிகார் போகவேண்டிய தூரம் மிக அதிகம் என்பது அம்மாநிலத்தின் படித்த இளைஞர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஏதேதோ காரணங்களுக்காக இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்கிறார்கள். அடிமட்ட வேலைகளிலிருந்து அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தலைவர்கள் அனைவரும் அவர்களை ஏமாற்றியுள்ளனர். பாஜகவும் நம்பத்தகுந்த வகையில் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் அக்கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரத் தயாராக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. பாஜகவும் பிகாரைக் காப்பாற்றவில்லையென்றால் இது மிகப்பெரும் மானுடச் சோகத்தில்தான் முடியும்.

Sunday, November 16, 2014

டீத்தூள்கள்


            நம்ம ஊர்ல என்னவோ டஸ்ட் டீ வாங்கி தான் டீ போடுறாங்க. டஸ்ட் டீ டீத்தூள்களின் வகையில லாஸ்ட் ஸ்டேஜ்.

common grades: 

1. Golden Tips
2. Silver Tips
3. Green Tea
4. OP (Broken Orange Pekoe
5. PEKOE ( a high-quality tea made from the downy tips of the young buds of the tea plant  / A grade of black tea consisting of the leaves around the buds)
6. BOP (Broken Orange Pekoe)
7. BOPF(Broken Orange Pekoe Fannings)
8. DEST


இம்புட்டு வெரைட்டி இருக்கு டீத்தூள்கள்ல.  டஸ்ட் டீ டீக்கடைகளில் உபயோகிப்பாங்க. ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.  நல்ல தரமான, ருசியான டீ வேணும்னா BOPF தான். இலங்கையில் எல்லாம் டீ பாக்கெட்கள் மேல எழுதியே இருக்கும். நம்ம ஊர்ல டார்ஜ்லிங் டீ, இப்படி பேர்தான் சொல்லிப்போம். 


sourcehttp://pudugaithendral.blogspot.in/2014/11/blog-post_15.html



Whole leaf grades[edit]

The grades for whole leaf orthodox black tea are: Ceylon orange pekoe (OP) grades'
  • OP1—slightly delicate, long, wiry leaf with the light liquor
  • OPA—bold, long leaf tea which ranges from tightly wound to almost open
  • OP—main grade, in the middle between OP1 and OPA, can consist of long wiry leaf without tips
  • OP Superior—primarily from Indonesia, similar to OP
  • Flowery OP—high-quality tea with a long leaf and few tips, considered the second grade in Assam, Dooars, and Bangladesh teas, but the first grade in China
  • F OP1—as above, but with only the highest quality leaves in the FOP classification
  • Golden Flowery OP1—higher proportion of tip than FOP top grade in Milima and Marinyn regions, uncommon in Assam and Darjeeling
  • Tippy Golden F OP—the highest proportion of tip, main grade in Darjeeling and Assam
  • TGF OP1—as above, but with only the highest quality leaves in the TGFOP classification
  • Finest TGF OP—highest quality grade (Note: "Special" is occasionally substituted for "Finest", with a number 1 at the end to indicate the very finest), often hand processed and produced at only the best plantations, roughly one quarter tips
  • SFTGFOP(1)—sometimes used to indicate the very finest
A joke among tea aficionados is that "FTGFOP" stands for "Far Too Good For Ordinary People".

Broken leaf grades[edit]

  • BT—Broken Tea: Usually a black, open, fleshy leaf that is very bulky. Classification used in Sumatra, Sri Lanka, and some parts of Southern India.
  • BP—Broken Pekoe: Most common broken pekoe grade. From Indonesia, Ceylon, Assam and Southern India.
  • BPS—Broken Pekoe Souchong: Term for broken pekoe in Assam and Darjeeling.
  • FP—Flowery Pekoe: High-quality pekoe. Usually coarser with a fleshier, broken leaf. Produced in Ceylon and Southern India, as well as in some parts of Kenya.
  • BOP—Broken Orange Pekoe: Main broken grade. Prevalent in Assam, Ceylon, Southern India, Java, and China.
  • F BOP—Flowery Broken Orange Pekoe: Coarser and broken with some tips. From Assam, Ceylon, Indonesia, China, and Bangladesh. In South America coarser, black broken.
  • F BOP F—Finest Broken Orange Pekoe Flowery: The finest broken orange pekoe. Higher proportion of tips. Mainly from Ceylon's "low districts".
  • G BOP—Golden Broken Orange Pekoe: Second grade tea with uneven leaves and few tips.
  • GF BOP1—Golden Flowery Broken Orange Pekoe 1: As above, but with only the highest quality leaves in the GFBOP classification.
  • TGF BOP1—Tippy Golden Flowery Broken Orange Pekoe 1: High-quality leaves with a high proportion of tips. Finest broken First Grade Leaves in Darjeeling and some parts of Assam.

Fannings grades[edit]

  • PF—Pekoe Fannings
  • OF—Orange Fannings: From Northern India and some parts of Africa and South America.
  • FOF—Flowery Orange Fannings: Common in Assam, Dooars, and Bangladesh. Some leaf sizes come close to the smaller broken grades.
  • GFOF—Golden Flowery Orange Fannings: Finest grade in Darjeeling for tea bag production.
  • TGFOF—Tippy Golden Flowery Orange Fannings.
  • BOPF—Broken Orange Pekoe Fannings: Main grade in Ceylon, Indonesia, Southern India, Kenya, Mozambique, Bangladesh, and China. Black-leaf tea with few added ingredients, uniform particle size, and no tips.

Dust grades[edit]

  • D1—Dust 1: From Sri Lanka, Indonesia, China, Africa, South America, and Southern India.
  • PD—Pekoe Dust
  • PD1—Pekoe Dust 1: Mainly produced in India.

Monday, November 10, 2014

டிராஃபிக் ராமசாமி

டிராஃபிக் ராமசாமி

Badri Seshadri - http://www.badriseshadri.in/2014/11/blog-post_10.html


                 தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு நிகழ்ச்சியை நான் கடந்த பத்து வாரங்களாகச் செய்துவருகிறேன். தமிழ்நாட்டின் ஒருசில பிரபலமானவர்களை, சுவாரசியமானவர்களை, சாதனையாளர்களைப் பேசவைக்கும் நிகழ்ச்சி. என் வேலை அவர்களைத் தூண்டி, அவர்களைப் பற்றி அவர்களையே சொல்லவைப்பது. இந்நிகழ்ச்சி பற்றி விலாவரியாக எழுதவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம் நான் சந்தித்த ஒரு நபர் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று என் வைராக்கியத்தைச் சற்றே தளர்த்தியிருக்கிறேன்.


 

டிராஃபிக் ராமசாமிக்கு 82 வயதாகிறது. இவருடைய பெயரை அவ்வப்போது பத்திரிகையில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆசாமி என்று கருதியிருக்கிறேன். இவர் ஏன் பல வழக்குகளைப் போடுகிறார் என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை. இவரைப் பின்னிருந்து இயக்குபவர்கள் யார், இவருடைய நோக்கம் என்ன என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் நேரடியாகச் செலவிட்ட இரு நாள்கள் என் மனத்தை வெகுவாக மாற்றிவிட்டது.

இவர் கொஞ்சம் கிறுக்குதான். இன்னமும் இவரை எது உந்துகிறது என்பது முழுமையாக எனக்குப் புரியவில்லை. ஆனால் இவருடைய வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.,

இவருடைய தந்தை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவருடைய உபநயன நிகழ்ச்சியின்போது, ராஜாஜி விருந்தினராக வந்திருக்கிறார். அப்போது ராஜாஜி கொடுத்த சில அறிவுரை இவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற ஒரு சிறு கரு அப்போதுதான் தோன்றியிருக்கிறது. சுமார் 14 வயதாகும்போது வயலில் அறுப்பு முடிந்து கையில் பத்து கிலோ அரிசியுடன் பேருந்தில் வந்துகொண்டிருந்தவரை தாசில்தார் ஒருவர் வழிமறித்து அரிசியைப் பறிமுதல் செய்திருக்கிறார். அப்போது அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்திருக்கிறது. ஆனால் பத்து கிலோவரை பெர்மிட் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். அரிசியைக் கொடுத்துவிட்டு வந்த ராமசாமி ஒரு 3 பைசா கார்டில் கலெக்டருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அதை வைத்து கலெக்டர் தாசில்தாரைப் பணி இடைநீக்கம் செய்ய, தாசில்தார் இவர் வீடுவரை வந்து அரிசியைக் கொடுத்து, கடிதம் எழுதி வாங்கிச் சென்று வேலையில் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இந்தப் புள்ளி மிகவும் முக்கியமானது. நியாயப்படி நடந்துகொண்டால் சட்டம் நமக்குத் துணை புரியும் என்ற எண்ணம் இவருக்குத் தோன்றியிருக்கிறது.

படிப்பு அதிகம் இல்லாத நிலையில் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி பி&சி மில்லில் ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் ஏ.எம்.ஐ.ஈ படித்து இஞ்சினியர் ஆகியிருக்கிறார். இவருக்குத் திருமணம் செய்ய இவர் தந்தை 1,500 ரூ வரதட்சிணை கேட்டிருக்கிறார். அதை எதிர்த்து, பணம் வாங்காமல் அதே பெண்ணை திருமணத்துக்குக் குறித்த நாளிலிருந்து மூன்று நாள்கள் கழித்து திருப்பதியில் மணம் செய்திருக்கிறார். தந்தை இவரையும் மருமகளையும் வீட்டில் சேர்க்கவில்லை.

பி&சி மில்லில் சம்பளத்தைக் குறைக்கவேண்டிய சூழல் வந்தபோது அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்று மும்பை டாடா மில்ஸில் வேலைக்குச் சேர இருந்தார். அப்போது இவர் மனைவியும் வேலையில் இருந்ததால், சென்னையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ள, முழுநேர சமூக சேவகராக ராமசாமி ஆகிறார்.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குசெய்வதைத் தன் பணியாக எடுத்துக்கொண்டார். அதிலிருந்துதான் அவருக்கு ‘டிராஃபிக்’ என்ற முன்னொட்டு கிடைத்தது. விகடனின் ஜூனியர் போஸ்ட் பத்திரிகைதான் அவருக்கு இந்தப் பட்டத்தைத் தந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தில்தான் இவர் காவல்துறையோடு மோத ஆரம்பிக்கிறார். காவலர்கள் மோட்டார் வாகன ஓட்டுனர்களிடமும் கடைக்காரர்களிடமும் லஞ்சம் வாங்குவதைக் கவனித்தவர் அதுகுறித்துப் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்திருக்கிறார். அதனால் காவலர்கள் அவர்மீது பொய் வழக்கு போட்டு ஏழெட்டு முறை சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஒருமுறை லாக்கப்பில் கட்டிவைத்து அடித்துள்ளார்கள். “போறவன் வர்ரவனெல்லாம் அடிப்பான்” என்றார் என்னிடம். நான்கைந்து நாள்கள் கழித்து பெயில் வாங்கிக்கொண்டு வெளியே வருவார். அப்போதுதான் லீகல் எய்ட்மூலம் வக்கீல்களைக் கொண்டு வாதாடுவது பற்றியெல்லாம் அறிந்திருக்கிறார். இம்மாதிரியெல்லாம் பொய் வழக்குகள் போட்டாலும் ஓய்ந்துபோகவில்லை ராமசாமி.

1990-களின் நடுப்பகுதியில்தான் இவர் நீதித்துறைக்கு ஒரு வழக்கை எடுத்துச் செல்கிறார். உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பாதையை காவல்துறை ஒருவழிப்பாதையாக மாற்றுகிறது. அவ்வாறு செய்த ஓராண்டுக் காலத்தில் சுமார் 22 பேர் விபத்தில் இறக்கின்றனர். அந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து ராமசாமி, ஒருவழிப் பாதை கூடாது என்று ஒரு பொதுநல வழக்கைக் கொண்டுவருகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அப்போது தொடங்கி இன்றுவரை பல முக்கியமான வழக்குகளை இவர் போட்டுள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார்.

மீன்பாடி வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று இவர் போட்ட வழக்கு முக்கியமானது. உரிமம் இல்லாத அந்த வண்டிகள் மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் வருவதில்லை. எனவே எந்த வண்டிகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு அல்லது பிற இழப்புக்குக் காப்பீடு கிடைக்காது. ராமசாமி வம்படியாக இந்த வண்டிகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரவில்லை. ஒன்று தடை செய்யவேண்டும் அல்லது இந்த வண்டிகளுக்கு உரிமம் தரப்படவேண்டும், காப்பீடும் வேண்டும் என்றுதான் வழக்காடுகிறார். அதேபோலத்தான் நடைபாதைக் கடைகள் தொடர்பான வழக்கும். நடைபாதைக் கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. அவை அகற்றப்படவேண்டும். அதே நேரம் இதனால் பாதிக்கப்படும் கடைக்காரர்களுக்கு வேறு இடம் தரப்படவேண்டும். இவ்வாறுதான் அவருடைய வழக்குகள் இருக்கின்றன.

எல்லாவிதக் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் மீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடுகளின்றி வைக்கப்படும் அரசியல் விளம்பரத் தட்டிகள், ஊருக்கு நடுவே வைக்கப்படும் வெடிக் கடைகள் போன்றவற்றுக்கு எதிராக ராமசாமி தொடுத்துள்ள வழக்குகள் மிக முக்கியமானவை. இந்த வழக்குகளை இவர் தொடர்கிறார். நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோதும் “வைகோ பல இடங்களில் அனுமதியின்று ஹோர்டிங் வைத்ததனால அவர்மீது வழகு போடப்போறேன்” என்றார். ஏற்கெனவே அஇஅதிமுக, திமுக, தேமுதிக என்று கட்சி வித்தியாசம் இன்றி வழக்கு தொடுத்துள்ளார்.

இவர் தொடுத்த வழக்குகளில் சகாயம் வழக்கு மிக முக்கியமானது. தொடர்ந்து சகாயம், அன்ஷுல் மிஸ்ரா என்று மதுரை கலெக்டர்கள் கிரானைட் முறைகேடுகள் குறித்து அறிக்கைகள் அனுப்பியபின், அவர்கள் மர்மமான முறையில் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அதனை அடிப்படையாக வைத்து ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். உயர்நீதிமன்றம் சகாயத்தின் தலைமையில் இந்தப் பிரச்னைகளை ஆராயவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறது. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்கிறது. ராமசாமி கேவியட் மனு தாக்கல் செய்கிறார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்கிறது. தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது. கோர்ட் தமிழக அரசுமீதே அபராதம் விதிக்கிறது. இன்று சகாயம் ஐ.ஏ.எஸ் முழுமையான அதிகாரத்தோடு முறைகேடுகளை விசாரிக்கப் போகிறார்.



ஒருமுறை கருணாநிதி ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குபோடக் கிளம்புகிறார். காவல்துறை ஏவி விடப்பட்டு அவர் பொய் வழக்கில் ரயிலிலிருந்து கைதுசெய்யப்படுகிறார். சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்கப்படாமல், அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மேஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்படுகிறார். வெள்ளிக்கிழமை இரவு. மேஜிஸ்திரேட் தானே ஒரு பேப்பரை அவரிடம் கொடுத்து அதில் “எனக்கு பெயில் கொடுங்கள்” என்று எழுதி வாங்கி திங்கள் அன்று பெயில் கொடுத்து செவ்வாய் விடுவிக்கப்படுகிறார். அந்தக் காவல்துறை அதிகாரிமீது வழக்கு தொடுக்கிறார் ராமசாமி. மூன்றாண்டுகள் கழித்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் வற்புறுத்தலின்பேரில் அந்த அதிகாரி மன்னிப்பு கோருகிறார்.

இப்போது அஇஅதிமுக ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று வழக்கு தொடுக்க அடுத்த வாரம் தில்லி செல்வதாக என்னிடம் சொன்னார் இவர்.

கொஞ்சம் அதீதமான ஆசாமிதான். ஆனால் சட்ட விதிமீறல்கள் என்றால் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடத் தயாராக உள்ளார். தன் வழக்குகளைத் தானே வாதாடுகிறார். கோர்ட் ஸ்டாம்ப் டியூட்டி தவிர ஒரு பைசா செலவு செய்வதில்லை இவர். சில வழக்கறிஞர்கள் இப்போது இவர் சார்பாக வாதாட வருகிறார்கள். காசு வாங்கிக்கொள்ளாமல். மனுவை இவரே தயாரிக்கிறார். இவருக்கு அலுவலகம் இலவசமாகத் தரப்பட்டுள்ளது. கணினி, பிரிண்டர் எல்லாம் இலவசமாகக் கிடைத்துள்ளது. சில உணவகங்கள் இவருக்கு தினமும் இலவசமாக உணவு கொடுத்துவிடுகின்றன. இவருக்கு மட்டுமல்ல, இவருடன் செல்வோர் அனைவருக்கும் அந்த உணவகங்களில் உணவு இலவசம். இவருக்கு வாகனம் சில வியாபாரிகளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரும் ஒரு பைசா வாங்காமல் தினமும் வேலைக்கு வந்துசெல்கிறார்.

இவர்மீதான தாக்குதல்கள் காரணமாக, இவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் காவல் தரப்பட்டுள்ளது.

விகடன் பிரசுரம் இவருடைய வாழ்க்கையை ‘ஒன் மேன் ஆர்மி’ என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளது.



82 வயதில் இவ்வளவு சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கும் ஒரு நபரை நான் வேறு எங்கும் கண்டதில்லை. சட்டம் குறித்தும் அரசியலமைப்பு ஷரத்துகள் குறித்தும் இவர் தானாகவே படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறார். தன்னைப் போலவே இன்னும் சில இளைஞர்களை, முக்கியமாகப் பெண்களை தயார் செய்துகொண்டிருக்கிறார். ஃபாத்திமா என்ற அப்படிப்பட்ட ஒரு பெண்ணை என்னிடம் அறிமுகப்படுத்தினார் ராமசாமி.


அபூர்வமான மனிதர். நாங்கள் பேசியதில் ஒருசில பகுதிகள் மட்டும்தான் ராஜபாட்டை நிகழ்ச்சியில் வந்துள்ளது.

முழுமையாகப் பாருங்கள்.


- Badri Seshadri - http://www.badriseshadri.in/2014/11/blog-post_10.html

Saturday, October 11, 2014

Kailash Satyarthi-10 Things That You Need To Know About The Indian Who Just Won The Nobel Peace Prize

10 Things That You Need To Know About The Indian Who Just Won The Nobel Peace Prize 
If you haven't heard it already, India-based Kailash Satyarthi and Pakistan-based Malala Yousafzai just got awarded the Nobel Peace Prize for 2014 for their struggle against the suppression of children and young people and for the right of all children to education by the Norwegian Nobel Committee .

Everybody knows who Malala is, but do you have any idea about the awesome things that Satyarthi has done? 
Here are 10 things that you must know about him:

1. He was born on January 11, 1954, in Vidisha, located near Bhopal, Madhya Pradesh.


2. 60-year-old Satyarthi is the 8th Nobel Laureate born in India.

3.  He gave up a promising career as an electrical engineer when he was all of 26 to dedicate his life to help kids forced into slavery.


4. The founder of Bachpan Bachao Andolan, he has helped free around 80,000 children from the clutches of slavery and child labour.


5. He also rescues women from enslavement in filthy factories with deplorable conditions and sexual assault. 


6. He created "Rugmark" which certifies that carpets and rugs sold abroad aren't made by child labourers. 

The movement succesfully spread awareness about child rights globally.

7. He is the face of Global March Against Child Labor - a large group of as many as 2000 social-purpose organizations and unions active in 140 countries.


8. He heads the South Asian Coalition on Child Servitude (SACCS) which rallies national and international institutions and NGOs to bring pressure on governments, manufacturers, and importers to stop exploiting illegal labor.


9. Despite facing false charges and death threats for his work, he continued to work for his vision.

Two of his colleagues have even been murdered.

10. His work has been appreciated and honoured earlier as well.

He received a grant from the Skoll Foundation, the Freedom Award, the Robert F. Kennedy Human Rights Award, and the US State Department's Heroes Acting to End Modern-Day Slavery award. 
His organisation Bachpan Bachao Andolan made this touching video.






We congratulate both Kailash Satyarthi and Malala Yousafzai for winning the honour.


Thanks - 
Isha Jalan
Isha Jalan

Saturday, September 27, 2014

கற்றலினால் ஆன பயன் என்ன?





கற்றலினால் ஆன பயன் என்ன?






..

எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..
கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..
அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..
விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..
டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய்
சந்திக்கும்பொழ
ுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும்
நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக்கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும்
பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள்
யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன?
தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில்
கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன?
தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல்,
வக்கனையாய் மனப்பாடமாய்
அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில்

எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?






..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய்
எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட
வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர்கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத்
தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன்
சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..
10நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள்
மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம்கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.
பார்வையாளர்கள் விடவில்லை.தொடர்ந்து கல்லெறிகிறார்கள்.
கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த
வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும்
இறையைத் தூக்கிக்
கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என
முடிவு செய்து அவனுடைய கழுத்தைக்
கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில்
யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி,
அதில் நெருப்பு வைத்து, அதை அந்த
வாலிபனிடத்தில் எறிந்திருந்தால்
புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட
வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது,
வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில்
கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..
மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..
சிஙகமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக
இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற
அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால்
எனக்கென்ன பயன்?

அந்த விலங்குகளின் கண்களை நம்
கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும்
ஓங்கித் தாக்கினால்
அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும்
தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன்
கண்களில் தூவினால் போதும் அவை அந்த
இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான்
முயற்சிக்கும்.
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்..
பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக்
கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும்,
ஆஸ்திரேலியாவிலும் என்ன
தோண்டியெடுக்கிறார்கள்
என்பதை கற்றுக்கொடுப்பதை விட..
வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக்
கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின்
உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?
சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப்
பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன?
நமக்கான உரிமைகள் என்ன? காவல்
நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்
கொள்வது? விஷக்கடிகளில் எப்படித்
தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன
செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது?
எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..
பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?
கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?
மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய்
இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத
கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல்
துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான்
வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன்
வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..
என்னை.. எங்களை மன்னித்து விடு..!







நன்றி ,எழுதிய அந்த மனிதருக்கு....

Wednesday, September 10, 2014

காட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால்



நண்பர்களே நீங்கள் வாகனத்தில் காட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால் என்ன செய்வீர்கள் 

இந்ந காணொளியில் உள்ளவர் யானையை ஏமாற்றி தப்பித்து வாகனத்துடன் செல்வதை பாருங்கள்


Manager always a Manager!


         A wealthy manager was riding in his limousine when he saw two men along the roadside eating grass. Disturbed, he ordered his driver to stop and he got out to investigate.

He asked one man, "Why are you eating grass?"

"We don't have any money for food," the poor man replied. "We have to eat grass."

"Well then, you can come with me to my house and I'll feed you," the manager said.

"But sir, I have a wife and two children with me. They are over there, under that tree."

        "Bring them along," the manager replied. Turning to the other poor man he stated, "You come with us too."
          The second man, in a pitiful voice then said, "But sir, I also have a wife and SIX children with me!"
"Bring them all, as well," the manager answered.


            They all entered the car, which was no easy task, even for a car as large as the limousine. Once underway, one of the poor fellows turned to the manager and said, "Sir, you are too kind. Thank you for taking all of us with you."


The manager replied, "Glad to do it. You'll really love my place... the grass is almost a foot high!"




Infolinks

ShareThis