Sunday, November 18, 2012

மாமாவின் மருமகனும், மருமகளின் மருமகனும்

சுதந்திரம் என்பது, அன்னியரை விரட்டும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் நிகழ்ந்துவிடாது. நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்து, ஏழை, எளிய மக்களை ஏமாற்றாமல், ஆட்சி அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும். இதை புரிந்து செயல்பட்டவர்களில் ஒருவர் தான், பெரோஸ் காந்தி. இந்திராவும், அவரின் வழிவந்த நண்டு, சுண்டைக்காய்களும் தன் பெயருக்கு பின்னால், "காந்தி' என்று சேர்க்க காரணமாக இருந்தவர், பெரோஸ் காந்தி.சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பலமுறை சிறை சென்றவர். நேரு மாமாவின் அரசியல் தவறுகளை, சுட்டிக் காட்ட சிறிதும் அஞ்சாத மருமகன்.

                          கடந்த 1942-மார்ச், 26ம் தேதி, இந்திராவை, நேருவின் எதிர்ப்பையும் மீறி, திருமணம் செய்த பெரோஸ் காந்தி, அதே ஆண்டு நடைபெற்ற, "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில், தன் மனைவி இந்திராவுடன் கலந்து கொண்டார். 1942- செப்., 10ம் தேதி கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, அலகாபாத்தில் உள்ள, "நெய்னி' மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

                         பின், 1952ல், சுதந்திர இந்தியாவில் நடைப்பெற்ற முதல் பொது தேர்தலில், "ரேபெரலி' தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். சுதந்திரம் அடைந்தபின், தொழில் அதிபர்கள் பலர், அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். காரணம், பல சலுகைகளை அனுபவிக்க, இந்த அரசியல் தொடர்பு பெரிதும் உதவும் என்பதால் தான். தன் மாமா நேருவின் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டத் துவங்கினார் பெரோஸ் காந்தி.
        
                    ராம் கிருஷ்ணன் டால்மியா எனும், கோடீஸ்வரர், வங்கி மற்றும் காப்பீடு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக எப்படி மாறினார் என்றும், மேலும் ராம் கிருஷ்ணன் டால்மியா கைப்பற்றியுள்ள, "பென்னட் அண்ட் கோல்மன்' நிறுவனத்திற்கு, நிதியுதவி செய்ய பொது நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை, விளக்கமாக பார்லிமென்டில் பேசினார்.
காப்பீடு நிறுவனங்களின் ஊழலை, பெரோஸ் காந்தி வெளிபடுத்திய பின், வேறு வழி இல்லாமல், அப்போது இந்தியாவில் இருந்த, 245 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் கீழ் கொண்டுவர, 1957 ஜூன் 19ல், சட்டம் இயற்றப்பட்டது.
                       
இது இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் பிறந்த கதை. இன்று அன்னிய நேரடி முதலீடு என்று தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் காப்பீடு தொழிலை துவங்கிவிட்டன. காரணம், தேன் வடியும் இடம், தேன் எடுப்பவனுக்கு தெரியாமலா இருக்கும்!
                            
                          மருமகன் ஊழலை சுட்டிக்காட்ட, மாமா நேரு, காப்பீடு நிறுவனங்களை தேசிய மயமாக்கினார். 1957, டிச., 16ம் நாள், இந்திய பார்லிமென்ட்டின் மக்களவையில், பெரோஸ் காந்தி பேசியதை மறக்க முடியாது. இதோ...
                   
                          "மிக பெரிய பலம் வாய்ந்த காப்பீடு நிறுவனமான, இந்திய ஆயுள் காப்பீடு கழகம், இந்த பார்லிமென்ட்டினால் உருவாக்கப்பட்டது. அதை எவ்வாறு விழிப்புடன் நடத்த வேண்டும், இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பணம் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என பார்ப்போம்' என்ற தன் உரையின் மூலம், ஹரிதாஸ் முந்திரா ஊழலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார், பெரோஸ் காந்தி.

                     
             ஹரிதாஸ் முந்திரா என்பவர், கோல்கட்டா நகர மின் விளக்கு வியாபாரி. 1956ல் மும்பை பங்கு சந்தையில், போலி பங்குகளை விற்பனை செய்தவர். ஹரிதாஸ் முந்திராவின், ஆறு நிறுவனத்தின் பங்குகளை, 1.25 கோடி ரூபாய்க்கு வாங்கி, இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் முதலீடு செய்தது. அரசியல் வாதிகளின் துணையோடு நடைப்பெற்ற இந்த முதலீட்டில், இந்திய ஆயுள் காப்பீடு கழகம் தன் பணத்தை இழந்தது. பொது மக்கள் பணம் இவ்வாறு விரயம் செய்யப்பட்டதை, பெரோஸ் காந்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
                       தன் அமைச்சரவைக்கு, இப்படி ஒரு களங்கம் வரும் என, பிரதமர் நேரு கனவில் கூட எண்ணிப்பார்த்திருக்க மாட்டார். வேறு வழியின்றி, மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சி.சாக்லா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. பொது மக்கள் முன்னிலையில், இந்த விசாரணை குழு தன் விசாரணையை துவங்கியது. 24 நாட்களில், இந்த குழு தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
                     "எனக்கு தெரியாமல், இந்த ஊழல் நடந்துவிட்டது' என கூறி, மத்திய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாசாரியார், பதவியை ராஜினாமா செய்தார்.
டில்லியில், ஆடம்பர விடுதியில் கைது செய்யப்பட்ட ஹரிதாஸ் முந்திரா சிறையில் தள்ளப்பட்டார். 24 நாட்களில், ஒரு குழு விசாரணையை முடித்து விட்டது.

                 இன்று, எந்த அளவிற்கு ஊழல் நடந்து உள்ளது என, கண்டறியவே, பல மாதங்கள் உருண்டு ஓடி விடுகிறது. மதுரையில், மலையை எவ்வளவு குடைந்து பதுக்கி உள்ளனர் என, கண்டறியும் முன்பே, ஆட்சி முடிவடைந்து விட்டாலும், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால், அன்று நாடு நல்லவர்கள் கையில் இருந்தது.
              
              ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று, எல்லாராலும் பாராட்டப்பட்ட பெரோஸ் காந்தி, பார்லிமென்ட்டில் மத்திய மண்டபத்தில் அமர்ந்து, எல்லாருடனும் பேசும் இடம், "பெரோஸ் கார்னர்' என்று அழைக்கப்பட்டது. டாடாவின், "டாடா மோட்டார்ஸ்' எனப்படும் டெல்கோ நிறுவனம், ஜப்பானில் ரயில் இன்ஜின்கள் வாங்கி, அதிக லாபம் சம்பாதிப்பதால், அதை தேசிய மயமாக்க வேண்டும் என, பெரோஸ் காந்தி வலியுறுத்தினார். தன் "பார்சி' இனத்தவராக டாடா இருந்தபோதும், நாட்டின் நன்மையே முக்கியம் என்று, பெரோஸ் காந்தி கருதினார்.

ஆனால் இன்று...
போபால் விஷவாயு வழக்கில், குற்றவாளி தப்பி ஓட தனி விமானம் தரப்பட்டது.

இத்தாலி ஆயுத தரகன் மீது இருந்த, "ரெட் கார்னர்' நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டு, வழக்கை மத்திய புலனாய்வு துறை முடித்து கொண்டது.

 கழிவு பொருள்கள் என்று, பல கலை பொருள்கள் நாடு கடத்தப்பட்ட வழக்கு, வாய் மூடி உள்ளது.

 ஸ்காட்லாந்து நாட்டு பெண்மணி மவுலின், அவரின் இந்திய கணவருக்கு பிறந்தவர், ராபட் வதேரா.

 இத்தாலி நாட்டு பெண்மணி, பெயர் மாற்றிய சோனியா, அவரின் இந்திய கணவருக்கு பிறந்தவர் பிரியங்கா.

 அந்த இரண்டு வெளிநாட்டு பெண்மணிகளின் குடும்பத்தை இணைக்க உதவி புரிந்தவன், "போபார்ஸ்' தரகர் குத்ரோச்சி.


        இன்னும், "பிரியங்கா காந்தி' என்று தான் அழைக்கப்படுகிறார். பிரியங்கா வதேராவாக மாறவில்லை. "காந்தி' என்ற குடும்ப பெயரை பயன்படுத்துவதால், கரன்சி நோட்டில் உள்ள மகாத்மா காந்தியை விட்டு வைத்தனர். ஜஹாங்கீர் மனைவி நூர்ஜஹான் போல, அதிகாரத்தை பயன்படுத்தும் இவர்கள் பெயரில், நாணயங்களையும், கரன்சியையும் அச்சிட்டு இருப்பர். இன்னும் பல வெளிநாட்டவர், இந்தியாவை ஆட்சி செய்வது, மகாத்மா காந்தி குடும்பம் தான் என, எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் சுவீகார புதல்வர்கள், இவர்கள் மட்டும் தான்; யாராலும் தட்டிக் கேட்க முடியாது.

         
பிக்பாக்கெட் அடிப்பவன், ஒருவனின் பர்சில் உள்ள பணத்தை மட்டும் அடிக்கிறான். கொள்ளை அடிப்பவன், ஒருவனின் வாழ்நாள் உழைப்பு, சேமிப்பை அடிக்கிறான். ஆனால், லஞ்சம், ஊழல் என்று சம்பாதிப்பவன், ஒரு நாட்டையும், வருங்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தையும் சூறையாடுகின்றான்.

                "சுதந்திரம் எனும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும்' என, காந்தி விரும்பினார். ஆனால், காங்கிரஸ் பெயரை சொல்லி, மகாத்மாவிற்கு தொடர்பு இல்லாத இந்த, "காந்திகள்' வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

                கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தை, இந்த மண்ணில் அனுமதித்ததால், வியாபாரம் எனும் போர்வையில், அரசியல் மற்றும் ஆட்சி வேர்விட்டது. அதை அகற்ற, 300 ஆண்டுகள் போராட வேண்டிவந்தது.
இன்று, அன்னிய முதலீடு என்று, பல துறைகளில், பல நிறுவனங்கள், தங்கள் கடையை திறந்து விட்டனர். நாளை முதலீட்டை விட, பலமடங்கு லாபத்தையும் எடுத்து செய்வர்.

அன்று, மாமாவும், மருமகனும் அன்னியரை விரட்டி, மக்களுக்காக பாடுபட்டனர்.
இன்று, மருமகளும், அவரின் மருமகனும், அன்னிய முதலீட்டிற்கு அடிமையாக்கி, மக்களை பாடாய் படுத்த போகின்றனர்.

"காந்தி' எனும் பெயரை பயன்படுத்தி, தன் சந்ததிகள் இப்படி ஊழல் புரிவர் என்று பெரோஸ் காந்தி கனவு கூட கண்டிருக்க மாட்டார். அவரின் ஆன்மா, சத்தியமாக அழுதுகொண்டு தான் இருக்கும்.

எஸ்.எ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்

source : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=587679

Wednesday, October 10, 2012

Touch Screen

How Does a Touch Screen Work

 

Ever wonder why some touch screen phones cost more than others? Or why you can't seem to get the touch screen on your smartphone to work if you're wearing a glove? Most people don't know that there are three different types of touch screen technologies available: resistive, capacitive, and infrared. Learn about the different benefits and capabilities to make sure you get the touch screen phone you're looking for. 

 

 

 




Monday, September 17, 2012

அறிஞர் அண்ணாவும் சிவசேனை பால்தாக்ரேவும்!



அண்ணா அவர்கள் 1968ல்  அமேரிக்க பயணத்தின் போது "யேல்" பல்கலைகழகத்தில் பிரமாதமாக பேசினார், அவரது ஆங்கில புலமை கேட்டு அங்கே வியந்தனர். "Because என்ற சொல்லை ஒரு வாக்கியத்தில் மூன்று முறை தொடர்சியாக வர வழைக்க இயலுமா என கேட்டமைக்கு அண்ணா அவர்கள் ' No sentence begins with because, because, because is a conjuction"  என சொன்னார், என்றெல்லாம் இங்கே சரித்திரம் உள்ளது. ஆனால் அவர் "யேல்" பல்கலை கழகம் போவதற்கு முன்பாகவே ஹவாய் தீவில் கலந்து கொண்ட ஒரு பல்கலைகழகத்தில் அவரை நோண்டி நொங்கு எடுத்து விட்ட விஷயம் உங்களுக்கு தெரியுமா?

அறிஞர் அண்ணா அவர்கள் அமேரிக்கா சென்ற போது ஹவாய் பல்கலைகழக கிழக்கு மேற்கு அமைப்பின் சார்பில் ( east west center) அளிக்கப்பட்ட வரவேற்பின் போது இந்திய மாணவர்களின் (கவனிக்க தமிழக மாணவர்கள் இல்லை இந்திய மாணவர்கள்) கேள்விக்கு அளித்த பதிள்களின் தமிழாக்கம் இவைகள்!

கேள்வி: அமேரிக்காவை சுற்றி ப்பார்த்த போது உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் என்ன?

அண்ணா: இந்த நாட்டில் இயற்கை தந்திருக்கும் செல்வம் மட்டும் அல்ல, மனிதர்கள் தங்கள் முயற்சியினால் பல்வேறுவிதமான ஆற்றல்களினால் அடைந்த முன்னேற்றமும் அவர்களுடைய வெற்றியும் என் உள்ளத்தை தொடும் முதல் எண்ணம் ஆகும்.

கேள்வி: இந்திய ஜனநாயகத்தின் தலைவிதி என்ன?

அண்ணா: இந்தியர்கள் எப்போதும் தலைவிதியையே சரணடைகின்றனர். ஆனால் இந்திய ஜனநாயகம் பற்றி பேசுகையில் தலைவிதி என்னும் சொல்லை நீங்கள் பயன் படுத்துவது சரியில்லை என நான் கருதுகிறேன். இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஒரு விதமான அபாயமும் கிடையாது. ஏனனில் நம்முடைய பண்பாடு ஜனநாயக பண்பாடு ஆகும். இப்பண்பாட்டால் நம் அன்றாட வாழக்கையில் கூட ஜனநாயகம் இருக்கின்றது என சொல்லலாம். இந்தியா தான் உலகிலேயே மிகப்பெரிய, புதிய மற்றும் ஏழ்மையான ஜனநாயக நாடு. இருந்த போதிலும் நான்கு பெரிய தேர்தல்களை வெற்றிக்கரமாக நடத்தி இருக்கிறோம். இந்தியாவை பற்றி அறிந்துள்ள பல மேநாட்டார்  தேர்தல் சமயத்தில் பயங்கர போராட்டங்களும் புரட்சிகளும், ரத்தம் சிந்துதலும் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஆங்காங்கே சில மோதல்கள் இருந்த போதிலும் நான்கு தேர்தலில்களிலும் ஏற்பட்ட எல்லா சேதங்களையும் கூட்டிப்பார்த்தால் அமேரிக்காவில் ஒரு வருடத்தில் உண்டாகும் விடுமுறை விபத்துகளை விட மிகக்குறைவாக உள்ளன. ஜன நாயகத்தை கையாள்வதில் நமக்குள்ள ஆற்றல் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டு விடவும் வேணடாம். ஜனநாயம் பற்றி மெத்தனமாகவும் இருந்து விட வேண்டாம்.

கேள்வி: நீங்கள் இது வரை நடந்த 4 தேர்தல்களும் வெற்றியாக முடிந்ததாக சொன்னீர்கள், அது வெற்றிகரமாகவும் திட்டமிடப்பட்டும் முன் யோசனையோடும், ஒழுங்காக நடந்ததாக எண்ணுகிறீர்களா? முக்கியமாக காஷ்மீரில் நடந்த தேர்தலை பற்றி பல்தரப்பட்ட பேச்சுகள் இருந்தன. மேலும் 1967க்கு முன் நடந்த  3 தேர்தல்களும் ஒழுங்காக நடக்கவில்லை என்று நாம் எண்ண எல்லா காரணங்களும் இருக்கே அய்யா?

அண்ணா: தேர்தல்கள் நாணயம் இல்லாமல் இருக்கின்றன என்னும் குற்றச்சாட்டு எல்லா நாடுகளிலும் எல்லா பகுதிகளிலும் இருக்க கூடிய குற்றச்சாட்டு தான். முதல் 2 தேர்தல்களிலும் நாணயம் சற்று குறைவாக இருந்தது உண்மையாக இருக்கலாம். ஆனாலும் நாணயமற்ற முறைகள் அல்லது வேறு விதமான குறைகளை பார்த்த வரையில் மனிதர் குணம் இருக்கிற நிலையில் நிச்சயமாக எல்லா நாட்டிலும் எல்லா தேர்தல்களிலும் ஏதோ ஒரு நாணயமின்மை இருக்கத்தான் செய்யும்.இந்த பயங்கரத்தை பொறுத்த வரையில் நம் நாட்டு தேர்தலில் ஆங்காங்கே நாணயம் அற்ற நடப்புகள் இருப்பினும் பொதுத்தேர்தல் என்னும் கண்டத்தின் வழியே நான்கு முறை வெற்றிகரமாக வெளி வந்து விட்டோம். அதே சமயம் பல நாடுகளில் தேர்தல் நடுவில் நிறுத்தப்பட்டும் , முழுவதுமாக கைவிடப்பட்டும் , தடைபடுத்தப்பட்டும் போயுள்ளன. மேலும் நம்மோடுஜனநாயக ஆட்சியை தொடங்கிய பல நாடுகள் கடைசியில் ராணுவ ஆட்சியிலோ, அடிப்படை ஜனநாயகத்திலோ, அல்லது வழி நடத்தி செல்லும் ஜனநாயகம் என்னும் ஜனநாயகத்திலோ வந்து சரணடைந்து விட்டன.

கேள்வி: சென்னை மாநிலம் ,மும்மொழி திட்டத்தை விட்டு விட்டு இரு மொழி திட்டத்துக்கு போய்விட்டது அல்லவா? வருகின்ற வருடங்களில் இதே கொள்கையை கடைபிடுப்பீர்களா? அல்லது மும்மொழி திட்டம் ஏற்க்கப்படுமா?

அண்ணா: நீங்கள் , மும்மொழியை விரும்புகிறீர்களா அல்லது இரு மொழியை விரும்புகிறீர்களா என்று விவரித்த பின்னர் இந்த கேள்வியை கேளுங்கள் என நான் கூறுவேன். (சிரிப்பு) மும்மொழி திட்டத்தின் பின்னால் ஒரு சரித்திரமே இருக்கின்றது. மும்மொழி திட்டம் பல மாவட்டங்களிலேயே சமரச திட்டங்களாக பல வருடங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இந்திய நாட்டை ஒற்றுமையாக நிலைக்கச்செய்ய எல்லா மாநிலங்களும் மூன்று மொழிகள் கொண்டு இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அவற்றில் ஒன்று மாநில மொழியாகவும், இரண்டு ஆங்கிலம், மூன்று அவர்கள் தேசிய மொழி என கருதிய அவர்கள் சொன்ன ஒரு மொழி. நான் அச்சமயம் எதிர்கட்சியில் இருந்தேன். அதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி  மும்மொழி திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அந்த திட்டம் எல்லா மாநிலத்துக்கும் செய்யப்பட்டது. நல்ல ஜனநாயக பிரதிநிதியாக நான் முதலில் அதை எதிர்த்த போதிலும் அது அமலுக்கு வந்த பின் இடையில் நுழைத்து தொல்லை தவில்லை. திட்டம் நடக்க ஆரம்பித்து விட்டது. அதை நான் கெடுக்க விரும்ப வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னும் ஆறு மாதம் அது இருந்தது. சென்னை மாநிலம் மும்மொழி திட்டத்தில் மிகவும் உண்மையாக ஊக்கமாக இருந்தது. ஆனால் மற்ற மாநிலங்களுக்கும் இந்த சமரச திட்டத்தை ஒத்துக்கொண்டு ஒரு தரப்பாக இருந்த வட மாநிலங்கள் இந்த திட்டத்தை அமல் செய்வதில் உண்மையாக இல்லை. சிலர் அவர்கள் தென்னிந்திய மொழிகள் எதையும் படிக்க அவசியம் இல்லை என கூறிவிட்டனர்.

ஒரு மாநிலம், ஆங்கில கூட தேவை இல்லை என கூறிவிட்டது. அவர்கள் மாநில மொழியே போதும் என சொன்னார்கள். ஆகவே மும்மொழி திட்டம் பல மாநில ஊக்கத்தோடும் நம்பிக்கையோடும் அமல்படுத்தவில்லை. பாராளுமன்றத்தில் புது மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் வட இந்திய மாநிலங்கள் மும்மொழி திட்டத்தை அவமதிப்பதை உணந்தாலும் என் மாநிலத்தில் தமிழும் ஆங்கிலமும் இரு மொழி திட்டத்தை கொண்டு வந்தேன். இரு மொழி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் என்றால் ஆட்சியையும் மக்கள் மாற்றுவார்கள். ஆனால் நான் ஆட்சியில் இருக்கும் வரை இரு மொழி திட்டத்தை மாற்றுவதாக இல்லை, மும்மொழிக்கு போவதாகவும் இல்லை (செம கைதட்டல்)

கேள்வி: கல்லூரிகளில் கூட மாநில மொழியை பாட மொழியாக மாற்றுவதாக கேள்விப்படும் போது சில சமயங்களில் அது நல்லதாக படுகின்றது. பொதுவாக நம் மொழியில் நாம் படிப்பது நல்லது தான். ஆனால் எல்லா விஞ்ஞான படிப்புகளையும் அப்படி செய்ய முடியுமா? ஜப்பானில் அது நடந்துள்ளது. அப்படியாக தமிழில் விஞ்ஞானத்தை மொழி பெயர்த்து "தொழில் நுட்ப கல்விகளை: செய்யும் உத்தேசம் உள்ளதா?

அண்ணா: நீங்கள் ஜப்பானை பற்றி சொல்லும் போதே அதில் பாதி பதில் அடங்கி விட்டது. ஆனால் நான் அதில் இருந்து பதில் உண்டாக்க போவதில்லை. தமிழ்நாடு பொறுத்த வரை தொழில்கல்விகளாகிய மருத்துவம், பொறியியல், இயந்திர நுணுக்கவியல் ஆகியவற்றில் இன்னும் தமிழை பாட மொழி ஆக்கப்படவில்லை. கலைக்கல்வியில் மட்டுமே இதுவரை ஆக்கியுள்ளோம். விரைவில் எல்லாமும் வரும். மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் அவை பயிற்றுவிக்கப்படும். ஜப்பானில் உள்ளது போல எல்லாமே மொழியாக்கம் செய்விக்கப்பட்டு பொறியியல் முதல் எல்லாம் தமிழில் வரும். ஆனால் ஆங்கில இரண்டாம் மொழியாக இருக்கும். திமுக ஆட்சி இதைநீண்ட கால திட்டமாக செய்யும்.

கேள்வி: இந்தியாவில் இப்போது இருக்கும் பல முக்கிய பிரச்சனைகளை விட தேசிய மொழி பிரச்சனை முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிற்களா?

அண்ணா: என் நல்ல காலம் உங்கள் கேவியிலேயே பதிலும் உள்ளது. நீங்கள் கேட்பது போல பல மிக முக்கிய பிரச்சனைகள் இருக்கையில் நாம் முதலில் அவற்றை முடித்து விட்டு பின்னர் மொழியை பற்றி சிந்திக்கலாம்.

கேள்வி: சென்னையில் உங்கள் திமுக அடைந்த வெற்றி போல மற்ற மாநிலங்களில் வேறு கட்சிகள் வலிமை அடைய வாய்ப்பு உள்ளதா? பஞ்சாப், மகாராஷ்ட்டிரா ஆகிய இடங்களில் "சிவசேனை" என்னும் கட்சி வெற்றி அடையுமா?

அண்ணா: திமுகவின் வெற்றியைப்பற்றி எண்ணும் போது அதன் சரித்திரமும் சேர்த்து பார்க்க வேண்டும். நாங்க 1949ல் கட்சி ஆரம்பிச்சோம். அதன் பின்னர் பல தேர்தல்ல நிக்கவே இல்லை. மிகுந்த யோசனைக்கு பின்ன கட்சிக்குள்ள கேட்டுகிட்டு ஆலோசிச்சுகிட்டு பின்ன 1957ல் நின்னோம். முதல்ல 15 சட்டப்பேரவை இடம் மட்டுமே கிடைச்சுது. நாடாளுமன்றத்துக்கு இரண்டு இடம் மட்டுமே கிடைச்சுது. அடுத்த தடவை 50 சட்ட மன்ற உறுப்பினர்களும், எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கொடுத்தாங்க மக்கள். பின்ன நாங்க 1967ல் நின்ன போது நாங்க 134 சட்ட மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்கு 25 உறுப்பினர்களும் பெற்றோம் என்றால் ஒரே இரவில் நிகழ்ந்த சாதனை இல்லை இது. ஏதோ ஒரு தலைவன் ஒரே இரவில் தன் மனமாச்சர்யங்களுகாக கட்சி ஆரம்பிச்சா ஆரம்பத்தில் பிரகாசமா இருப்பது போல தெரிந்தாலும் நாளடைவில் நிற்காது. இதை சிவசேனை போன்ற கட்சிகளுக்கு சொல்கிறேன். அவங்க நல்லது செஞ்சா நல்லது நடக்கும். அத்தனையே! ஆனால் சிவசேனை வளர்கிறது. அதற்கு காங்கிரசும் அதன் ஆட்சி செயல்பாடுகளும் கூட காரணமாக இருக்கலாம்.

கேள்வி: இளைஞர் பலருக்கு நீங்கள் முதன் முதலில் திமுகவில் இளமை நாட்களில் கொண்டிருந்த பல கொள்கைகளை கைவிட்டு விட்டதாகவும் இப்போது நீங்கள் கொண்டுள்ள கருத்துகள் புரியாத புதிராகவும் காணல் நீராகவும் தோன்றுகின்றன. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

அண்ணா: உங்களை ஒன்று கேட்கிறேன்! நான் பிரிவினை பற்றி பேசியபோது 50 இடங்கள் மட்டுமே தந்து விட்டு நான் பிரிவினை கொள்கையை விட்ட பின்னர் 134 இடங்கள் தருகின்றனர் மக்கள். இதை எண்ணும் போது அவர்கள் என் மீது கோவம் கொண்டது போல் தெரிகின்றதா? நிச்சயம் இல்லை. நீங்கள் அதற்கு என்ன விளக்கம் தர முடியும்?

கேள்வி: தேசிய நிலையில் வட இந்திய , தென்னிந்தியா பற்றி உங்கள் கருத்துகளையும் மாநில அளவில் சென்னையில் பிரமண அல்லாதோர் பற்றி உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன் அய்யா?

அண்ணா: சென்னையை பொறுத்த வரை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனை இறந்தொழிந்து விட்டது. நீங்கள் இங்கே எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றீர்?

கேள்வி: திமுக தேசிய பிரபல்யம் அடைந்து நீங்கள் பிரதம மந்திரி ஆனால் நீங்கள் என்னன்ன முயற்சிகள் எடுத்து கொல்வீர்கள்?

அண்ணா: உங்கள் கேள்வி எனக்கு ஒரு மயக்குறு கேள்வியாக உள்ளது. இப்படி மனதை மயக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை விட அவற்றை பற்றி சிந்திப்பதில் நேரம் செல்விடுவது நேர விரயத்தை தடுக்கும் செயலாகும்.

கேள்வி: மொழிப்பிரச்சனை  பற்றி இன்னும் ஒரு கேள்வி, போன வருடம் எழுந்த மொழிக்கலவரங்கள் மக்களிம் மொழி பற்றிய உள்ளார்ந்த உணர்வால் எழுந்ததா? அல்லது வெறும் சாக்கா? அவர்கள் பட்டினியின் கோவத்தை வெளிப்படுத்த எழுந்ததா?

அண்ணா: 1965 ல் உண்டான மொழிக்கலவரம் பற்றிய கேள்வியாகும் இது என நினைக்கிறேன்.

கேள்வி: ஆமாம்!

அண்ணா: அது நிச்சயமாக மொழி தீர்மானத்தை எதிர்த்து மாணவர்களால் தொடங்கப்பட்டதாகும். பிறகு அந்த கிளர்சியில் மற்ற வெளியாட்கள் சேர்ந்து பழைய கோவங்களுக்கு பழி தீர்த்து கொண்டனர். ஆனால் அதை ஆரம்பித்த மாணவர்கள் உண்மையாகவே நாடாளுமன்றத்து மொழி தீர்மானம் தம்முடைய எதிர்காலத்தை கெடுக்க கூடியதாக இருப்பதை உணர்ந்து கிளர்ந்து எழுத்தனர். எந்த கட்சியும் அவர்களை தூண்டி விடவில்லை. ஆனால் அதில் பெரும்பான்மையான மாணவர்கள் "மாணவர் திமுக" அணியினர் "என்பதால் இப்படி ஒரு பெயராகி போனது.

கேள்வி: சிறிது நேரத்துக்கு முன் கருத்துகளை கூறுவதை விட செயல்முறையில் காட்டுவது அதிக நம்பிக்கை என கூறினீர்கள். ஆட்சிக்கு வரும் முன் கொண்டிருந்த கருத்துகளில் மறைவாக கொண்டிருந்த கொள்கைகளில் எவற்றை எல்லாம் செய்து காட்டினீர்கள்?

அண்ணா: முதலிலே கருத்துகளை கூறுவதாக இல்லை என்று நான் சொன்னால் "மறைவு" என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிக்க அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.

கேள்வி: மன்னிக்கவும், திருத்தத்தை ஒப்புக்கொள்கிறேன்!

அண்ணா:நான் உங்களை ஒன்று கேட்கிறேன். என் கருத்துகளை எல்லாம் செயல் படுத்த ஓர் ஆண்டு போதுமா?

கேள்வி: போதாது. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் சிறிதளவவது செயல்பட்டுள்ளீர்களா?

அண்ணா: உங்களுக்கும் அது பற்றி தெரிவிக்க வேண்டுமே! விளைச்சலை அதிகம் ஆக்கியுள்ளோம், காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி கைவிடப்பட்ட ரேசன் முறையை மீண்டும் ஆரம்பித்து உள்ளோம், விலவாசியை குறைத்து இருக்கின்றோம். ஒரே ஆண்டில் இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்க இயலும்?

கேள்வி: நான் கேட்பது அமேரிக்க நண்பர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்கு தான். இங்கு வரும் செய்திகள் அதிகள் இல்லை.

அண்ணா: கேள்வியாக நான் கேட்பது உங்களுக்கு சவால் விட அல்ல. ஆங்கில மொழி வாங்கியங்கள் கேள்வியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது அல்லவா..

கேள்வி: நீங்கள் இங்கே வந்திருப்பது அரசியல்  காரணம் மட்டும் அல்லாது சென்னையில் ஏதோ தொழிற்சாலை தொடங்க பேச்சுகள் நடத்த வந்திருப்பதாக இங்கே பத்திரிக்கையில் பார்த்தோம்.

அண்ணா: ஆமாம் , ஜெனரல் மோட்டார் கம்பெனியுடன் இந்திய கம்பெனி ஒன்று கூட்டு சேர்ந்து சென்னையில் விவசாய கருவிகள் செய்யும் தொழிற்சாலை உணடாக்க எண்ணி இருந்தனர். இங்கே வரும் போது ஜெனரல் மோட்டார் கம்பனியின் நிர்வாகிகளை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கூட்டு சேர இருந்த இந்திய கம்பனி மோசடி முத்திரையை வாங்கி விட்டதால் வேறு ஒரு கம்பனி முன்வரும் வரை இங்குள்ள கம்பனியாரை சந்திப்பதில் பொருத்தம் இல்லை. அதனால் நான் அவர்களை சந்திக்கவில்லை.

*******************

அண்ணா! எம் தீர்க்கதரிசி அண்ணா! உனக்கு இன்று வயது 104! உன் புகழ் இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்தும் நிற்கும் அண்ணா! எம் அண்ணா!


குறிப்பு: "அறிஞர் அண்ணாவும் அமேரிக்க பேட்டியும்" என தலைப்பு வச்சா எவன் வருவான் கட்சிகாரனை  தவிர! ஒரு பேமஸ் கூட நொட்டோரியசை சேர்த்து கொண்டால் ஆஹ்ஃகா... கூட்டு பிரமாதமா இருக்கும் என்பதால் மட்டுமே இந்த தலைப்பு!

Tuesday, August 14, 2012

கேட்டால் கிடைக்கும்

கேட்டால் கிடைக்கும்

                  

                     நண்பர் ஒருவர்  தவறுகளை தட்டிக் கேட்கும் எண்ணம் உள்ளவர். சில மாதங்களுக்கு முன் அவர் டில்லிக்கு பயணம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்ப இருந்த நேரத்தில் விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்த போயிருக்கிறார். உணவு ஆர்டரை வாங்கிய  பணியாளரிடம் தண்ணீர் கேட்க, அதற்கு அவர் நீங்கள் விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சுமார் அறுபது ரூபாய்க்கு விற்கப்படும் அந்த தண்ணீர் பாட்டிலை வாங்க அவரிடம் வசதியிருந்தாலும் ஒரு உணவகத்தில் அதன் லைசென்ஸ் விதிப்படி குடிக்கவும், மற்ற யூரினல் வசதிகளும் இருந்தாலே ஒழிய, அவர்களுக்கு உணவக லைசென்ஸ் கொடுக்கப்பட மாட்டாது. அப்படி ஒரு சட்டமிருக்க, அவர் குடிதண்ணீரை விலைக் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி திடமாய் சொல்லலாம்?.

நண்பர் விடாமல் அவரைக் கூப்பிட்டு “ ஏன் நீங்கள் தண்ணீர் விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும்? ஒவ்வொரு உணவக விதிப்படி நல்ல குடிதண்ணீரும், கழிவறை வசதிகளும் வரும் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டுமென்று சட்டம் சொல்கிறது. அப்படியிருக்க, நீங்கள் எப்படி எங்களை பாட்டில் குடிநீரை வாங்க கட்டாயப்படுத்தலாம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பணியாளர் ”இல்லை நாங்கள் தண்ணீர் தரமாட்டோம். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் என்று சொல்ல, நம் நண்பர் தன்னுடய மொபைல் கேமராவை ஆன் செய்து “அப்படியென்றால் நீங்கள் அதை இந்த வீடியோவில் சொல்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வீடியோவை ஆன் செய்ய, உடன் அந்த உணவகத்தின் மேனேஜர் வந்திருக்கிறார். அவரும் நண்பரை சமாதானப்படுத்த முயல, நண்பரும் தண்ணீர் கொடுங்கள் அல்லது கொடுக்க மாட்டேனென வீடியோவில் சொல்லுங்கள் என்றதும் உடனடியாய் அவருக்கு தண்ணீர் அதுவும் மினரல் வாட்டர் வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த ப்ரச்சனையை பார்த்த மற்ற வாடிக்கையாளர்களும் தங்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமென கேட்க அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கேட்டால் கிடைக்கும் என்பதன் பலம் இதுதான். இது போல தொடர்ந்து பத்து பேர் கேட்டால் நிச்சயம் நமக்கு இன்று கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்கும்.


தண்ணீர் கேட்ட நண்பர், ஒன்றும் சாதரணர் அல்ல. பல நாடுகளுக்கு தொடர்ந்து பயணிப்பவர். ஆனால் அவர்  தன்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசிக்காமல் கேட்டதால் தான் அதே உணவகத்தில் வந்திருந்த மற்றவர்களும் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இடம் உய்ர்தரமாக இருக்கிறதே இங்கே நாம் இப்படிக் கேட்டால் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று யோசிக்காமல் நம் உரிமைகளை கேட்க ஆரம்பியுங்கள் நிச்சயம் நம்மை சுரண்டுபவர்கள், நம் உரிமைகளை மறுப்பவர்களும் மாறுவார்கள். மாறித்தான் ஆக வேண்டும். கேட்டால் நிச்சயம்  கிடைக்கும்.

கேட்டதால்  கிடைத்த வெற்றி

Thursday, August 9, 2012

அகர தத்துவம்

1
அகர தத்துவம்


அ என்ற எழுத்தில் 1 2 3 4 5 6 7 8 9 10
ஆகிய எண்கள் வருவதை படத்தில் காணலாம் ..

                 திருவள்ளுவ நாயனார் குறித்த பரிபாசை அகர மற்றும் முதல இந்த அகர ஓவியத்தை மெய் கண்ட சாத்திரங்கள் கூறும் தசைநிலைகளையும் அறிவிக்கும் கருவியாம். 

           இதனையே தத்துவமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அகர தத்துவ விளக்கத்தை பெயர் வெளியிடாத சமாதியடைந்த மகன் ஒருவரால் சொல்லப்பட்டது ...



Monday, August 6, 2012

Illayaraja out of bonds

                                 -Illayaraja out of bonds-

           Great. I think this is the real music of IllayaRaja compared to film music on which he has to compromise a lot for the movie director.



Monday, July 30, 2012

மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா?

மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா?

எங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல்களை பாடுவதும் வாடிக்கை. அவற்றுள், "ரிங்கா, ரிங்கா ரோசஸ்' என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே மனப்பாடமாகி விட்டது. ஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப் புரியவில்லை. அது, என்னதான் சொல்ல வருகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

              தற்செயலாக நான் படித்த, "மிஸ்டரி ஆப் ஹிஸ்டரி' என்ற நூலில் கண்டிருந்த விஷயம் இது தான்...
கி.பி., 18ம் நூற்றாண்டுத் துவக்கத்தில், இங்கிலாந்து மக்களை மிகவும் அச்சுறுத்தியது கொள்ளை நோயான, "பிளேக்!' அந்த நோய் கண்டவர்களின்

                முதல் அறிகுறி, உடம்பில் வட்ட வட்டமாக, சிவந்து காணப்படும் தடிப்புகள். அதாவது, "ரிங்கா ரிங்கா ரேஷஸ்' (வட்ட வட்டமான தடிப்புகள்) அடுத்த அறிகுறி, "பாக்கட் புல் ஆப் போசீஸ்' அதாவது, இந்த நோய் கண்டவர்கள், நம்ம ஊர்த் துளசி போல, இங்கிலாந்தில் பூக்கும், நோய்களை விரட்டுவதாக நம்பப்படும், "போஸி' என்ற கிருமி நாசினிப் பூக்களை, தங்களது சட்டைப் பைகளில் வைத்துக் கொள்வராம், "பிளேக்' நோயை விரட்டும் என்ற நம்பிக்கையோடு!
                   
                       மூன்றாவது அறிகுறி, "அ டிஷ்யூ... அ டிஷ்யூ...' ஏதாவது புரிகிறதா? அட... தும்மல் ஒலிங்க! அந்தப் பூக்களை வைத்தும், நோயின் தாக்கம் குறையாமல், ஒருவருக்குத் தொடர்ந்து தும்மல் வந்ததென்றால், "வி ஆல் பால் டவுன்!' இப்போது புரிந்திருக்குமே... ஆம்! அவர் விண்ணகத்திற்கு, "டிக்கட்' வாங்கியாயிற்று என்பது பொருள்.

                     இனி, அந்த நபர் இறந்து விடுவார் என்று, சோகத்தோடு ஒப்பாரியாகப் பாடப்படும், ஆங்கிலேயே நாட்டுப்புற இழவுப் பாடலை, அது ஆங்கிலத்தில் பாடப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே, கிட்டத்தட்ட, 200 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் இந்திய மழலையரிடம், பொருள் புரியாமல் போதிப்பதும், அவர்களை பாடச் சொல்லி ரசிப்பதும், முட்டாள்தனமில்லையா?


                வெளிநாடுகளில் எங்குமே குழந்தைகளால் பாடப் பெறாத இந்த ஒப்பாரிக்கு, எப்போது ஓய்வு? கல்வியாளர்கள் கண் திறப்பரா!

சங்கமித்ரா நாகராஜன், கோவை.


Common British versions include:
Ring-a-ring o' roses,
A pocket full of posies,
A-tishoo! A-tishoo!
We all fall down.[2]
Common American versions include:
Ring-a-round a rosie,
A pocket full of posies,
Ashes! Ashes!
We all fall down.[2]
The last two lines are sometimes varied to
Hush! Hush! Hush! Hush!
We've all tumbled down.[2]



http://en.wikipedia.org/wiki/Ring_a_Ring_o%27_Roses


Tuesday, July 10, 2012

செண்பகராமன்

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

Thursday, June 28, 2012

The Windows failures

 
There are a lot of windows failures in the Keynote(demo), Here is the latest from them.

Microsoft Surface tablet(windows 8) Fails during Keynote


Windows never change :)




Here are the other famous Microsoft windows failures....

                 During a demo at Comdex for Windows 98, the USB plug-and-play system was being shown off. A scanner was plugged in, then BANG! Blue Screen of Death. Just goes to show you that "Dear aunt, let's set so double the killer delete select all" wasn't the first Microsoft sales presentation to fail spectacularly






Microsoft Speech Recognition Failed


Check out this video clip of a demonstration of the voice recognition software that comes packaged with the new operating system.







Windows Media Center fails


Windows Media Center fails at Microsoft Keynote with Conan O'Brien



Thursday, June 21, 2012

Vijay Awards 2012 winners

6th Annual Vijay Awards - winners

Best Film - Engaeyum Eppothum
Best Director - Vetrimaran
Best Screenplay - Thyagaraja
Best Song - Enamo Yedho
Best Crew - Aadukalam

go to the end of the page for complete list. 


Kovai Sarala wins best comedian jury award for Kanchana! She received it from Pandiyaraj.
Santhanam receives Best Comedian Award for Siruthai! 

    Wins award for 3rd time so Sivakarthikeyan wishes him on his hattrick, Santhanam pulls his leg that its his hattrict as an MC. A gala time on stage with Santhanam and VTV Ganesh making fun of one another! 

Dhanush receives Best Entertainer award 

          Simran presented the Best Actress Award! Any suggestions of who will win? ;) Nominees: Anjali for Engaeyum Eppothum, Anushka Deiva Thirumagal, Iniya for Vaagai Sooda Vaa, Richa for Mayakkam Enna and Nithya Menon for 180!

  •  
     
     
     
     
     
     
     
     
       











    Anjali bags the Best Actress award for the movie Engeyum Eppothum! Simran presents her with the award and lauds her with praises...


    Best Actor Award: Nominees: Dhanush for Aadukalam, Suriya for 7aum Arivu, Jiiva for Ko, Vikram for Deiva Thirumagal and Vishal for Avan Ivan. Award to be presented by Prabhu Deva and Nasser
      
    Chiyaan Vikram receives Best Actor Award for the movie Deiva Thirumagal!



              There's tension in the air as the Best Villain award is to be announced. Nominees: Ajith - Mankatha, Jackie Shroff - Aaranya Kandam, Jayabalan - Aadukalam, Jonny - 7aum Arivu and John Vijay for Mouna Guru


    AJITH - BEST VILLAIN - MANKATHA! Award received by Venkat Prabhu. Thala conveys his thanks to fans to whom he dedicates the award! Audience go gaga over this announcement!
    • Ajith Receives Favorite Actor and Best Villain Award

      The actor received the accolades from Sriram - Channel head of Star Vijay Televisions and Pradheep Milroy Peter - Programming Head and Mahendran - Vice President.
     
    AWARDS AND WINNERS:
    Favorite Hero: Ajith
    Favorite Heroine: Anushka
    Favorite Director: Venkat Prabhu: Mankatha
    Favorite Film: Ko

    Best Actor Vikram - Deiva Thirumagal
    Best Actor - Female - Anjali - Engeyum Eppothum
    Best Villain - Ajith - Mankatha
    Entertainer of the year: Dhanush          
    Best Director -Vetrimaaran - Aadukalam
    Best Film - Engeyum Eppothum
     
    Best Music Director - GV Prakash - Aadukalam
    Best Supporting Actor Male - Sarathkumar - Kanchana
    Best Supporting Actor Female - Uma Riaz - Mounaguru
    Best Debut Actor Male - Nani
    Best Debut Actor Female - Richa Gangopadhyay - Mayakkam Enna
     
    Best Comedian Santhanam and Kovai Sarala - Siruthai + Deiva Thirumagal, Kanchana
    Best Cinematographer - PS Vinodh
    Best Editor - Kishore - Engeyum Eppothum
    Best Stunt Director - Dilip - Aaranya Kandam
    Best Art Director - Seenu - Vaagai Sooda Vaa
    Best Screenplay - Thiagaraja Kumararaja
     
    Best Dialogue - Samudrakani - Poraali
    Best Lyricist - Vairamuthu - Vaagai Sooda Vaa
    Best Choreographer - Suchitra - Dia Dia Dole - Avan Ivan
    Best Make Up Artist - Gothandapani - 7aum Arivu
    Best Costume Designer - Anuvardhan and Moorthy - 7aum Arivu
    Best Song - Harris Jayaraj
    Best Lyrics - Madhan Karky


    Chevalier Sivaji Ganesan Award for excellence in Indian cinema - SP Balasubramaniam
    Jury Special Award - Baby Sara - Deiva Thirumagal
    Best Find Of The Year - Gibraan - Vaagai Sooda Vaa
    Best Crew Of The Year - Aadukalam


    The Favorite Awards were by public voting and the Best awards were chosen by the eminent jury members.

தமிழக அரசு ஈமெயில் திட்டம்

தமிழக அரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட M.L.A-கள் பலர் பொது மக்கள் தரும் மனுவை / கோரிக்கையை படிப்பதில்லை. அப்படியே அதனை தந்தாலும் அவரது சாகாக்கள் அதனை அவருடன் கொண்டு சேர்ப்பதில்லை. இதனால் பொது மக்களிடம் ஒரு தவறான கருத்து உருவாகிறது. அதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஈமெயில் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.



முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை துவக்கி வைத்து ஒவ்வொரு தொகுதி M.L.A.க்கும் ஒரு E-Mail ID கொடுத்துள்ளார். இனிமேல் உங்கள் "நியாயமான" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.

எல்லா M.L.A.க்கும் லேப்டாப் (Laptop) கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் உங்கள் கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.


234 தொகுதி M.L.A.க்கும் தனி தனியே கொடுக்கப்பட்டுள்ளது.....

தொகுதி பெயர் - M.L.A ஈமெயில் ID

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam - mlaandimadam@tn.gov.in
9 Andipatti - mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar - mlaannanagar@tn.gov.in
11 Arakkonam - mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi - mlaaravakurichi@tn.gov.in
14 Arcot - mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai - mlaaruppukottai@tn.gov.in
18 Athoor - mlaathoor@tn.gov.in
19 Attur - mlaattur@tn.gov.in
20 Avanashi - mlaavanashi@tn.gov.in
21 Bargur - mlabargur@tn.gov.in
22 Bhavani - mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar - mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri - mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur - mlabodinayakkanur@tn.gov.in

26 Chengalpattu - mlachengalpattu@tn.gov.in
27 Chengam - mlachengam@tn.gov.in
28 Chepauk - mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi - mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar - mlacheyyar@tn.gov.in
31 Chidambaram - mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem - mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast - mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest - mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel - mlacolachel@tn.gov.in
36 Coonoor - mlacoonoor@tn.gov.in
37 Cuddalore - mlacuddalore@tn.gov.in
38 Cumbum - mlacumbum@tn.gov.in
39 Dharapuram - mladharapuram@tn.gov.in
40 Dharmapuri - mladharmapuri@tn.gov.in
41 Dindigul - mladindigul@tn.gov.in
42 Edapadi - mlaedapadi@tn.gov.in
43 Egmore - mlaegmore@tn.gov.in
44 Erode - mlaerode@tn.gov.in
45 Gingee - mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam - mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur - mlagudalur@tn.gov.in
48 Gudiyatham - mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi - mlagummidipundi@tn.gov.in
50 Harbour - mlaharbour@tn.gov.in

51 Harur - mlaharur@tn.gov.in
52 Hosur - mlahosur@tn.gov.in
53 Ilayangudi - mlailayangudi@tn.gov.in
54 Jayankondam - mlajayankondam@tn.gov.in
55 Kadaladi - mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur - mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam - mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram - mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam - mlakandamangalam@tn.gov.in
60 Kangayam - mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari - mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai - mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi - mlakaraikudi@tn.gov.in
64 Karur - mlakarur@tn.gov.in
65 Katpadi - mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil - mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam - mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor - mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu - mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur - mlakolathur@tn.gov.in
71 Kovilpatti - mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri - mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram - mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai - mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam - mlakumbakonam@tn.gov.in

76 Kurinjipadi - mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam - mlakuttalam@tn.gov.in
78 Lalgudi - mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral - mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast - mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest - mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam - mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai - mlamanamadurai@tn.gov.in
84 Mangalore - mlamangalore@tn.gov.in
85 Mannargudi - mlamannargudi@tn.gov.in
86 Marungapuri - mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai - mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur - mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur - mlamelur@tn.gov.in
90 Mettupalayam - mlamettupalayam@tn.gov.in
91 Mettur - mlamettur@tn.gov.in
92 Modakkurichi - mlamodakkurichi@tn.gov.in
93 Morappur - mlamorappur@tn.gov.in
94 Mudukulathur - mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur - mlamugaiyur@tn.gov.in
96 Musiri - mlamusiri@tn.gov.in
97 Mylapore - mlamylapore@tn.gov.in
98 Nagapattinam - mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil - mlanagercoil@tn.gov.in
100 Namakkal - mlanamakkal@tn.gov.in

101 Nanguneri - mlananguneri@tn.gov.in
102 Nannilam - mlanannilam@tn.gov.in
103 Natham - mlanatham@tn.gov.in
104 Natrampalli - mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam - mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai - mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram - mlaoddanchatram@tn.gov.in
108 Omalur - mlaomalur@tn.gov.in
109 Orathanad - mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram - mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram - mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode - mlapalacode@tn.gov.in
113 Palani - mlapalani@tn.gov.in
114 Palayamkottai - mlapalayamkottai@tn.gov.in
115 Palladam - mlapalladam@tn.gov.in
116 Pallipattu - mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti - mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti - mlapanruti@tn.gov.in
119 Papanasam - mlapapanasam@tn.gov.in
120 Paramakudi - mlaparamakudi@tn.gov.in
121 ParkTown - mlaparktown@tn.gov.in
122 Pattukkottai - mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram - mlapennagaram@tn.gov.in
124 Perambalur - mlaperambalur@tn.gov.in
125 Perambur - mlaperambur@tn.gov.in

126 Peranamallur - mlaperanamallur@tn.gov.in
127 Peravurani - mlaperavurani@tn.gov.in
128 Periyakulam - mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut - mlapernambut@tn.gov.in
130 Perundurai - mlaperundurai@tn.gov.in
131 Perur - mlaperur@tn.gov.in
132 Pollachi - mlapollachi@tn.gov.in
133 Polur - mlapolur@tn.gov.in
134 Pongalur - mlapongalur@tn.gov.in
135 Ponneri - mlaponneri@tn.gov.in
136 Poompuhar - mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee - mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai - mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam - mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram - mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam - mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram - mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet - mlaranipet@tn.gov.in
144 Rasipuram - mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam - mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar - mlarknagar@tn.gov.in
147 Royapuram - mlaroyapuram@tn.gov.in
148 Saidapet - mlasaidapet@tn.gov.in
149 Salem -I - mlasalem1@tn.gov.in
150 Salem-II - mlasalem2@tn.gov.in

151 Samayanallur - mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi - mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram - mlasankarapuram@tn.gov.in
154 Sankari - mlasankari@tn.gov.in
155 Sathyamangalam - mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam - mlasattangulam@tn.gov.in
157 Sattur - mlasattur@tn.gov.in
158 Sedapatti - mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam - mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan - mlasholavandan@tn.gov.in
161 Sholinghur - mlasholinghur@tn.gov.in
162 Singanallur - mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi - mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga - mlasivaganga@tn.gov.in
165 Sivakasi - mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur - mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam - mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam - mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur - mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal - mlatalavasal@tn.gov.in
171 Tambaram - mlatambaram@tn.gov.in
172 Taramangalam - mlataramangalam@tn.gov.in
173 Tenkasi - mlatenkasi@tn.gov.in
174 Thalli - mlathalli@tn.gov.in
175 Thandarambattu - mlathandarambattu@tn.gov.in

176 Thanjavur - mlathanjavur@tn.gov.in
177 Theni - mlatheni@tn.gov.in
178 Thirumangalam - mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam - mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram - mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar - mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur - mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur - mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam - mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur - mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur - mlathondamuthur@tn.gov.in
187 Thottiam - mlathottiam@tn.gov.in
188 Tindivanam - mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur - mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode - mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur - mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli - mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194 - mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41 - mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur - mlatirupporur@tn.gov.in
196 Tiruppur - mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi - mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani - mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai - mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru - mlatiruvaiyaru@tn.gov.in

201 Tiruvallur - mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai - mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur - mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar - mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I - mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II - mlatrichy2@tn.gov.in
207 Triplicane - mlatriplicane@tn.gov.in
208 Tuticorin - mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam - mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet - mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet - mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram - mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti - mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur - mlauthiramerur@tn.gov.in
215 Valangiman - mlavalangiman@tn.gov.in
216 Valparai - mlavalparai@tn.gov.in
217 Vandavasi - mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi - mlavaniyambadi@tn.gov.in
219 Vanur - mlavanur@tn.gov.in
220 Varahur - mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur - mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam - mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur - mlavedasandur@tn.gov.in
224 Veerapandi - mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil - mlavellakoil@tn.gov.in

226 Vellore - mlavellore@tn.gov.in
227 Vilathikulam - mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode - mlavilavancode@tn.gov.in
229 Villivakkam - mlavillivakkam@tn.gov.in
230 Villupuram - mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar - mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam - mlavridhachalam@tn.gov.in
233 Yercaud - mlayercaud@tn.gov.in
234 ThousandLights - mlathousandlights@tn.gov.in


உங்கள் கோரிக்கையை ஈமெயில் மூலம் நேரிடையா M.L.A.வுக்கு அனுப்புங்க...!!!

நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ...!!!!

இந்த திட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் !

Thanks - Dinakaran News Paper

கல்வி கடன் பெறும் வழிமுறைகள் - கருத்தரங்கம்



அழைப்பிதழ்

புதிய தலைமுறை அறக்கட்டளை – கல்வி கடன் பெறும் வழிமுறைகள் பற்றியும், அடிப்படை கல்வி சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம்


     புதிய தலைமுறை அறக்கட்டளை கல்வி கடன் பெறும் வழிமுறைகள் பற்றியும், அடிப்படை கல்வி சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம் ஜூன் 25 ஆம் தேதி, 2012  திங்கட்கிழமை மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

தாங்கள் இக்கருத்தரங்கத்திற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!!


நாள்: திங்கட்கிழமை, ஜூன் 25  ஆம் தேதி, 2012  

நேரம் : மாலை 5.00  முதல் 7.00 மணி வரை

இடம்: Y.M.I.A. அரங்கம், ஜம்மி பில்டிங், ராயபேட்டை ஹை ரோடு,
               மயிலாப்பூர், சென்னை – 600 004.


பொருள்: கல்வி கடன் பெறும் வழிமுறைகள் மற்றும் அடிப்படை கல்வி சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள சிறப்பு விருந்தினராக பவர் பாய்ண்ட் சீனிவாசன் அவர்கள் உரையாற்ற உள்ளார்கள்.

தொடர்பு கொள்ள:

புதிய தலைமுறை அறக்கட்டளை
எண்.24, ஜி.என். செட்டி சாலை,
தி.நகர், சென்னை 600 017.
தொலைபேசி: 044 30578733/28341219    
இராம்குமார், சிறப்பு அதிகாரி  -9094064179
மின்னஞ்சல் contact@ptfindia.org, வலை: www.ptfindia.org

Monday, June 11, 2012

Know your PAN CARD



Know your PAN CARD.. Logic of PAN ...... .




PAN is a 10 digit alpha numeric number, where the first 5 characters are letters, the next 4 numbers and the last one a letter again. These 10 characters can be divided in five parts as can be seen below. The meaning of each number has been explained further.




1. First three characters are alphabetic series running from AAA to ZZZ

2. Fourth character of PAN represents the status of the PAN holder.

• C — Company
• P — Person
• H — HUF(Hindu Undivided Family)
• F — Firm
• A — Association of Persons (AOP)
• T — AOP (Trust)
• B — Body of Individuals (BOI)
• L — Local Authority
• J — Artificial Juridical Person
• G — Government

3. Fifth character represents first character of the PAN holder’s last name/surname.

4. Next four characters are sequential number running from 0001 to 9999.

5. Last character in the PAN is an alphabetic check digit.
Nowadays, the DOI (Date of Issue) of PAN card is mentioned at the right (vertical) hand side of the photo on the PAN card.
Worth Sharing..

Infolinks

ShareThis