Wednesday, April 28, 2010

Healthy cooking tips

நிஜமல்ல கதை!


விஜய் தொலைக்காட்சியின் ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியை அவ்வப்போது பின்னிரவுகளில் காண்பதுண்டு. இந்நிகழ்ச்சியை பிரத்யேகமாக நான் விரும்பி பார்க்க ஒரே காரணம் லட்சுமி. அவரது ஆளுமை புரட்சித்தலைவியை நினைவுகூறத்தக்கதாக இருப்பதால் இந்நிகழ்ச்சியையும் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது பார்த்து வருகிறேன்.

பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஜெரீனாபேகம் என்ற நடுத்தர வயது பெண்ணின் கண்ணீர்க்கதை. சிறுவயதிலேயே தந்தை விட்டு விட்டு ஓடிவிட்டார். சொந்த தாயே கொடுமைப் படுத்துகிறார். பதிமூன்று வயதில் காதலனோடு ஊரை விட்டு ஓட்டம். பின்னர் கணவனே பாலியல் தொழில் செய்யச்சொல்லி வற்புறுத்துகிறான். மூன்று குழந்தைகள்.

ஒரு விளம்பர இடைவேளை.

கணவனிடமிருந்து தப்பி மீண்டும் சென்னைக்கு வருகிறார். அம்மா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். சோகங்களுக்கு எல்லாம் சிகரம் வைக்கும் முகமாக இடையில் ஒரு குழந்தை காணாமல் வேறு போய்விடுகிறது. இப்படியாக ஜெரீனாபேகம் தன்னுடைய வாழ்க்கைச் சோகங்களை அடுக்கிக் கொண்டே போக ஒருக்கட்டத்தில் லட்சுமியே கண்ணீர் விட்டு அழுகிறார்.

மீண்டும் விளம்பர இடைவேளை.

அடுத்ததாக பிரச்சினைகளை தீர்க்கும் படலம்.

சிறுவயதில் ஜெரீனாவை விட்டு ஓடிப்போன தந்தையை ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவரிடம் லட்சுமி பேசுகிறார். அவரது மகளுக்கு ஏற்பட்ட சோகங்களை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி, இனியாவது ஆறுதலாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார். தந்தையும், மகளும் பலவருட பிரிவுக்குப் பிறகு ஒன்று சேருகிறார்கள்.

மறுபடியும் விளம்பர இடைவேளை.

அப்பாவும், மகளும் சேர்ந்துட்டாங்க. ஜெரீனாவின் தொலைந்துபோன மகள் எங்கே? நம் குழுவினர் அந்த குழந்தையையும் தேடிக்கிட்டிருக்காங்க என்று லட்சுமி அறிவிக்கிறார்.

பார்வையாளர்கள் பரபரப்படைய விளம்பர இடைவேளை.

ஒரு கன்னியாஸ்திரியோடு சிறு பெண்குழந்தை. அக்குழந்தைதான் ஜெரீனாவின் தொலைந்துபோன மகளாம். ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் தேடி கண்டுபிடித்து விட்டார்களாம். எப்படி அந்த குழந்தை ஆசிரமத்துக்கு வந்தது என்று கன்னியாஸ்திரி விளக்கமாக சொல்கிறார்.

மீண்டும் ஒரு விளம்பர இடைவேளையைத் தொடர்ந்து

தொலைந்துபோன குழந்தையும், தாயும் ஒன்றுசேரும் கண்ணீர்க் காட்சி. பார்வையாளர்களும் கண்ணீர் சிந்த, விழியோரம் துளிர்த்த நீரை லட்சுமி நாசுக்காக துடைக்க...

அன்றைய எபிஸோடு சுபம்.

இம்மாதிரியான நிகழ்ச்சிகளால் தொலைந்துபோன குடும்பங்கள் ஒன்று சேருகின்றன என்பதை நினைத்தாலே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த ஜெரீனாபேகம் கேஸின் பின்னணி ஏற்கனவே தெரிந்திருப்பதால் எனக்கு அதிர்ச்சியே மேலிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ‘புதியதலைமுறை’ பத்திரிகையில் ஜெரீனாபேகம் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையிலேயே அவரது குழந்தை காணாமல் போன விஷயத்தை படத்தோடும் கட்டுரையாளர் கல்யாண்குமார் வெளிப்படுத்தியிருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற வாசகி அக்குழந்தையின் படத்தைப் பார்த்ததுமே புதிய தலைமுறை அலுவலகத்தை தொடர்புகொண்டார். குழந்தை இருக்கும் இடம் அவருக்கு தெரிந்திருந்தது. இதையடுத்து பத்திரிகையின் ஏற்பாட்டின் பேரில் தாயும், சேயும் இணைந்தார்கள். இந்தச் செய்தியும் ‘பிரிந்தோம்.. புதிய தலைமுறையால் சந்தித்தோம்’ என்ற தலைப்பில் மார்ச் 11, புதிய தலைமுறை இதழில் படத்தோடு வெளிவந்திருந்தது.

ஆனால், ஏப்ரல் 13 அன்று ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியிலோ மீண்டும் ஒருமுறை ஒன்றுசேர்ந்த வைபவம் நெகிழ்ச்சியான முறையில் படம்பிடித்து காட்டப்பட்டது. குழந்தையை ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் தேடி கண்டுபிடித்ததாகவும் லட்சுமியே சொன்னார். ஜெரீனாபேகம், கன்னியாஸ்த்ரி, அந்த எட்டு வயதுக்குழந்தை ஆகியோரும் பாத்திரத்துக்கு ஏற்ப தரமான நடிப்பை வழங்கியிருந்ததுதான் புரியாத புதிர். ஒரு மாதத்துக்கு முன்பு தங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை மீண்டும் அச்சு அசலாக விஜய் டிவி கேமிராவுக்கு முன்பாக சிறப்பாக நடித்து காட்டியிருந்தார்கள்.

உலகப் படங்களை சீன் உருவி தமிழ்ப்படங்களில் காட்சியமைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சென்னையில் ஏற்கனவே இன்னொரு பத்திரிகையால் நடந்த, படங்களோடு பதிவுசெய்யப்பட்ட ஒரு விஷயத்தை புதியதாக நடத்திக் காட்டியிருக்கும் ‘கதையல்ல நிஜம்’ குழுவினரின் சாமர்த்தியத்தை நாம் மெச்சத்தான் வேண்டும்.



பின்னிணைப்பு - புதிய தலைமுறை இதழில் ஏற்கனவே வெளிவந்திருக்கும் கட்டுரை (பெரியதாக வாசிக்க சொடுக்கிப் பார்க்கலாம்) :

Monday, April 26, 2010

IPL- ஐபில் ஆல்பம்

ஐபில் பிரபலங்களின் ஆல்பம். எவ்வளவு நாளைக்கு தான் டெண்டுல்கர், தோனி, யுவராஜ் என்று ஆல்பம் தயாரிப்பார்கள். ஒரு மாறுதலுக்கு இந்த ஆல்பம்...

1. லலித் மோதி
இந்த ஆட்டங்களின் மிகப்பெரிய சூத்ரதாரி லலித் மோதி. ஐபிஎல் என்ற ஐடியாவையே இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கொடுத்தது இவர்தான். நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் இவர். கொச்சி அணியின் பங்குதாரர்கள் பற்றி ட்விட்டரில் உளறப் போக இவரே இப்போது இமாலயச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஏற்கனவே ஜெயிலுக்கு சென்று வந்த அனுபவசாலி. பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்களும் இவருக்கு நண்பர்கள்.



2. சுனந்தா புஷ்கர்
சுனந்தா காஷ்மீரத்தைச் சேர்ந்த ஒரு அழகுக்கலை நிபுணர், தற்போது துபாயில் வசிப்பவர். என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுமளவிற்கு இவரது பெயர் ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தில் அடிபட்டது. வேர்வை சிந்தாமல் "sweat equity" என்ற ஓசி பங்குகள் இவருக்கு கிடைத்தது. எப்படி என்று கேட்க கூடாது.





3.சசி தரூர்
தனது நண்பிக்கு இலவச பங்குகள் பெற்றுத் தருவது முதல் கொச்சி அணியையே உருவாக்குவதற்கான சூத்ரதாரி என்று இவர் இவ்விவகாரத்தில் அறியப்படுகிறார். இவ்விவகாரத்தில் இவருக்கு கொலை மிரட்டல் வேறு!! இவ்விவகாரத்திலிருந்து விடுபட தனது பதவியையே விலையாகக் கொடுத்து விட்டார் இவர். அப்போதும் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே இவரது ட்விட்டர் சர்ச்சைகளால் சங்கடத்திலிருந்த காங்கிரஸிற்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைத்திருக்காது. உடனே இவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் ஒரு பொறுப்புடைய கட்சி என்று மார்தட்டிக் கொண்டது. External affairs minister ஆனால் internal affairsல் மாட்டிக்கொண்டார்.




4. சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே மத்திய அமைச்சர் ஷரத் பவாரின் மகள், சதானந்த் அவரது கணவர். இவர்கள் இருவருக்கும் ஐபிஎல்லின் சில அணிகளில் பங்கிருப்பதாகத் தகவல். அவர்களும் அதனை மறுத்தவண்ணம் இருக்கிறார்கள். இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. காரணம், அவரது பின்னணி அப்படி. ஷரத் பவார் பிசிசிஐயில் உயர் பதவி வகித்தவர், இப்போது ஐசிசியின் தலைவர் பதவியை ஏற்கவிருப்பவர். எனவே இவரது மகளுக்கு இதில் தொடர்பிருக்கிறதா என காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அவரது ஆதரவு வேறு காங்கிரஸிற்கு மத்தியிலும் மாநிலத்திலும் வேண்டியிருப்பதால், விவகாரம் முழுமையாக வெளிவருவது சற்றே சிரமம்தான். இவர்களுக்கு 10% பங்கு உண்டு என்று சொல்லுகிறார்கள். பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பார்களோ ?




5. ப்ரஃபுல் படேல், பூர்ணா படேல்

ப்ரஃபுல் படேலும் ஷரத் பவாரின் கட்சி சகா. இவரது மகள் பூர்ணா படேல், லலித் மோதிக்கு மிகவும் வேண்டியவர். லலித் மோதியின் அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறையினரின் சோதனைக்கு முன்னர் சில முக்கிய ஆவணங்களைக் கடத்திய மர்மப் பெண் என்ற விவகாரத்தில் இவருடைய பெயரும் அடிபடுகிறது. தவிர சசி தரூரிற்கு கொச்சி அணியின் ஏலம் பற்றிய விவரங்களை ரகசியமாக இவரது தந்தை மூலமாக மெயில் அனுப்பினார் என்றும் கூறப்படுகிறது, கொச்சி அணியை யாரும் எதிர்பாராத வகையில் ரந்தேவு ஸ்போர்ட்ஸ் ஏலம் பெற்றதற்கே இந்த மெயில்தான் காரணம் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. பூர்ணா பட்டேலும், சில ஐபிஎல் வீரர்களும் பயணம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சார்ட்டட் ப்ளைட் புறப்படுவதற்காக ஏர் இந்தியா விமானமே புறப்படுவது கேன்ஸல் செய்யப்படுகிறது. அந்த அளவிற்கு ப்ரஃபுல் படேலின் செல்வாக்கு பூர்ணாவிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் எங்களுக்கு எவ்வித பங்கும் இல்லை என்பது வேடிக்கை. மன்மோகன் சிங் பாவம் இவர்கள் என்ன என்ன தப்பு செய்தார்கள் என்று பிரணாப் முகர்ஜியிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறார்.




6. ஷரத் பவார்
ஐபிஎல் விவகாரங்களைப் பொறுத்தமட்டில் ஷரத் பவார் எந்த பதவியையும் வகிக்கவில்லை. லலித் மோதிதான் ஒன்மேன் ஆர்மியாகச் செயல்பட்டு வந்துள்ளார். தவிர ஷரத் பவாரின் முழு ஆதரவும் லலித்தின் பக்கம் இருந்தது. இப்பிரச்சனைகள் வெடித்தவுடனேயே லலித்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார். ஆனால் திடீரென்று எதிர்நிலை எடுத்துள்ளார். காரணம் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்விவகாரத்தில் அடிபட்டதால் சசி தரூர் பதவியிழந்தார். லலித் மோதிக்கெதிராக பல சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்து, தானும் சர்ச்சைக்குள் புக ஷரத் பவார் விரும்பியிருக்க மாட்டார். தவிர வெகு சமீபத்தில் ஐசிசி தலைவர் பதவியேற்கவிருக்கும் இந்நேரத்தில் இது தேவையிற்ற தலைவலி என்று எண்ணியிருக்கலாம்.





7. வருமானவரித்துறை
இந்தியாவைப் பொருத்தமட்டில் ஆயிரங்கள் நடமாடும் இடத்திலேயே ஊழலும், லஞ்ச லாவண்யங்களும் திளைத்திருக்கும். இங்கு ஆயிரக்கணக்கான கோடிகள் புரள்கின்றன. எனவே ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் கேட்க வேண்டியதில்லை. இந்திய அரசு வழக்கம் போல மீடியாவில் வந்த பிறகு உஷார் ஆகிவிடும். இப்போது நடத்தப்படும் வருமானவரித்துறை ரெய்டுகளும் வெறும் கண் துடைப்பா அல்லது உண்மையான நடவடிக்கையா என்பது போகப் போகத்தான் தெரியும். ஏனெனில் முந்தைய லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிபிஐயும், வருமான வரித்துறையும் சிலரின் வாயைப் பூட்டுவதற்கான மிரட்டல் கருவியாகத்தான் பயன்பட்டது. இங்கும் அப்படி சிலரின் வாயை மூடுவதற்காகப் பயன்படுத்தப்படலாம். யார் மாட்டுகிறார்கள் என்பதை பொறுத்து தகவல் வெளியே வரும்.




8. நட்சத்திரங்கள்
ஐபில் அணிகள் சிலவற்றிற்கு சில பாலிவுட் நட்சத்திரங்கள் முதலாளிகளாகவும், பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி மற்றும் ஷாருக் கான் போன்றோர் அவர்கள். இவ்வளவு ஆயிரக்கணக்கான கோடிகள் கொடுத்து ஒரு அணியை விலைக்கு வாங்க அவர்களுக்குப் பணம் எங்கிருந்து கிடைத்தது? ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஷில்பா ஷெட்டி போன்றோர்கள் அதிக பட்சமே வைத்துக் கொண்டாலும் 200 படங்களில் நடித்திருப்பர், ஷாருக் உட்பட (இந்த பட எண்ணிக்கை மிக அதிகம்). அப்படியிருக்க எவ்வாறு இவர்களுக்கு இவ்வளவு பணம் கிடைத்தது? இவர்கள் ஏதேனும் அரசியல்வாதிகளுக்கு பினாமியாக இருக்கலாமோ? அந்த பணத்திற்கெல்லாம் என்ன கணக்கு?அல்லது எல்லாம் அண்டர் கிரவுண்ட் தாதாக்களின் பணமா ? இவர்கள் எல்லோரும் மோடிக்கு சப்போர்ட் வேற செய்கிறார்கள் !




9. ஸ்ரீமான் பொதுஜனம்தான்
ஐபில் பண விவகாரம், இந்தியாவின் ஒருவருடத்திற்கான பட்ஜெட்டை விட அதிகம். இந்நிலையில் அதில் ஊழல் நடைபெறுவதிலும், அதில் அதிகாரம் பெறுவதில் நடக்கும் போட்டிகளிலும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இதில் முழுக்க முழுக்க முட்டாளாக்கப்படுவது, ஒரு போட்டியை ஒண்ணேகால் லட்சம் பெறுமான டிக்கெட் கொடுத்துப் பார்க்கும் ஸ்ரீமான் பொதுஜனம்தான். இதில் சச்சின் அடித்தார், தோனி கேட்ச் பிடித்தார் என்று டிவிட்டும் மக்களை என்ன சொல்லுவது ? பெண்கள் வேற ஐபில் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். கொடுமை!. கிரிக்கெட் பொழுது போக்கு, விளையாட்டு என்ற நிலையெல்லாம் கடந்து, கோடிகளும், சூதுகளும் புரளும் ஒரு மிகப்பெரிய வர்த்தகம் என்ற நிலையை எய்திவிட்டது.







10. நித்தியானந்தா
ஐபில் விவகாரம் சூடு பிடித்ததால் இவர் கைது விஷயம் மீடியாவில் இரண்டாம் பக்கம் சென்றுவிட்டது.  யார் கண்டது, இன்னும் தோண்டினால் நித்தியா கூட ஓர் அணிக்கு ஓனராக இருக்கலாம்.

Iceland's Eyjafjallajokull volcano - ஐஸ்லாந்து எரிமலை - நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. Dont Miss it!


Lightning streaks across the sky as lava flows from a volcano in Eyjafjallajokul April 17, 2010. (REUTERS/Lucas Jackson)

The volcano in southern Iceland's Eyjafjallajokull glacier sends ash into the air just prior to sunset ON Friday, April 16, 2010. Thick drifts of volcanic ash blanketed parts of rural Iceland on Friday as a vast, invisible plume of grit drifted over Europe, emptying the skies of planes and sending hundreds of thousands in search of hotel rooms, train tickets or rental cars. (AP Photo/Brynjar Gauti) #

Long lens view of farm near the Eyjafjallajokull volcano as it continues to billow smoke and ash during an eruption late on April 17, 2010. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

A car is seen driving near Kirkjubaejarklaustur, Iceland, through the ash from the volcano eruption under the Eyjafjallajokull glacier on Thursday April 15, 2010. (AP Photo/Omar Oskarsson) #

Chunks of ice from a glacial flood triggered by a volcanic eruption lie in front of the still-erupting volcano near Eyjafjallajokul on April 17, 2010. (REUTERS/Lucas Jackson) #

Ash covers vegetation in Eyjafjallasveit, southern Iceland April 17, 2010. (REUTERS/Ingolfur Juliusson) #

This aerial photo shows the Eyjafjallajokull volcano billowing smoke and ash on April 17, 2010. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

A woman stands near a waterfall that has been dirtied by ash that has accumulated from the plume of an erupting volcano near Eyjafjallajokull, Iceland on April 18, 2010. (REUTERS/Lucas Jackson) #

Horses fight near the town of Sulfoss, Iceland as a volcano in Eyjafjallajokull erupts on April 17, 2010. (REUTERS/Lucas Jackson) #

Farmer Thorarinn Olafsson tries to lure his horse back to the stable as a cloud of black ash looms overhead in Drangshlid at Eyjafjoll on April 17, 2010. (REUTERS/Ingolfur Juliusson) #

A small plane (upper left) flies past smoke and ash billowing from a volcano in Eyjafjallajokul, Iceland on April 17, 2010. (REUTERS/Lucas Jackson) #

Smoke billows from a volcano in Eyjafjallajokull on April 16, 2010. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

The sun sets in a sky dusted with ash, over Lake Geneva, as seen from the Lavaux Vineyard Terraces, a UNESCO site in Switzerland, on April 17, 2010. (FABRICE COFFRINI/AFP/Getty Images) #

The volcano in southern Iceland's Eyjafjallajokull glacier sends ash into the air Saturday, April 17, 2010. (AP Photo/Brynjar Gauti) #

Farmers team up to rescue cattle from exposure to the toxic volcanic ash at a farm in Nupur, Iceland, as the volcano in southern Iceland's Eyjafjallajokull glacier sends ash into the air Saturday, April 17, 2010. (AP Photo/Brynjar Gauti) #

A rescue team helps landowners to clear volcanic ash from a roof in Seljavellir, Iceland on April 18, 2010. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

Sheep farmer Thorkell Eiriksson (R) and his brother-in-law Petur Runottsson work to seal a sheep barn, in case winds shift and ash from a volcano erupting across the valley lands on their farm, in Eyjafjallajokull April 17, 2010. The current season is when the spring lambs are born and such young animals are especially susceptible to volcanic ash in their lungs so they must be stored inside. (REUTERS/Lucas Jackson) #

A dark ash cloud looms over the Icelandic south coast April 17, 2010. (REUTERS/Ingolfur Juliusson) #

Lightning, smoke and lava above Iceland's Eyjafjallajokul volcano on April 17, 2010. (REUTERS/Lucas Jackson) #

View seen from a road leading to the Eyjafjallajokull volcano as it continues to billow smoke and ash during an eruption on April 17, 2010. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

A man runs along the roadside, taking pictures of the Eyjafjallajokull volcano as it continues to billow smoke and ash during an eruption on April 17, 2010. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

A huge ash cloud creeps over the Icelandic south coast April 16, 2010. (REUTERS/Ingolfur Juliusson) #

Wearing a mask and goggles to protect against the smoke, dairy farmer Berglind Hilmarsdottir from Nupur, Iceland, looks for cattle lost in ash clouds, Saturday, April 17, 2010. (AP Photo/Brynjar Gauti) #

A farmer checks muddy volcanic ash on his land in Iceland on April 18, 2010. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

This aerial image shows the crater spewing ash and plumes of grit at the summit of the volcano in southern Iceland's Eyjafjallajokull glacier Saturday April 17, 2010. (AP Photo/Arnar Thorisson/Helicopter.is) #

A pilot takes pictures of the Eyjafjallajokull volcano billowing smoke and ash during an eruption on April 17, 2010. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

Construction crews repair a road damaged by floods from glacial melting caused by a volcano in Eyjafjallajokull, Iceland April 17, 2010. (REUTERS/Lucas Jackson) #

Horses graze in a field near the Eyjafjallajokull volcano as it continues to billow dark smoke and ash during an eruption late on April 17, 2010. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

Ingi Sveinbjoernsso leads his horses on a road covered volcanic ash back to his barn in Yzta-baeli, Iceland on April 18, 2010. They come galloping out of the volcanic storm, hooves muffled in the ash, manes flying. 24 hours earlier he had lost the shaggy Icelandic horses in an ash cloud that turned day into night, blanketing the landscape in sticky gray mud. (HALLDOR KOLBEINS/AFP/Getty Images) #

The ash plume of southwestern Iceland's Eyjafjallajokull volcano streams southwards over the Northern Atlantic Ocean in a satellite photograph made April 17, 2010. The erupting volcano in Iceland sent new tremors on April 19, but the ash plume which has caused air traffic chaos across Europe has dropped to a height of about 2 km (1.2 mi), the Meteorological Office said. (REUTERS/NERC Satellite Receiving Station, Dundee University, Scotland) #

A woman makes a phone call in the empty arrival hall of Prague's Ruzyne Airport after all flights were grounded due to volcanic ash in the skies coming from Iceland April 18, 2010. Air travel across much of Europe was paralyzed for a fourth day on Sunday by a huge cloud of volcanic ash, but Dutch and German test flights carried out without apparent damage seemed to offer hope of respite. (REUTERS/David W Cerny) #

Lava and lightning light the crater of Eyjafjallajokul volcano on April 17, 2010. (REUTERS/Lucas Jackson) #

The first of 3 photos by Olivier Vandeginste, taken 10 km east of Hvolsvollur at a distance 25 km from the Eyjafjallajokull craters on April 18th, 2010. Lightning and motion-blurred ash appear in this 15-second exposure. (© Olivier Vandeginste) #

The second of 3 photos by Olivier Vandeginste, taken 25 km from the Eyjafjallajokull craters on April 18th, 2010. The ash plume is lit from within by multiple flashes of lightning in this 168 second exposure. (© Olivier Vandeginste) #

The third of 3 photos by Olivier Vandeginste, taken 10 km east of Hvolsvollur Iceland on April 18th, 2010. Lightning flashes and glowing lava illuminate parts of Eyjafjallajokull's massive ash plume in this 30-second exposure. (© Olivier Vandeginste) #

Infolinks

ShareThis