Monday, July 27, 2020

How India managing the Covid-19 irrespective of the high population?

How India managing the Covid-19 irrespective of the high population?



These are few measures govt India is practicing

1. Containment zones ( Area Isolation)(https://images.app.goo.gl/oPDCnw5d7uaBqmX68) .




2. Districts(~Counties) are classified as zones and restricted movement between zones(https://images.app.goo.gl/svhsewwVG8BMKtpRA),


3. Travelers tracing and supervised mandatory quarantine (https://www.bbc.com/news/world-asia-india-53218018)


4. Contact tracing(https://www.voanews.com/covid-19-pandemic/contact-tracing-limits-covid-19-cases-northern-indian-state)


5. E-pass - you need to get an e-pass to travel between Districts/counties and mandatory quarantine even if you travel between districts.(https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/may/31/tamil-nadu-government-makes-e-pass-mandatory-for-inter-zone-and-inter-state-travel-2150450.html)


6. Lockdowns


7. Home/Special facility/Hospital quarantine for COVID +vs and close contacts and.


0. Wearing a mask is mandatory!!! (https://www.thehindu.com/news/cities/chennai/masks-are-mandatory-for-all-now/article31400601.ece). -


These are the few measures I am heard of, could be more as these measures vary from state to state.

more read :- (https://theprint.in/india/more-testing-new-containment-quarantine-strategies-how-tamil-nadu-is-tackling-covid-spurt/431496/ )

Wednesday, April 8, 2020

நெடுநல்வாடை


            தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். 



போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்த தலைவியின் ஏக்கம் குறித்து நெடுநல்வாடையில் கூறப்பட்ட வருணனையை எளிய தமிழில் அழகாக விவரிக்கிறார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.






நெடுநல்வாடை -ஒரு அறிமுகம் !!



முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து!
பத்துப்பாட்டில் ஏழாவதாக திகழும் நூல் நெடுநல்வாடை. இது தலைவன் போர்ப் பாசறையில் இருக்கும்போது தலைவி அவன் வரவுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது. இந்த நூலில் அகப்பொருள் பற்றிய செய்திகள் நிறையாக இருப்பினும் இது புறப்பொருள் நூலாயிற்று. ஏனெனில் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப்பொருள் நூலாயிற்று.
இந்த நூலை இயற்றியவர் நக்கீரனார் எனும் நல்லிசைப் புலவர். இவரை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பர். இவர் தந்தையார் மதுரை மாநகரத்தே சிறந்த ஆசிரியத் தொழில் நடத்தயவர் என்று அறியப்படுகின்றது.
பதித்துப்பாட்டில் முதலாவதாக வைத்துக் கூறப்படும் திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே. மேலும் அகநானூறு, முதலிய தொகை நூல்களுள்ளும் இவர் இயற்றிய செய்யுள்கள் பல உள்ளன. கைலைபாதி காளத்திபாத்தியந்தாதி, இறையனார் அகப் பொருளுரை, திருவீங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், நாலடி நாற்பது என்னும் நூல்களும் இவர் இயற்றிய நூல்களே.
இந்த நெடுநல்வாடை என்னும் நூலை இவர் காலத்து சிறப்புற்று விளங்கிய புரவலனாகிய தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய வெற்றியை புகழ்ந்து எழுதியுள்ளார். இந்த மன்னன் இளமைப் பருவத்திலேயே அரசுகட்டில் ஏறினான். அந்த பருவத்தில் இவனை வீழ்த்தி விடக்கருதிய மூவேந்தரும், குறுநில மன்னரும் ஒருங்குகூடி இவனை எதிர்த்துப் போரிடக் கிளப்பினர். சிறு வயதாக இருந்த போதும் அஞ்சாது தலையாலங்கானம் என்னுமிடத்தே அப்பகைவர்கள் அனைவரையும் எதிர்த்து போர் செய்து வாகை சூடினான்.
இந்த மன்னன் நல்லிசைப் புலவராகவும் விளங்கினார் என்பதனை, நகுதக்கனரே (புறம் 72) எனது தொடங்கும் இவன் செய்யுளால் அறியலாம். நெடுநல்வாடை என்னும் இப்பாட்டிற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் பின்வருமாறு முன்னுரை எழுதுகின்றார்.
“இப்பாட்டிற்கு நெடுநல்வாடை என்று பெயர் கூறினார். இப்பெயர் நெடிதாகிய நல்ல வாடை என விரித்தலின் பண்புத்தொகையாயிற்று. வாடையென வாடைக் காறிற் றோன்றினா கூதிர்ப் பாசறையை உணர்த்தலிற் பிறந்த வழிக் கூறலென்னும் ஆகுபெயராய் நின்றது. இப்பாட்டினுள் “கூதிர் நின்றற்றார்போதே” எனவும், “கூதிர்ப் பானாள்” எனவும் கூறுகின்றாராதலின், இது “வாகைதானே பாலையது புறனே” எனப் பாலைக்கு புறனாக கூறிய வாகையாய் அதனுள், “கூதிர்வெனில்” என்றிரு பாசறைக்காதலின் ” ஒன்றிக் கண்ணிய மரபினும்” எனக் கூறிய தலைவிக்கு, ஒருபொழுது ஓரூழிபோல நெடிதாகிய வாடையாய்ப் பாலையாகிய உரிப்பொருள் உணர்த்திற்று. அகத்தொடுங்கிப் போகம் பொதுச் சொற் பொறானாய் அப் போகத்தில் மனமற்றுப் வேற்றுப் புலத்துப் போந்திருந்த இருப்பாகலின் அவற்று நல்லதாகிய வாடையாயிற்று. எனவே காமாத்திடத்து வெற்றி எய்தலின் வாகைத் திணையாயிற்று. இப்பாட்டு சுட்டி ஒருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகப்பொருளாமேனும், “வேம்பு தலையாத்த நோன்காழ் எகம் என அடையாளப்பூக் கூறினமையின் அகமாகாதாயிற்று” என்பதாம் என்கின்றார்.

Thanks http://siragu.com/

Monday, August 26, 2019

விழுந்து முளைத்த பல்-நிலையான பற்கள் (Permanent (adult) teeth) விழுந்து விட்டால்..


         விழுந்து முளைத்த பல்-நிலையான பற்கள் (
Permanent (adult) teeth)  விழுந்து விட்டால்..       


                விபத்தினாலோ அல்லது குழந்தைகள் விளையாடும் போது கிழே விழுவதாலோ விழுந்து முளைத்த பல்-நிலையான பற்கள் (Permanent (adult) teeth)  விழுந்து விட்டால்..
             விழுந்த (பிடுங்கி கொண்டு வந்த) பல்லை உலர விட கூடாது... உடனடியாக அதை அதன் இடத்தில் சரியாக பொறுத்திவிட வேண்டும். அப்படி பொருத்தும்போது அந்த பல் மீண்டும் ஒட்டி உயிர் பெற்றுவிடும். அப்படி பொறுத்த முடியவில்லை அல்லது சரியாக பொருந்தவில்லை எனில் பல்லை உமிழ்நீரில்(எச்சில்) அல்லது பால்/இளநீரில் வைத்து உடனடியாக பல் மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டும். (இதற்க்கான தனி திரவம் கூட கிடைக்கிறது). 

உடனடியாக  (எவ்வளவு விரைவாக  முடியுமோ அவ்வளவு விரைவாக) பல் மருத்துவரை அணுகி அந்த பல்லை அதன்  இடத்தில் பொருத்த வேண்டும். இதனால் அந்த பல் மீண்டும் உயிர் பெற ~95% வாய்ப்பு உள்ளது...
கால தாமதம் அந்த பல் நிரதராமாக இறக்க... இழக்க நேரிடும். 


பல் பிடுங்கிக்கொண்டு பிடுங்கி(உருவி)க்கொண்டு வந்து விடுவது,பல் சூழ் எலும்பிலிருந்து பல் கழன்று கொள்வது,பல் இருந்த இடத்திலிருந்து முழுவதுமாய் வேருடன் வந்திருக்கும்

பல் வேர் பகுதி மட்டும்  உடைவது


சிகிச்சை 

இந்த வகை அடிபடுவதில் எல்லோரும் முதலில் பயந்து விடுவோம்
அடுத்து பிடுங்கிக்கொண்டு வந்த பல்லை என்ன செய்வது என்றும் தெரியாது

பிடுங்கி கொண்டு வந்த பல்லை உலர  விட கூடாது 

பல்லை பால், இளநீர்    போன்றவற்றில் மட்டும் வைத்து எடுத்து செல்ல வேண்டும் 
இதற்க்கான தனி திரவம்  கூட  கிடைக்கிறது 

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பல் மருத்துவரை அணுகி அந்த பல்லை அதை இடத்தில்  நிலை நிறுத்த வேண்டும் 
 கால தாமதம் அந்த பல் நிரதராமாக இறக்க ....இழக்க நேரிடும்  


Ref :- http://drumapathy.blogspot.com/2012/07/blog-post_17.html

Friday, November 30, 2018

சலீம் அலி

சலீம் அலி

       பறவைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மனிதரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? வாழ்கையின் ஆரம்ப நாட்களில் இருந்தே வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலும் , ஒரு நாள் ஒரு சிறிய பறவை தன்னிடம் வந்து தஞ்சம் புகுந்து அவருடைய வாழ்கையின் போக்கையே மாற்ற ,அதன் பின் பறவைகளைக் கொன்று வேட்டையாடி வந்த அவர் அந்தப் பறவை இனத்திற்காகவே தன் சொந்த வாழ்வை சமர்ப்பித்து கொண்டார் ..
 

உலகில் பறவைகள் என்ற பேச்செடுக்கும்போது எல்லாம் இந்தியாவின் பெயரை தூக்கி நிறுத்தி, மேல் நாட்டுக்காரர்களையும் தலை நிமர்ந்து , வியந்து பார்க்கவைத்தார் அவர் .. பெரிய பெரிய  படிப்புகளையெல்லாம் பெரிய பெரிய ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்திலோ , ஹார்வேர்டு பல்கலைகழகத்திலோ இதுபோல உலகப் புகழ் பெற்ற எந்த பல்கலைகழகத்திலும் சென்று படிக்காத அவர் பறவைகளைப் பற்றிய அறிவியல் துறையில் உலகம் போற்றும் மேதாவிகளாகத் திகழ்ந்தார்.

இந்தியாவின் பறவை மனிதன் உலக புகழ் பெற்ற பறவை ஆரய்சியாளாரான டாகடர் .சலீம் அலி தான் அந்த மனிதர் .

Friday, March 2, 2018

சிரியாவில் ஏன் போர் நடக்கிறது? - மதம்..அதிகார போட்டி..




           சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், Jordan, கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 10% ஷியாமுஸ்லிம்,  16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தைச் சேர்ந்தவராகக் காணப்படுகிறார்.



         சிரியாவில் கடந்த 8 வருடங்களாக போர் நடந்து வருகிறது. 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். சிரியா நாட்டில் கடந்த 40 வருடமாக ஒரே குடும்பம்தான் ஆட்சி செய்து வருகிறது. 30 வருடம் ஹபீஸ் ஆட்சி செய்தார். கடந்த 10 வருடமாக அவரது மகன் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி நடக்கிறது. இவர்களை தாண்டி அந்த நாட்டில் எதிர்க்கட்சி, இயக்கங்கள் என எதுவுமே இல்லை.  ஆனால் கடந்த 10 வருடங்களில் அந்த நாட்டின் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. யாருக்கும் வேலை இல்லை , அரசியல் சுதந்திரம் இல்லை, பொருளாதாரம் சரிவானது, பலருக்கு கல்வி இல்லை. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.


   என்ன என்ன முஸ்லிம் பிரிவு மக்கள் சிரியாவில் இருக்கிறார்கள்

சன்னி (Sunnis) - ஏறத்தாழ 70% இக்கும் மேல்
ஷியா (Shia) - ஏறத்தாழ10%

மீதம்
Salafis(சலாஃபி)
Yazidis (யாசிடி)
Alawis (அலாவிஸ் ) 10-30 லட்சம்
Druze - ~6 லட்சம்
Isma'ilism(இஸ்மாயில் இசம்) - ஷியா  வில் ஒரு பிரிவு (is a branch of Shia Islam)
Salafis

Religious groups include Sunnis, Christians, Alawites, Druze, Isma'ilis, Mandeans, Shiites, Salafis, Yazidis, and Jews. Sunni make up the largest religious group in Syria.


இவர்களை தவிர Kurds(குர்துஸ்) என்னும் ஒரு மதத்தை சார்ந்த மக்கள் 7% முதல் 10% வசிக்கிறார்கள்,(குர்துஸ் இஸ்லாம் மதமா என்பது இன்னும் நிரூபிக்க படவில்லை) - https://en.wikipedia.org/wiki/Kurds_in_Syria

 Kurds(குர்துஸ்) -  இவர்கள் பல ஆண்டுகளாகவே தனி நாடு(Kurdistan-குர்திஸ்தான் ) கேட்டு போராடி வருகின்றனர்.. குர்திஸ்தான் என்பது சிரியா மட்டுமல்ல - துருக்கி , ஈரான், ஈராக் ஆகிய நாடுகளின் சிறு பகுதிகள் சேர்த்து.- https://en.wikipedia.org/wiki/Kurdistan





சுமார் 30 வருடங்களாகச் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் ஆசாத். இவர், 1990-ல் ‘எதிர்க் கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது’ என வெளிப்படையாக அறிவித்தார். இதனால், எதிர்க் கட்சிக்காரர்களின் பகையை அதிக அளவில் சம்பாதித்து வைத்திருந்தார்.

    அப்போது, சில உள்நாட்டுப் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 98 சதவிகித வாக்குகளைப்பெற்று, நான்காம் முறையாக அதிபரானார் ஹஃபெஸ் அல் ஆசாத். பின்னர், இவருடைய இரண்டு மகன்களில் மூத்தவரான பசல் அல் ஆசாத்-தான் அடுத்த அதிபர் என மக்கள் நினைத்திருந்த நேரத்தில், கார் விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்தார்.

     ஷியா இயக்கத்தைச் சார்ந்த ஹஃபெஸ் அல் ஆசாத்தின் இளைய மகனான பஷர் அல் ஆசாத், தேர்தலில் போட்டியிட்டு அதிபரானார். இவர் மீது கிளர்ச்சியாளர்களும், பயங்கரவாதிகளும் தனிக்கவனம் செலுத்த முக்கியக் காரணம்...

  70 சதவிகிதத்துக்கு மேல் சன்னி பிரிவு மக்கள் வாழும் ஒரு நாட்டை, ஷியா பிரிவைச் சார்ந்த ஒருவர் ஆளுவது என நினைத்ததன் விளைவுதான் இந்த உள்நாட்டு யுத்தத்துக்கான ஆரம்பம்.




பஷர் அல் ஆசாத் தலைமையிலான ராணுவத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க் கட்சிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. எதிர்க் கட்சியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

-----
ஐ.எஸ்.ஐ.எஸ்(SIS). அமைப்பு!

சிரியாவில் உள்நாட்டுப் போரானது, ஒரு மதத்தின் இரு பெரும் பிரிவுகளுக்குள்ளேயே (சன்னி(Sunni) - ஷியா(Shia) ) நடைபெறத் தொடங்கியது. இதிலிருந்து தனியாக உருவான அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ்(இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா). இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான். ஆரம்ப காலத்தில் சிரியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பானது, தற்போது உலகம் முழுவதிலும் இயங்கிவருகிறது.

The Islamic State of Iraq and the Levant (ISIL) also known as the Islamic State of Iraq and Syria or Islamic State of Iraq and al-Sham (ISIS)

Arab Spring(அரபு வசந்தம் )

அப்போதுதான் (2011) அரபு வசந்தம் தொடங்கியது. அரபு நாடுகளில் குடும்ப ஆட்சி நடத்தி வந்த பல நாடுகளில் புரட்சி நடந்தது. வரிசையாக பல நாடுகளில் ஆட்சி கவிழ்ந்தது. அதை பார்த்த சிரியா மக்கள் தங்கள் நாட்டிலும் இப்படி மாற்றம் நடக்க வேண்டும் என்று புரட்சியில் இறங்கினார்கள்..

https://en.wikipedia.org/wiki/Arab_Spring#Syria



----

கடந்த 2015-ம் ஆண்டுவரை இந்த அமைப்பால் தனிப்பட்ட(சண்டையின் போது அல்லாமல் ) முறையில் 33,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த அமைப்பை அழிக்கும் நோக்கத்தில் சிரியா அரசு பல முறை தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த அமைப்புக்கு உலகில் உள்ள பல இஸ்லாமிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி செய்து வருகின்றன.


போட்டித் தீவிரவாத அமைப்புகள்!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக, பல தீவிரவாத அமைப்புகளும் சிரியாவில் தலைதூக்க ஆரம்பித்தன. உள்நாட்டு யுத்தம் ஒருபக்கம் என்றால், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் போட்டி தீவிரவாத தாக்குதல்கள் மறுபக்கம்... இது சிரியாவுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி வருகிறது.

 இப்போது  சிரியாவில் எத்தனை  தீவிரவாத அமைப்புகள் இருக்கும்னு  நினைக்கிறீங்க ?
https://en.wikipedia.org/wiki/Portal:Syrian_Civil_War

100கும் மேற்பட்ட அமைப்புகள்

ஆனால் அமைப்புகள் கூட்டாக சேர்ந்து சண்டை இடுகின்றன...

முக்கியமா (தீவிரவாத)அமைப்புகள்..

1. Syrian Arab Republic and allies - (அரசு/ஷியா)
2. Syrian opposition and allies - (எதிர் கட்சிங்கள் அமைப்பு/சன்னி )
3. Democratic Federation of Northern Syria and allies- (குர்திஸ் மற்றும் வடக்கு பகுதி(தனி நாடு ) தீவிரவாத அமைப்புகள் )
4. Islamic State of Iraq and the Levant and allies - (ISIS /ISIL )
5. Salafi Jihadist groups/Tahrir al-Sham (Salafis-சலாஃபி தீவிரவாத அமைப்பு)
6. Hezbollah (ஷியா தீவிரவாத அமைப்பு)
7.CJTF-OIR (against ISIL - இவர்கள் ISIS ஐ மட்டும் எதிர்க்கிறார்கள் )

மற்ற தீவிரவாத அமைப்புகள் இவர்களில் யாராவது ஒரு அமைப்புடன் இணைந்து போரிடுகின்றன...


அடுத்து எந்த நாடு யாரை ஆதரிக்கிறது யாரை எதிர்க்கிறது..!

https://www.theguardian.com/world/ng-interactive/2015/oct/09/who-backs-whom-in-the-syrian-conflict
https://en.wikipedia.org/wiki/Iran%E2%80%93Saudi_Arabia_proxy_conflict

சாத்துக்கு(அரசுக்கு ) ஆதரவாக ஷியா பிரிவைச் சேர்ந்த நாடான ஈரான், முழு ஒத்துழைப்பையும் தந்துகொண்டிருக்கிறது. மேலும், தனது நட்பு நாடான ரஷ்யாவும் முழு உதவியும் செய்துவருகிறது.

அமெரிக்கா ஆசாத்துக்கு எதிராக எதிர் கட்சிங்கள் அமைப்புக்கு ஆதரவளிக்கிறது.

அதேபோல், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு(தீவிரவாத அமைப்புகள் உட்பட )உதவி செய்துகொண்டிருக்கின்றன.

http://www.bbc.com/news/world-middle-east-39528673


யார் எந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் ...


https://www.aljazeera.com/news/2017/10/syria-opposition-alliances-171010075809951.html
https://en.wikipedia.org/wiki/Yemen



Monday, January 9, 2017

குடம் புளி

குடம் புளியால் கிடு கிடுவென்று உடல் எடை குறையுமா?







குடம்புளி என்றொரு வஸ்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரிந்திருக்காது என்பதும் உண்மை. குடம்புளி அல்லது கோக்கம் புளி என்று தமிழிலும் மலபார் டாமரிண்ட் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் குடம்புளியின் அறிவியல் பெயர் ‘கார்சீனியா கம்போஜியா’. இன்றளவில் உடல் எடை குறைப்பு விசயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்யும் எடை குறைப்பு கேப்ஸ்யூல்களில் பெருமளவு பயன்படுத்தப் படுவது இந்த குடம்புளி தான். கார்சீனியா கம்போஜியா கேப்ஸ்யூல்கள் என்ற பெயரில் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன. குடம்புளி எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.


இந்தக் குடம்புளி  2000 வருடங்களுக்கு முன்பு இந்தியச் சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப் பட்டு வந்தது. நாம் இன்று பயன்படுத்தும் புளியின் வரலாறு வெறும் 300 வருடங்கள் தான். ஆனால் குடம்புளி அல்லது பழம்புளியின் வரலாறோ 2000 வருடங்களுக்கும் முற்பட்டது. தற்போதைய சீமைப் புளி போலல்லாமல் இந்தக் குடம்புளியானது செடிகளில் விளைகிறது. தட்டையான சதைப்பற்றுடன் கூடிய பூசணிக்காய் வடிவ குடம்புளி பழமானதும், பறிக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. காய்ந்த புளி பல வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும். குடம்புளியில் இப்போது நாம் பயன்படுத்தும் புளி போல சுள்ளென்ற புளிப்புத் தன்மை இருப்பதில்லை, மாறாக புளிப்புத் தன்மையுடன் சற்றே தூக்கலாக துவர்ப்புச் சுவையும் இருக்கும். அதோடு இது பழநறுமணப் பொருள் வகைப்பாட்டில் வருவதால் இதைப் பயன்படுத்திச் சமையல் செய்யும் போது பதார்த்தங்களில் அதீத மணம் தெருமுனை வரை நீளும் என்பதும் உறுதி.
குடம்புளி விளையும் இடங்கள்:

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விளையும் இந்தக் குடம்புளி கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றது. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாக இப்போதும் கேரளாவில் அன்றாடச் சமையலில் பயன்படுத்தப்படுகின்றது. இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது. இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.
குடம்புளி எங்கே கிடைக்கும்?
பொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி தற்போது மக்களிடையே உணவு விசயத்தில் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் விழிப்புணர்வின் பின் பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. கணிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சாதாரணப் புளியுடன் ஒப்பிடுகையில் விலை தான் சற்று அதிகம். நாம் வழக்கமாக தற்போது பயன்படுத்தும் புளி விலை கிலோ 100 ரூபாய் என்றால் குடம்புளியின் விலையோ அதை விட மும்மடங்கு அதிகமாக இருக்கிறது. 
குடம்புளியின் பயன்:
குடம்புளி உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடல் எடை குறைப்பு விசயத்திலும் குடம்புளியின் பங்கானது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை. மனித மூளையின் பயனியல் கிளாட்டில் செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டி அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் குடம்புளி உதவுகிறது என சித்த மருத்துவர்கள் கருதுவதால் சித்த மருத்துவத்தில் குடம்புளி ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக இன்றளவிலும் நீடித்து வருகிறது. குடம்புளியில் இருக்கும் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் மூளைநரம்புகளிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடிய செரட்டோனின் செயல்பாட்டைத் தூண்டும். இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்த படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நமது பமரபார்ந்த புளி குடம்புளி தான் என்றால் அது ஏன் இப்போது அதிகமாகப் புழக்கத்தில் இல்லை?
குடம்புளியைப் பொறுத்தவரை அதன் விளைச்சல் இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பரவலாகக் காணப் படுகிறது என்பதோடு அதன் விலையும் அதிகம் என்பதால் மூன்னூறு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இப்போதைய புளி அதை ஓரங்கட்டி விட்டு இந்தியச் சமையலறைகளில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்பததை தாண்டி இதில் யோசிக்க தேவையான ஆதாரங்களென எதுவுமில்லை. அதோடு நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாகக் கிடைக்கிறது எனும் குறிப்பை ஒட்டி யோசித்தால் அங்கே கிடைக்கக் கூடிய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நம் அன்றாட வாழ்வில் மளிகைக் கடைகளில் சரளமாகக் கிடைப்பதில்லை என்பதோடு மிகச் சிறிய அளவில் மட்டுமே நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதாலும் அதற்கான தேவை குறைந்திருக்கலாம். இதெல்லாம் தமிழ்நாட்டில், ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் குடம்புளியில் தான் மீன் குழம்பு சமைத்து சாப்பிடுகிறார்கள். எப்போதுமே மரபார்ந்த விசயங்களைப் பின்பற்றுவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் முதலிடம் வகிக்கும் கேரளா இந்த விசயத்திலும் நம்மை முந்திக் கொண்டு முன்னுதாரணமாகி விட்டது.
எந்தெந்த சமையலில் குடம்புளி சேர்க்கலாம்?
காரக் குழம்பு, மீன் குழம்பு, ரசம், சாம்பார் என நாம் வழக்கமாகப் புளி சேர்த்து சமைக்கும் அத்தனை உணவுப் பொருட்களிலும் குடம் புளி சேர்த்து சமைக்கலாம்.




By கார்த்திகா வாசுதேவன்   

Friday, November 4, 2016

நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி

நீரிழிவுக்கு மாமருந்தாகும் கனி

கு.வி.கிருஷ்ண மூர்த்தி



நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை.
விதை சூரணம் / பொடி நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும்.
நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும்.


ஆக்சிஜன் அமுதசுரபி
சங்க இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் பரவலாகச் சுட்டப்பட்டுள்ள நாவல் மரம், நல்ல நிழல் தரும் மரம். வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் கொடுப்பது மட்டுமின்றி, கோடையில் பழங்களையும் அதிகம் நல்கும். இதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக இது ஒரு சாலையோரத் தாவரமாக இந்தியா முழுவதும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பேரரசர் அசோகர் நட்ட சாலையோர மரங்களில் இது முக்கியமான ஒன்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தற்கால ஆய்வுகளின்படி இந்த மரம் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுறுதலை நன்று தாங்கவல்லவை என்று அறியப்பட்டுள்ளது. மேலும், இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிடுகிறது.


கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் வெட்டப்பட்ட மரங்களில் புளிய மரத்துக்கும் தூங்குமூஞ்சி மரத்துக்கும் அடுத்தபடியாக நாவல் மரங்கள் அதிகம் இருந்ததாகத் தெரிய வருகிறது. எனவே, நாவல் மரங்களின் எண்ணிக்கையைச் சாலை ஓரங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் தாவரத்துக்கு நல்ல உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகள் அதிகமாகியுள்ள நிலையில், பற்றாக்குறையைத் தடுக்க மேற்கூறப்பட்ட முயற்சி அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.





- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in









Wednesday, September 7, 2016

பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!




பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!: பெரிய, பணக்கார மாநிலங்கள் எனும் பட்டியலில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் மேல்நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றன.




1960-ல் மேற்கு வங்கத்தில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.390 ஆக இருந்தது. அதே ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.330. 2014-ல் ஒரு சாமானிய மேற்கு வங்கக் குடிமகனின் ஆண்டு வருவாய் ரூ.80,000. தமிழ்நாட்டிலோ அது ரூ.1,36,000. 1960-ல் ஏழை மாநிலங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2014-ல் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. தென் மாநிலங்களில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகியவை ஏழ்மை நிலையிலிருந்து பணக்கார நிலைக்கு வெகுவேகமாக முன்னேறின. அதே வேளையில், மேற்கு வங்கமும் ராஜஸ்தானும் பணக்கார மாநிலங்கள் பட்டியலிலிருந்து வெகு வேகமாகக் கீழே சரிந்தன. இந்த 12 மாநிலங்களில் பெருவாரியான மாநிலங்கள் 1960-ல் கிட்டத்தட்ட ஒரே இடத்தில்தான் இருந்தன. அதற்குப் பிந்தைய 50 ஆண்டுகளில் இம்மாநிலங்களில் சில தீவிரமான முயற்சிகள் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டதால், தர வரிசைப் பட்டியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.


பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!
:

Tuesday, September 29, 2015

What is Digital India


    Launched by Prime Minister Narendra Modi on July 1, 2015, the Digital India initiative was started with a view to empower the people of the country digitally. The initiative also aims to bridge India's digital segment and bring big investments in the technology sector.

    What is Digital India?

    The Digital India initiative seeks to lay emphasis on e-governance and transform India into a digitally empowered society.
    The program is projected at Rs 1,13,000 crore which will prepare the country for knowledge-based transformation.
    The Department of Electronics and Information Technology (deitY) anticipates that this program will have a huge impact on the Ministry of Communication and IT. 
    It is to ensure that government services are available to citizens electronically. 
    It will focus on providing high speed internet services to its citizens and make services available in real time for both online and mobile platform.
    Digital India also aims to transform ease of doing business in the country.
    Modi's government is focussing on providing broadband services in all villages of the country, tele-medicine and mobile healthcare services and making the governance more participative.

    Vision of Digital India initiative:

    Here is what the government of India aims to achieve through Digital India initiative.
    1. Infrastructure: The Digital India initiative has a vision to provide high speed internet services to its citizens in all gram panchayats. Bank accounts will be given priority at individual level. People will be provided with safe and secure cyber space in the country.
    2. Governance and services: Government services will be available online where citizens will be ensured easy access to it. Transactions will be made easy through electronic medium.
    3. Digital empowerment of citizens: This is one of the most important factor of the Digital India initiative to provide universal digital literacy and make digital sources easily accessible. The services are also provided in Indian languages for active participation.

    9 major projects under the initiative:

    1. Manufacturing of electronics: The government is focusing on zero imports of electronics. In order to achieve this, the government aims to put up smart energy meters, micro ATMs, mobile, consumer and medical electronics.
    2. Provide public access to internet: The government aims to provide internet services to 2.5 lakh villages which comprises of one in every panchayat by March 2017 and 1.5 lakh post offices in the next two years. These post offices will become Multi-Service centres for the people.
    3. Highways to have broadband services:Government aims to lay national optical fibre network in all 2.5 lakh gram panchayats. Broadband for the rural will be laid by December 2016 and broadband for all urban will mandate communication infrastructure in new urban development and buildings. By March 2017, the government aims to provide nationwide information infrastructure.
    4. Easy access to mobile connectivity: The government is taking steps to ensure that by 2018 all villages are covered through mobile connectivity. The aim is to increase network penetration and cover gaps in all 44,000 villages.
    5. e-Governance: The government aims to improve processes and delivery of services through e-Governance with UIDAI, payment gateway, EDI and mobile platforms. School certificates, voter ID cards will be provided online. This aims for a faster examination of data.
    6. IT Training for Jobs: The government aims to train around 1 crore students from small towns and villages for IT sector by 2020. Setting up of BPO sectors in North eastern states is also part of the agenda.
    7. e-Kranti: This service aims to deliver electronic services to people which deals with health, education, farmers, justice, security and financial inclusion. 
    8. Global Information: Hosting data online and engaging social media platforms for governance is the aim of the government. Information is also easily available for the citizens.
    MyGov.in is a website launched by the government for a 2-way communication between citizens and the government. People can send in their suggestions and comment on various issues raised by the government, like net neutrality.
    9. Early harvest programs: Government plans to set up Wi-fi facilities in all universities across the country. Email will be made the primary mode of communication. Aadhar Enabled Biometric Attendance System will be deployed in all central government offices where recording of attendance will be made online. 

    Response to the Digital India initiative from global investors:

    Global investors like Sundar Pichai, Satya Nadella, Elon Musk have supported Modi's Digital India initiative.
    Microsoft CEO, Satya Nadella intends to become India's partner in the Digital India program. He said that his company will set up low cost broadband technology services to 5 lakh villages across the country. 
    Sundar Pichai, CEO, Google said that India will play a big part in driving technology forward in future which will improve people's lives in India. 
    Prime Minister Narendra Modi showed keen interest and wanted to use Tesla Motors' power wall technology which will store electricity in a battery for a long term. 

    Infolinks

    ShareThis