Saturday, September 27, 2014

கற்றலினால் ஆன பயன் என்ன?





கற்றலினால் ஆன பயன் என்ன?






..

எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..
கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..
அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..
விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..
டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய்
சந்திக்கும்பொழ
ுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும்
நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக்கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும்
பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள்
யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன?
தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில்
கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன?
தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல்,
வக்கனையாய் மனப்பாடமாய்
அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில்

எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?






..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய்
எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட
வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர்கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத்
தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன்
சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..
10நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள்
மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம்கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.
பார்வையாளர்கள் விடவில்லை.தொடர்ந்து கல்லெறிகிறார்கள்.
கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த
வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும்
இறையைத் தூக்கிக்
கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என
முடிவு செய்து அவனுடைய கழுத்தைக்
கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில்
யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி,
அதில் நெருப்பு வைத்து, அதை அந்த
வாலிபனிடத்தில் எறிந்திருந்தால்
புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட
வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது,
வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில்
கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..
மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..
சிஙகமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக
இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற
அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால்
எனக்கென்ன பயன்?

அந்த விலங்குகளின் கண்களை நம்
கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும்
ஓங்கித் தாக்கினால்
அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும்
தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன்
கண்களில் தூவினால் போதும் அவை அந்த
இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான்
முயற்சிக்கும்.
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்..
பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக்
கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும்,
ஆஸ்திரேலியாவிலும் என்ன
தோண்டியெடுக்கிறார்கள்
என்பதை கற்றுக்கொடுப்பதை விட..
வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக்
கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின்
உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?
சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப்
பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன?
நமக்கான உரிமைகள் என்ன? காவல்
நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்
கொள்வது? விஷக்கடிகளில் எப்படித்
தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன
செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது?
எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..
பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?
கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?
மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய்
இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத
கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல்
துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான்
வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன்
வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..
என்னை.. எங்களை மன்னித்து விடு..!







நன்றி ,எழுதிய அந்த மனிதருக்கு....

Wednesday, September 10, 2014

காட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால்



நண்பர்களே நீங்கள் வாகனத்தில் காட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால் என்ன செய்வீர்கள் 

இந்ந காணொளியில் உள்ளவர் யானையை ஏமாற்றி தப்பித்து வாகனத்துடன் செல்வதை பாருங்கள்


Manager always a Manager!


         A wealthy manager was riding in his limousine when he saw two men along the roadside eating grass. Disturbed, he ordered his driver to stop and he got out to investigate.

He asked one man, "Why are you eating grass?"

"We don't have any money for food," the poor man replied. "We have to eat grass."

"Well then, you can come with me to my house and I'll feed you," the manager said.

"But sir, I have a wife and two children with me. They are over there, under that tree."

        "Bring them along," the manager replied. Turning to the other poor man he stated, "You come with us too."
          The second man, in a pitiful voice then said, "But sir, I also have a wife and SIX children with me!"
"Bring them all, as well," the manager answered.


            They all entered the car, which was no easy task, even for a car as large as the limousine. Once underway, one of the poor fellows turned to the manager and said, "Sir, you are too kind. Thank you for taking all of us with you."


The manager replied, "Glad to do it. You'll really love my place... the grass is almost a foot high!"




Tuesday, September 2, 2014

Most popular tourist destination in India

Most popular tourist destination in India for domestic travellers


NEW DELHI: About 1,145 million Indians traveled within the country in 2013, up by 9.5% from 2012 with Tamil Nadu topping the charts as the most popular destination. It was followed byUttar Pradesh and Andhra Pradesh.

According to tourism ministry data, the number of domestic tourist visits to states/UTs was 1,145 million in 2013, compared to 1,045 million in 2012, registering a growth of 9.59% over 2012. There was growth of 20.9% in 2012 over 2011. About 865 million Indians travelled in 2011.

The top ten states in terms of number of domestic tourist visits (in millions) during 2013 were Tamil Nadu (244.2), Uttar Pradesh (226.5), Andhra Pradesh (152.1), Karnataka (98.0), Maharashtra (82.7), Madhya Pradesh (63.1), Rajasthan (30.3), Gujarat (27.4), West Bengal (25.5) and Chhattisgarh (22.8).

These states contributed the lion's share — about 84.9% — to the total number of domestic tourist visits during 2013.

Data on foreign tourist visits revealed that 19.95 million foreigners visited states and UTs in 2013 as compared to 18.26 million in 2012 and 19.50 million in 2011. During 2013, the number of foreign tourist visits to states/UTs registered a growth of 9.24% over 2012 as compared to a negative growth of 6.3% in 2012 over 2011.

The top ten states in terms of number of foreign tourist visits (in millions) during 2013 were Maharashtra (4.16), Tamil Nadu (3.99), Delhi (2.30), Uttar Pradesh (2.05), Rajasthan (1.44), West Bengal (1.25), Kerala (0.86), Bihar (0.77), Karnataka (0.64) and Goa (0.49).


Infolinks

ShareThis