Saturday, May 19, 2012

facebook

FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி? 

  (http://www.muthusiva.in)


 குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.

ஏற்கனவே நா எழுதுன "ப்ரபல பதிவர் ஆவது எப்படி?"ங்குற பதிவ
follow பண்ணி நடந்ததால, பதிவுலக விட்டே போன பல பேரு கால் பண்ணியும் மெயில் பண்ணியும்  நன்றிக்கு மேல நன்றியா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமா "காதல் தோல்விகளை குறைப்பது எப்படி?" ங்குற பதிவை ஃபாலோ பண்ணி காதலிகள்ட செருப்படி வாங்கிட்டு break up ஆன எத்தனையோ பேரு "உங்களால தான் நா இப்ப நிம்மதியா இருக்கேன்" ன்னு  மனசார வாழ்த்துறாங்க. இதெல்லாம் என்ன பெருமையா... கடமே..........

இதோ அந்த வரிசையில் உங்களுக்காக... ஃபேஸ்புக்கில் அப்பாடக்கர் ஆவது எப்படி?  (இது தற்போது facebook ல் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களின் தொகுப்பே)

1. முதல்ல உங்ககிட்ட ஒரு கேமரா இருக்கனும்... முக்கியமான விஷயம் அதுல zoom எஃபெக்ட் நல்லா இருக்கனும். உதாரணமா உங்க கால்ல ஒரு கொசு கடிக்க உக்காருதுன்னு வச்சிக்குவோம்... அத மடார்ன்னு அடிச்சி கொன்னுட கூடாது. உடனே உங்க கேமராவ எடுங்க. அந்த கொசுவ மட்டும் zooooooooooooooooooooom பண்ணி ஒரு ஃபொட்டோ எடுத்து "என்னை இன்று கடிக்க வந்த கொசு அப்புடிங்கற கேப்ஷனோட போட்டீங்கன்னு வைங்க லைக்கு அள்ளிக்கும்.

2. அப்புறம் நீங்க Onsite la இருக்கமாதிரி (இல்லைன்னா கூட) காட்டிக்கனும்.. அதாவது உங்க profile ல லொக்கேஷன்கிற எடத்துல யூரோப்புல உள்ள எவனுக்குமே தெரியாத ஒரு ஊர போட்டுக்கனும். அது மட்டும் பத்தாது... நீங்க லெதர் ஜாக்கெட் போட்டுகிட்டு ஒரு ஒரு மரத்த கட்டி புடிச்ச மாதிரியோ, இயற்கைய ரசிக்கிற மாதிரியோ ஒரு  ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கனும். (லெதர் ஜாக்கெட் மிகவும் முக்கியம் அமைச்சரே) அப்பதான் நீங்க ஆன் சைட்டுல இருக்கீங்கன்னு நம்புவாங்க.

3. கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள அப்லோடு பண்ணனும். அது என்ன கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோன்னு கேக்குறீங்களா..அதாவது கேமராவ நேர வச்சி எடுத்தா அது எல்லாரும்  எடுக்குற சாதாரண ஃபோட்டோ...  அதே கேமராவ 45 degree சாய்ச்சா மாதிரி எடுத்தா அதுக்கு பேரு  photography. அதுமட்டும் பத்தாது... அந்த போட்டோவுல உங்க friend  list la உள்ள எல்லாரையும் மறக்காம tag பண்ணி விட்டுடனும்.
4. நீங்க கொடைக்கானலோ இல்லை ஊட்டியோ டூர் போனீங்கன்னா அங்க ஒரு சுமாரா ஒரு 500 போட்டோ எடுத்துருப்பீங்க... அத அப்புடியே ஃபேஸ்புக்குல பொளக்குன்னு அப்லோட் பண்ணிட கூடாது... "குப்புசாமி Uploaded 305 photos in his album kodai tour" ன்னு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்துச்சின்னு வச்சிக்குங்க... எல்லாரும் வெறிச்சி ஓடிருவாய்ங்க. நீங்க அப்லோட் பண்ண ஃபோட்டோக்கள்ல சைடு ஆங்கிள்ல திரும்பி நிக்கிறது, சிரிக்கிறது , மொறைக்கிறது வெக்கப்படுறது, பிஸ் அடிக்கிறதுன்னு கண்ட ஃபோட்டோக்கள்லாம் இருக்கும்... அதுல கேமரா ஷேக் ஆயி பொகை மூட்டமாவே ஒரு 50 ஃபோட்டோ இருக்கும். அத அப்புடியே upload பண்ணுவீங்க. இதே மாதிரி பண்ணிட்டு இருந்தா உங்கள எல்லாரும் unfriend பன்ண கூஅட   வாய்ப்பு இருக்கு
5. பசிக்கொடுமை, ஏழ்மை இந்த மாதிரி விஷயங்கள கண்டா நீங்க பொங்கி எழனும்.... "உதாரணமா உகாண்டா மக்கள் சாப்பாட்டிறே கஷ்டப்படுறாங்க... நம்ம ஊர்ல சினிமா காரங்க மேல பால ஊத்திகிட்டு இருக்காங்க.. " அப்புடின்னு ஒரு சைடு பசியால் வாடுற மக்களையும், இன்னொரு பக்கம் ரஜினி படத்துக்கோ அஜித் படத்துக்கோ ரசிகர்கள் பால் ஊத்துற மாதிரி உள்ள படத்தையும் மெர்ஜ் பண்ணி ஒரு ஃபோட்டோ  upload பண்ணனும்.. அதுனால நீங்க பட்டினியா இருக்கனும்னோ இல்ல பசிக்கிறவங்களுக்கு சாப்பாடு போடனும்னோ அவசியம் இல்ல. நீங்க பசிக்குதுன்னு பிச்சை கேக்குறவனுக்கு ஒரு ரூவா கூட போடாம 1000 ரூவாய்க்கு  பீஸ்ஸா... பர்க்கர்... ஸ்பிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் ரோல் ன்னு  என்ன வேணா சாப்புடலாம். எவனுக்கும் தெரியாது.
6. அப்புறம் இந்த விஜய்,அஜித் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்கள பாத்தாலே உங்களுக்கு அலர்ஜி வரனும்.. அதாவது நீங்க US la தான் born and brought up மாதிரியும், only இங்கிலீஸ் படங்கள் தான் பாப்பீங்கங்குற மாதிரியும்  "இந்த தமிழ் படங்களே இப்புடித்தான்... so boring ya" அப்புடின்னும் சீனப்போடனும்...
7. அப்புறம் இந்த டி.ஆர், பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன் இவங்கல்லாம் உங்க கண்ணுல மனுஷங்களாவே தெரியக்கூடாது... அவங்கள எதோ வினோதமான ஜந்துக்கள் மாதிரியே நீங்க ட்ரீட்  பண்ணனும்.. அவங்கள பத்தின போஸ்ட் எல்லாத்துலயும் "so funny ya"  "funny guys"  இந்த மாதிரி கமெண்ட்ஸ் மட்டுமே போடனும். "funny" ங்கற வார்த்தை மிக முக்கியம்.
8. உங்க ஒரிஜினல் பேர முடிஞ்ச அளவு உபயோகிக்க கூடாது...  கத்திக்குத்து கந்தன், பெட்டி பெருமாளு, வெட்டு வேலு, பாக்கு ரவின்னு ரவுடிங்க எப்புடி அடைமொழியோட  இருக்காங்களோ அதே மாதிரி உங்க பேருக்கு முன்னாடியோ பின்னாடியோ எதாவது  ஒரு அடைமொழிய நீங்களே சேத்துக்குங்க.. உதாரணமா உங்க பேரு அசோக்குன்னா  அத டான் அசோக்குன்னும் அசாருன்னா  அத அசால்டு அசாருன்னும் மாத்தி வச்சிக்கலாம்.. காலப்போக்குல அதுவே உங்களுக்கு நிரந்தரமான பேராயிடும்.

9. அப்புறம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி பண்ணனும்.. அது எப்புடி பண்றது? கைக்காசு எதும் போயிருமோன்னு பயப்படாதீங்க.. அது ரொம்ப ரொம்ப ஈஸி.. ஒரு குழந்தை சோகமா   இருக்கமாதிரி ஒரு ஃபோட்டோ... அதுக்குள்ள, இந்த குழந்தை எலும்பு புற்று நோயால் அவதிப்படுகிறது... அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் தேவை..Facebook accepted to give 10 paise per each  like... please like and save the child" அப்புடின்னு ஒரு ஃபோட்டோவ எவனாவது share  பண்ணிருப்பான்.... அதுக்கு மத்தவங்க மாதிரியே ஒரு லைக்போட்டு முடிஞ்சா share பண்ணி விடுங்க.. அவ்ளோதான் கொழந்தைய காப்பத்தியாச்சி... மத்ததெல்லாம் facebook பாத்துக்கும்.
10. எல்லார்கிட்டயும் பாசமா இருக்கனும்... நேர்ல பாத்தா நீங்க சில பேர்ட்ட மூஞ்சி குடுத்து கூட பேசமாட்டீங்க...முன்னாடி விட்டு பின்னாடி அசிங்க அசிங்கமா கூட திட்டிருப்பீங்க.. ஆனா ஃபேஸ்புக்ல அப்புடி வெளிப்படையா எல்லாம் பேசக்கூடாது.. "கலக்குங்க மச்சி" "சூப்பர் மச்சி" "ஆல் த பெஸ்ட் மச்சி" இப்புடிதான் பேசி பழகனும்.. குறிப்பா பொண்ணுங்களுக்குள்ள நிறைய கொழாயடி சண்டை வரைக்கும் நடந்துருக்க்கும்.. ஆனா ஃபேஸ்புக்ல "hi dear" "you are looking awesome dear" "have fun dear" "u rocking  dear" இந்த மாதிரி தான் பேசனும். dear ங்கறது பொண்ணுங்களுக்கு தான்... பசங்க அவசரப்பட்டு யூஸ் பண்ணி தோஸ்தானாவ  ஃபார்ம் ஆயிராதீங்க..

11. அப்புறம் சில ஃபோட்டோக்கள் upload பண்ணனும்னு போது உங்களுக்கு அதுக்கு  என்ன description குடுக்குறதுன்னு தெரியாது.... அந்த மாதிரி சமயங்கள சமாளிக்க ஒரு ஆயுதம் இருக்கு... "how many likes?" அப்புடின்னு போட்டு விட்டுடனும்....  சில தாவர உண்ணிகள் அதுக்கும் லைக் போடும்... ஆன சில ஊண் உண்ணிகள் கெட்ட வார்த்தைல திட்டுறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.
12. உங்க ஸ்டேடஸ்க்கு likes வாங்குறது ரொம்ப முக்கியம்... சில சமயம் என்ன status போடுறதுண்ணே தெரியலையா...ஒரு சூப்பர்  ஐடியா இருக்கு...

If you find your ஜட்டி size in the below numbers.. like it.. அப்புடின்னு போட்டு கீழ

      "75, 80, 85, 90, 95, 100, 110"

இப்புடி போட்டுருங்க... இதுக்குள்ள எல்லாரும் வந்துதான் ஆகனும்... கண்டிப்பா லைக் போட்டு தான் ஆகனும்.. அப்ப கோவணம் கட்டுறவங்கள கவர் பண்ண என்ன பண்றதா? அட கோவணத்துக்கெல்லாம் சைஸ் இல்லப்பா... free size தான்.

14. ஸ்டேடஸ் update ரெம்ப ரெம்ப முக்கியம்.. பக்கத்து வீட்டு அக்கா உங்கள சர்ஃப் வாங்கிட்டு வர  சொன்னிச்சின்னி வச்சிக்குங்க உடனே பொசுக்குன்னு போயிற கூடாது... வந்து facebook ல "surf வாங்க போறேன்"னு  status update பண்ணிட்டு தான் போகனும்.. ஏஞ்சொல்றேன்னா நீங்க சொல்லாம கொல்லாம சர்ஃப் வாங்க பொய்ட்டீங்கன்னு வச்சிக்குங்க உங்க ஆடியண்ஸ் எல்லாம்  எங்க பொயிட்டீங்க எங்க பொய்ட்டீங்கன்னு தவியா தவிச்சி போயிருவாங்கல்ல.. அது மட்டும் இல்ல நீங்க உச்சா போறதுக்கு முன்னால, கக்கா போறதுக்கு முன்னால கூட ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டு தான் போகனும்...



15. அதே மாதிரி நீங்க உங்க location la பாப்ப நாயக்கம் பட்டி ன்னு போட்டு வச்சிருப்பீங்க.. திடீர்னு அலுவலக பணிக்காக ரெண்டு நாளூ எருமைநாயக்கம் பட்டிக்கு போறீங்கன்னு வச்சிக்குவோம் உடனே லொக்கேஷன் மாத்திரனும்... ஏன்னா உங்கள பாக்க வர்ற உங்க ரசிகர்கள், பாப்பநாயக்கம்பட்டிக்கு போய் ஏமாந்துரகூடாது பாருங்க...

16. அப்புறம் இந்த பொண்ணுங்கள கண்டா உங்களுக்கு சுத்தமா புடிக்கவே கூடாது.. ச்ச ச்ச... வெளியில மட்டும் தான்...உதாரணமா ஒரு காதல் தோல்வி பாட்டு வந்துச்சின்னு வச்சுக்குங்க அதுல  பொண்ணுங்கள தாக்குற மாதிரி உள்ள ரெண்டு லைன அப்புடியே லபக்குன்னு கவ்வி  உங்க ஸ்டேடஸ்ல போட்டுக்கணும்.... அப்பதான் நீங்க ரவுடியா ஃபார்ம் ஆக முடியும்... உங்க
நண்பர்கள் வட்டமும் பெருசாகும்.. ஏன்னா இந்த குடிகாரய்ங்களும், பொண்ணுங்களால பாத்திக்கப்பட்டவிங்களூம்  தான் உடனே friend  ஆயிருவாய்ங்க. நீங்க பல பொண்ணுங்க கிட்ட செருப்படி வாங்குன அப்புறம் தான் அந்த state ku  போனீங்கங்குற உண்மை யாருக்கும் தெரியக் கூடாது.

17. அப்புறம் இந்த ஆடு வெட்டுறவிங்க, கோழி வெட்டுறவிங்க, மரத்த வெட்டுறவிங்களையெல்லாம் "பாவிங்க" "மனிதாபிமானம் இல்லாதவிங்க"
"இதுங்கள்ளாம் என்ன ஜென்மம்" "இரக்கமில்லாதவர்கள்" ன்னு எப்புடி எப்புடி முடியுமோ அப்புடியெல்லாம் திட்டனும்.. ஏன்னா வெட்டுறங்கதான் குற்றவாளிங்க.. என்ன... நம்ம ஆடு கோழியெல்லாம் திங்கலைன்னா அவங்க ஏன் வெட்ட போறாங்கன்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்க கூடாது... அவங்க பண்றது தப்பு தான்.. இதயெல்லாம் கேட்டா நீங்க அப்பாடக்கர் ஆக முடியாது... 

என்ன ஓகே வா..வெற்றியோட வாங்க

இவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.
 
 
 
Source: http://www.muthusiva.in/2012/05/facebook.html
 
 

Tuesday, May 15, 2012

news-in-time-of-social-media-tamil



அபிஷேக் மனு சிங்வி , செய்தி ஊடகங்கள் மற்றும்  சமூக வலைத்தளங்கள் 



In English: http://nallapathivukal.blogspot.in/2012/05/news-in-time-of-social-media.html




தில்லியின் அதிகார வட்டாரத்தில், மிகவும் கவர்ச்சியான, வாக்கு வன்மையுடைய வழக்கறிஞராகவும், செல்வந்தரான அரசியல்வாதியாகவும் அறியப்படுபவர் அபிஷேக் மனு சிங்வி. இவர் தொடர்பான மிகுந்த சர்ச்சைக்குரிய குறுந்தகடு வெளியானவுடன், St.Stephens, ஹார்வர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் மாணவரான இவர் மிகவும் சரியான நகர்த்தல்களுடன் அதை எதிர்கொண்டார். மிகவும் துரிதமாகச் செயற்பட்டு, செய்தி சானல்கள் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாக இந்த குறுந்தகட்டில் அடங்கிய காட்சிகள் வெளிவருவதை தடுக்க நீதிமன்றத்தின் மூலம் ஒரு தடையுத்தரவைப் பெற்றார், தவிர இந்த குறுந்தகட்டின் சூத்ரதாரியாக அறியப்படும் தனது ஓட்டுநரின் மூலமாகவே, முன்விரோத்த்தின் காரணமாக குறுந்தகட்டின் காட்சிகளை மிகைப்படுத்தி, ஒரு பழிவாங்கும் படலத்தை அரங்கேற்றினேன் என்றும் கூற வைத்தார். இதைவிட ஒரு திறமையுள்ள வழக்கறிஞரால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு விவகாரத்தின் நதிமூலத்தையே நிர்மூலமாக்கிவிட்டாலும், துரதிருஷ்டவசமாக இது 2007 ஆம் ஆண்டு போலில்லாமல், 2012 ஆம் ஆண்டு. இதே ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக இருந்திருந்தால், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இது போன்ற விவகாரத்திற்கு சமாதி கட்டப் போதுமானது. ஆனால், 2012 இல், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கான யுகத்தில், இவை போதுமானதாக இல்லை.


தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் நீதிமன்றத் தடையுத்தரவைக் காரணம் காட்டி, இச்செய்தி பற்றி ஒருபுறம் மெளனம் சாதிக்க, மறுபுறம் ஏனைய ஊடகங்களும் இது பற்றிய விவாதம் நட்த்தவோ அல்லது குறைந்தபட்சம் செய்தி வெளியிடவோ கூட மெனக்கெடவில்லை. இன்னமும் சொல்லப் போனால், நீதிமன்றத் தடையாணை பிறப்பிப்பதற்கு முன்னதாகவே சில தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் இக்குறுந்தகட்டினைப் பெற்றுவிட்டிருந்தன, ஆனாலும் அவர்களே அறிந்த காரணங்களுக்காக இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இல்லை. சமூக வலைத்தளங்கள் மட்டும் இல்லையெனில், இவ்விஷயம் எங்கு துவங்கியதோ, அங்கேயே முடிந்திருக்கும்.



ஆனால் சிங்வியின் துரதிருஷ்டம், ட்விட்டரில் இச்செய்தி பரவத் துவங்கியவுடன் கட்டுப்படுத்த முடியாமல் போனது. நீதிமன்றத் தடையாணை இருந்தபோதிலும், சிங்வியின் சர்ச்சைக்குரிய வீடியோ யூடியூப் தளத்தில் கசியவிடப்பட்டது, தவிர ட்விட்டரில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிங்வி அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒருவராக இருந்தார். ஒரு விஷயத்தின் மீதான மக்களின் நாட்டமும், ஒரு செய்தியின் மீதான முக்கியத்துவமும் மிகவும் குறுகிய இக்காலகட்டத்தில், இதை ஒரு அளப்பரிய சாதனை என்றே கூற வேண்டும். ஒருபுறம் ட்விட்டரில் “நாயால் கடிபட்ட ட்ரைவர், ட்ரைவரால் கடிபட்ட மாஸ்டர்” போன்ற ஹாஸ்யங்கள் பெருகிக் கொண்டிருக்க, நீதிமன்ற வளாகத்தில் இத்தகைய ஒரு அவலம், அதுவும் பாலியல் உறவுக்கு ப்ரதியுபகாரமாக நீதிபதிஸ்தானம் என்ற விஷயமே விவாதிக்கப்பட்டதில் கவனிக்கத்தக்க அம்சமாக விளங்கியது. இதனால் விளைந்த கோபம் உணரக் கூடியதாகவும், விமர்சன்ங்கள் மிக்க் கூரியதாகவும், கேள்விகள் மிகவும் நியாயமானதாகவும் இருந்தன. எவ்வாறு ஒரு சாதாரண ட்ரைவரால் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்கையான நிகழ்வை அரங்கேற்ற முடிந்தது? அவரால் எவ்வாறு மீடியாக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது? சிங்வி வீடியோவை நம்பக் கூடிய வகையில் மிகைப்படுத்த எவ்வாறு அவருக்குப் பணம் கிட்டியது? அந்த நிகழ்வு நீதிமன்ற வளாகத்தில் நடந்த்தா? வீடியோவில் தொடர்புடைய பெண்மணி ஒன்பது மாதங்களில் நீதிபதி பதவி அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டாரா? இவ்வாறு ட்விட்டரில் எழுப்ப்ப்பட்ட அநேக கேள்விகளுக்கும் விடையில்லை. அதே சமயம், ஒரு சாரார் இது இரு வயதினரிடையே மிகவும் அந்தரங்கமாக நடைபெற்ற நிகழ்வு இது என்றும் மற்றொரு சாரார், சிங்வி ஒரு பொது மனிதர், ஒரு ராஜ்யசபை உறுப்பினர், தன்னுடைய பதவியை துஷ்ப்ரயோகம் செய்து, ஒருவருடான பாலியியல் உறவுக்கு மாற்றாக, நீதிபதி பதவியைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி தருவது ஏற்கவே முடியாதது என இருசாராரிடையே பற்றி எரியும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இவ்வாறு இவையனைத்தும் ட்விட்டரில் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, மீடியாக்கள் அதிசமாய் மெளனம் சாதித்தன. இவ்விவகாரத்தில் தம்முடைய பங்கை சுத்தமாக பகிஷ்கரித்து, ட்விட்டரில் இதனை விவாதிப்பதற்கு ஒரு களமேற்படுத்திக் கொடுத்தது.


இவ்வளவு தீர்மானமாக இவ்விவகாரத்தை எதிர்கொண்டு, நடந்தவையனைத்துமே நாடகம் என்ற பாவனையிலிருந்த சிங்வியை இவ்விவகாரத்தின் வீச்சு மெல்லத் தாக்கத் துவங்கியது. பாராளுமன்றக் கூட்ட்த்தொடர் துவங்கவிருந்த நிலையில், பாஜக இவ்விவகாரத்தைச் சரியாகப் பிடித்துக் கொண்டபோது, சிங்விக்கு தாம் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.



இது போன்றதான பாலியியல் சர்ச்சைகள் ஒன்றும் புதிதானவை அல்ல, இதுபோன்ற சர்ச்சைகள் உலகின் அநேக நாடுகளிலும் அரசாங்கங்களை உலுக்கியிருக்கிறது. தவிர, இந்தியாவிலும் ஒரு அரசியல்வாதி இவ்வாறான நிலையில் பிடிபடுவது அப்படி ஒன்றும் புதிதான விஷயம் அல்ல, ஆனாலும் இச்சமயம் இவ்விஷயத்தைப் பொருத்தமட்டில் மீடியாவின் போக்குதான் மிகவும் வியப்புக்குரியதான ஒன்று. இந்தியாவைப் பொருத்தவரை மீடியாவானது மிகுந்த செல்வாக்குடைய அரசியல்வாதிகளுக்கானதாகவே திகழ்கிறது. சில விஷயங்களில் பொது மக்கள் இவற்றில் வெளியாகும் விஷயங்களை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லாமலே போகிறது. தனிப்பட்ட ஒரு நபரின் கருத்தானது செய்தியாக உருமாற்றம் பெறுவதால் உண்மையான புலனாய்வு ஊடகவியல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதனால் நீண்ட காலமாகவே செய்தி என்பது ஒருவழிப் பாதையாகவே திகழ்கிறது.



இதுபோன்ற சமூக வலைத்தளங்களின் வருகையால், குறிப்பாக ட்விட்டர் போன்றவற்றால், சாதாரண நிலையிலுள்ளவர்கள் தங்களது கருத்துகளையும், எண்ணங்களையும் பிரதிபலிக்க ஒரு சிறந்த தளம் ஏற்பட்டுவிட்ட்தாக்க் கருதுகின்றனர். ஆக செய்திகள் இனி எப்போதும் ஒருவழிப் பாதை ஆகா. மீடியாக்கள் நிரா ராடியாவின் உரையாடல்களைப் புறக்கணிக்க எத்தனித்தபோது, கீ போர்டுகளையும், அகண்ட அலைவரிசை இணைய இணைப்புகளையுமே ஆயுதங்களாகத் தரித்தவர்கள் மூலம் மீடியா இவற்றை விவாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. உபி தேர்தலின்போது மீடியாக்கள் வெறுமனே ராகுலும், பிரியங்காவும் கையசைப்பதையே காட்டிக் கொண்டிருந்தபோது ட்விட்டர் பயனாளர்களுக்கு இன்னமும் அதிகம் தெரிந்திருந்த்து. இது போன்ற பல நிகழ்வுகள் மீடியாக்கள் மீது ஒருவகையான அவநம்பிக்கையைத் தோற்றுவித்துவிட்டிருந்தன. பெரும்பாலான பிரபல மீடியாக்கள் சிங்வி விஷயத்தை முற்றிலுமாக மூடி மறைக்க எத்தனிக்கையில், ட்விட்டர் அதற்கு நேரெதிர்மாறாக நடந்து கொண்டது. மீடியாக்கள் இவ்விஷயத்தை மூடி மறைத்தபோது, ட்விட்டர் இவ்விஷயத்தை முன்னெடுத்துச் சென்றது. இன்றைய யுகத்தில் தடையுத்தரவுகளும், தடைகளும் அர்த்தமில்லாத விஷயங்களாகிவிட்டன. அரசாங்கத்தின் பல முன்னெடுப்புகளையும் தாண்டி, எவராலும் இந்த வீடியோ பரவுவதைத் தடுக்க இயலவில்லை. சிங்வி ராஜிநாமா செய்த்தும், திடீரென விழித்துக் கொண்ட்து போல் மீடியாக்கள் ட்விட்டருக்குப் பக்க வாத்யம் இசைக்கத் துவங்கின. இது சமூக வலைத்தளங்களின் வெற்றி என மீடியாக்கள் கோஷித்தன, ஒருசாரார், இது சமூகவலைத்தளங்களின் அயோக்யத்தனம், அவற்றிற்கு சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்று குமுறினர். கடைசியாக இச்செய்தியின் பொருளானது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஊடகத்தின் வாயிலாக நிலைநிறுத்தப்பட்டது.



இதனால் சமூகவலைத்தளங்கள் செய்வதனைத்துமே சரியென்றாகிவிடுமா என்றால் இல்லை. நிஜத்திலுள்ளது போலவே அங்கும் குடாக்குகளும், கிறுக்கர்களும், அர்த்தமில்லாமல் பேசுபவர்களும், உணர்ச்சி ததும்பப் பேசுபவர்களும், கருத்தே இல்லாமல் ஜோடனையாகப் பேசுபவர்களும் நிறைய உண்டு. சமூகவலைத்தளங்கள் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவெனில், இங்கு தனியொருவர் தனது தனிப்பட்ட கருத்தை மட்டுமே நிலைநிறுத்தவியலாது; தனியொரு நபர் ஒரு விவகாரத்தை திசை திருப்பி இழுத்துச் செல்ல முடியாது; என் வழியே சிறந்த வழி என்றும் கூற இயலாது. சமூகவலைத்தளங்கள் தங்களைத் தாங்களே மிகவும் நேர்த்தியாக கட்டுப்படுத்திக் கொள்கின்றன. உரத்த அர்த்தமில்லாத பேச்சுக்கள் எப்பொழுதும் அதிக கவனம் பெறுவதில்லை, அவ்வமயம் நிதானமான கருத்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நான் கண்டவரையில் தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் நடைபெறுவதை விட அதிக சிந்தனையூட்டக்கூடிய கருத்தாக்கங்களும், விவாதங்களும் ட்விட்டரில் நடைபெறுகின்றன. இதற்குப் பிறகும் மீடியாக்கள் விழித்துக் கொள்ளவில்லையென்றால் காலச் சூழலில் அவை பின்னுக்குத் தள்ளப்படும். பரபரப்புச் செய்திகளுக்காகவும், இன்ன பிற விஷயங்களுக்காகவும் மக்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு பதிலாக ட்விட்டரை நாடும் யுகத்தில், மீடியாக்கள் இதுபற்றி மிகுந்த கவலையும் அக்கறையும் கொள்ள வேண்டும்.



அபிஷேக் மனு சிங்வியைப் பொறுத்தமட்டில் அவர் மிகவும் தவறான சூழலில், தவறான இடத்தில் பிடிபட்டிருக்கிறார். ட்விட்டர் யுகத்தில் இது மன்னிக்கப்பட முடியாத்தாகும்.



(இக்கட்டுரையின் மூலத்தை CentrerightIndia தளத்தில் எழுதியவர் சுனந்தா வஸிஷ்ட் அவர்கள், தமிழில் யதிராஜ சம்பத் குமார், )


in English: http://nallapathivukal.blogspot.in/2012/05/news-in-time-of-social-media.html

நாளைக்கே இவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுத்தாலும் ஆச்சரியப்பட கூடாது. இந்தியாவில் எதுவும் நடக்கலாம்!

News in the Time of Social Media

News in the Time of Social Media

 இந்த கட்டுரை தமிழில் : http://nallapathivukal.blogspot.com/2012/05/news-in-time-of-social-media-tamil.html 

 
                         In Delhi power circles, Abhishek Manu Singhvi is known as suave, glib tongued and wealthy lawyer and politician. When the sex CD allegedly showing him in compromising position with a lady lawyer in court premises surfaced, this St. Stephen’s ,Cambridge and Harvard educated sophisticated Delhi boy did all the right things. He quickly managed to get a court injunction preventing television channels from broadcasting the tape, got the driver (ostensibly villain of the entire deed) to confess that he was merely a disgruntled employee taking revenge and got a completely absurd story about his dog who bit the driver’s wife planted in a friendly newspaper. What more could an exceptionally brilliant lawyer do? Singhvi had all his bases covered but unfortunately for him the year was 2012 and not 2007. Five years ago, all these measures would have ensured a perfect burial for the story. In 2012 when social media websites like twitter and face book have come of age, all the world’s ‘band aid’ was found woefully inadequate.
                                      Hell hath no fury like a scandal broken on twitter. While the TV channels had a court gag order and could not show the tape, the media across the board wouldn’t even risk the mere reference or discussion on the issue. In fact the tape had been received by some media houses much before the court injunction (that much was leaked by the journalists on twitter) but for the reasons best known to them they didn’t take any action. Had there been no social media, this matter would have ended right there.
Unfortunately for Singhvi, as soon as news spread on Twitter there was no looking back. Inspite of the court injunction, the tape was leaked on you tube and Abhishek Manu Singhvi ‘trended’ for three straight days. In an age where attention span of people and life of news item is terribly short, this was quite a feat. Sure there were ‘dog bit driver, driver bit master’ kind of jokes abounding, but the emphasis was on how  could a brazen deed performed in the court premises, where judgeship was allegedly promised in lieu of sexual favor be swept under the rug. The anger was palpable, the criticism was razor sharp and questions asked were very valid.  How could an ordinary driver manage to execute such a sophisticated sting operation of this magnitude? How did he have access to the media channels? If Singhvi’s story was to be believed where did the driver find enough money to ‘morph’ the video? Was the act indeed performed in court premises? Was the lady indeed promised judgeship in nine months? Those who had seen the video swore that the tape was anything but doctored. The twitterverse was abuzz with questions that had no answers. A raging debate happened simultaneously between those who thought the act was between two consenting adults and this really was Singhvi’s personal problem and those who felt that Singhvi was a public personality, a Rajya Sabha member who had misused his position and offering judgeship for sexual favor was completely unacceptable.  While all this was happening on Twitter, mainstream media chose studied silence. It was interesting to see them completely abdicating their space and leaving the ground open for people to discuss it on twitter.

                                        Eventually inspite of putting the brave face and pretending everything was hunky dory, the tremors were felt by Singhvi. With BJP taking a proactive role and parliament session about to begin, Singhvi had no choice but to resign. His resignation letter is an interesting bit of legalese which reveals nothing and does nothing to absolve him. In any case, all the king’s horses and all the king’s men could not put the genie inside the bottle again.

                               Sex scandals are nothing new and have rocked all governments of all countries across the world. Even in India this is not the first time a politician was caught with his pants down literally, but the curious thing this time around was how media reacted and how the grammar of news has changed. Media in India has forever been an old boy’s club. Few people made it big in Newspapers and TV channels and they dished out information and ordinary people had no choice but to accept it. They set agendas and shaped opinions. They refused to reveal their allegiances and ordinary person on the road had no way of knowing. Opinions were peddled as ‘news’ and real investigative reporting had taken back seat. For the longest time news was a one way street. It was probably not an exaggeration when Dileep Padgaonkar  ex editor of Times of India was quoted as saying that he has the second most important job in the country.

                                      Suddenly with the advent of social media and especially with twitter, ordinary people realized that they had a platform where they could voice concerns and give opinions. The news was not a one way street anymore. TV channels decided to boycott Radia tapes but these ordinary people armed with keyboard and broadband connection, forced them to debate it and brought the issue out in open. Media houses chose to show Rahul and Priyanka Gandhi wave in UP elections but ordinary twitterati knew better. There were numerous such incidents where the deep distrust for main stream media was evident but till Singhvi’s case there had never been a direct face off. Much of the influential Media downplayed the Singhvi issue as much as possible and Twitter took off in an exactly opposite direction. While main stream media suppressed, Twitter relentlessly pursued the case. In today’s day and age, gag orders and bans mean nothing. Despite repeated efforts, nobody in the government could prevent the Singhvi CD from going viral. Singhvi had to resign and mainstream media suddenly found themselves playing second fiddle to the Twitter. Grudgingly some of them admitted victory of social media while others screamed that social media had turned rogue and needed regulation. The agenda for the news had finally been set by people through a medium which is truly by the people, for the people and of the people.
                                              Does this mean Social media is perfect? Of course not.  Social media is as perfect or as imperfect as the world we live in is. There are rabble rousers, there are lunatic fringes, there are nuanced voices, there are passionate voices, and there are rhetorical voices, just as we have in real world. Social Media reflects the world we live in. The best part about Social media is that no one person gets to set the agenda, no one person is able to hijack the discourse, no one person is able to say ‘My way or Highway’. Social media regulates itself beautifully. Extreme voices find less takers and balanced voices get heard more. Today I find more nuanced debates happening in cyber sphere than television studios or op ed columns. Social Media is here to stay and Twitter is only getting started. Main stream media better wake up to the new dawn or they get left behind. In an era where people are increasingly turning to twitter for breaking news than watching their TV screens, media houses have much to worry about.


As far as Abhishek Manu Singhvi is concerned, he got caught at a wrong place at a wrong time, and in the era of Twitter that is unforgivable.

Monday, May 14, 2012

இந்தியாவும் ஈழமும்

இந்தியாவும் ஈழமும்!


                  நன்றி ”தினமணி”.



                        ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.

 லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.
 இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.
 அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.
 ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.
 1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.
 1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
 அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது. இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.
 இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.
 தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால்வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.
 இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
 11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
 1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.
 ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.
 இந்தியா, சீனா போர் நடக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீர சிங்க அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.
 வங்க தேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. வங்க தேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன்தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.
 இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
 இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.
 சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக்கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது. ராணுவத் தளவாடங்கள், கெம்பன்கோட்டா துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.
 ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.
 தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
 இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.
 இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.

Infolinks

ShareThis