Posts

Showing posts from July, 2014

பால் பவுடர்களில் மெலமைன் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

Image
                         ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டுக் கதவைத் திறக்கும்போது வாசலில் உள்ள கூடையில் பால் பாக்கெட் கிடக்கிறது. பால் கொண்டுவந்து தருபவரின் முகத்தைக்கூடப் பார்த்தது கிடையாது. தனியார் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பால் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கறக்கப்பட்டு, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நகரில் விநியோகம் செய்யப்படுகிறது. நகரவாழ்வில் பால்மாடுகள், ஆடுகள் போன்றவை கண்ணில் பார்ப்பதே அரிது. குழந்தைகள், பெரியவர்கள் என வேறுபாடின்றி அருந்தும் பால்தான் இன்றைய உணவுச் சந்தையில் அன்றாடம் அதிகம் விற்பனையாகும் திரவப் பொருள். தனியார் நிறுவனங்கள் கைக்குப் போய்க்கொண்டிருக்கும் முக்கியமான உணவுப் பொருளும் பாலே. ஒரு காலத்தில் கூட்டுறவு சங்கங்கள்தான் பால் உற்பத்தியில் முன்னணியில் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மெள்ளப் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தனியார் பால் பண்ணைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பால் உற்பத்தியில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றன. பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி வழியாக ஆண்டுக்க...

இயற்கை வழி வேளாண்மை

Image
                                                             இயற்கை வழி வேளாண்மை பற்றி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, முதல் கட்டமாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசாரத்தை ஆரம்பித்தோம். ஒரு கரும்பு விவசாயி, 'உரம் வேண்டாம்...' என்று கூறி,  அதற்குரிய பணத்தை பெற்று, 3,000 ரூபாய்க்கு சாணம் வாங்கி, நிலத்தில் கொட்டி, தண்ணீர் பாய்ச்சி பயிர் வளர்த்தார். இதைக் கண்ட வேளாண்மை அதிகாரி, 'இந்த ஆண்டு நீ, விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க மாட்டாய்...' என்றார். ஆனால், அந்த விவசாயியோ, 70 டன் கரும்பை வெட்டினார். அதிலிருந்து, இயற்கை வேளாண்மை, வேகமாக மக்களிடையே பரவியது. சத்தியமங்கலத்தில் பரவி, பின், மாவட்டம் முழுவதும் பரவியது.                     கடந்த, 2004ல், சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மற்றும் அதன் கடற்கரையோர கிராமங்களில், கடல் நீர் புகுந்ததால், 'ஐம்பது ஆண்டுகள...

ஒரு ஐ.டி. ரெய்டு - கார்ப்பரேட் காட்டுக்குள் ஒரு ஜாலி டிரெய்லர்

Image
                                  இ ன்ஜினீயரிங் கவுன்சலிங், தள்ளுமுள்ளு தகராறாகிவிட்டது இந்த வருடம். போகட்டும்… எப்படியும் ஏதோ ஒரு ‘நகரத்துக்கு மிக அருகில்’ அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் ஸீட் கிடைத்து, நான்கு வருடங்கள் முட்டி மோதி படித்து, அரியர்ஸ் களைந்து, ‘இன்ஜினீயர்’ பட்டத்துடன் வெளியே வந்து காலர் நிமிர்த்தவிருக்கும் நண்பர்களே… ‘ஐ.டி ஜாப்’ என்ற கலர் கலர் கனவுகளுடன் காத்திருப்பீர்கள். ஆனால், அந்த கார்ப்பரேட் காட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியுமா? ஒரு ஜாலி டிரெய்லர் அடிக்கலாமா?!                          கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஐ.டி வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்த நாளில் இருந்தே, நம்மை ஒரு சிறந்த பலி ஆடாக தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். நள்ளிரவு 3 மணிக்கு எழுப்பி, ‘டெல் அபவ்ட் யுவர்செல்ஃப்’ என்று யார் கேட்டாலும், சிறுவயதில் டிபன் பாக்ஸைத் தொலைத்ததில் இருந்து சரளமாக ஒப்பித்தால், இன்டர்வியூவின் முதல் ரவுண்ட்...

நாம் சாப்பிடும் கத்திரிக்காய், தக்காளிக்குப் பின்னே சர்வதேச சதிவலை

Image
                              பொதுவாகப் பூமியில் விளைகிற தாவரங்கள் எதற்கும் எந்த வணிக நிறுவனமும் காப்புரிமை பெற முடியாது. ஆனால், இதே தாவரத்தில் சில மாற்றங்களை உருவாக்கி புதிய விதை ரகத்தைத் தயார் செய்துவிட்டால், அதற்கான காப்புரிமையைப் பெற்றுவிடலாம். இப்படிக் காப்புரிமை பெற்ற தாவரங்களை 20 ஆண்டுகளுக்கு வேறு யாருமே உற்பத்தி செய்ய முடியாது. அதன் மூலம் கிடைக்கும் அத்தனை லாபமும் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே போய்ச் சேரும். அதன் பிறகு இந்த விதைகளை யாராவது பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்குப் பெரும் பணம் தர வேண்டும். ஆக, விவசாயிகளின் மூலவிதைகளைத் தாங்கள் கைப்பற்றி விற்பனைப் பொருளாக மாற்றுவதற்கு உருவாக்கப்பட்டதே மரபணு மாற்றத் தொழில்நுட்பம். வறுமையைப் போக்கவும் விளைச்சலை அதிகப்படுத்தவும் உதவும் தொழில்நுட்பம் என முன்வைக்கப்பட்டபோதும், இதன் பின்னே ஒளிந்திருப்பது முழுமையான வணிக முயற்சி. இந்த முயற்சியில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. இன்று அமெரிக்காவில் விளையும் மக்காளச்சோளத்தில் 90 விழுக்காடு மரபணு மாற்றம் செய்தவை. மரப...