Posts

Showing posts with the label கலைஞர்

அடடே .....!

Image
கலைஞர் குடும்பத்தின் சினிமா துறை ஆதிக்கம் பற்றி தினமணியில் மதியின் கேலிச்சித்திரம், கலைஞர் கருணாநிதிக்கு எரிச்சலாகிவிட்டது. பிருத்விராஜ் கபூரின் குடும்பத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் நடிக்கவில்லையா? சிவாஜி கணேசனின் மகனும் பேரனும் நடிக்கவில்லையா? ரஜினியின் மருமகனும் மகள்களும் சினிமாவில் ஈடுபட வில்லையா ? கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலா நிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது என்று பொரிந்திருக்கிறார். நண்பர் மதி, கலைஞர் சொல்லும் குறுக்கே போடும் நூலான பூணூலைப் போட்டிருப்பவர் அல்ல. விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொ ல்ல முடியாத போதெல்லாம் பூணூலில் சரணடைவது கருணாநிதியின் வழக்கம். கலைஞர் குடும்பத்தில் இனியும் பிறக்கக்கூடிய அன்புநிதி, பண்புநிதி, குணாநிதி, தமிழ்நிதி, தேன்மொழி, கவிமொழி, லெனின், ஜீவா என்று யாரானாலும் சினிமாவில் ஈடுபடட்டும். நமக்கு எந்த ஆட்சேபணையுமில்லை. இந்த நிதிகளுக்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது என்பதுதான் தமிழ் மக்களின் கவலை. கல்லூரிப் படிப்பை முடித்ததுமே பல கோடி ரூபா பட்ஜெ...

தங்கள் மொழியைக் காப்பதில் கலைஞரும் எடியூரப்பாவும

                   சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் எல்லையாரமுள்ள சில கன்னடப்பள்ளிகளை மூடிவிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக அறிய வருவதாகவும் இது இரு மாநிலங்களின் நல்லுறவைப் பாதிக்கும் என்றும் கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப் பட்டு நல்லுறவு பேணப்படும் நிலையில் இந்தச் செய்தி வருத்தத்திற்குரியது என்றும் இதுபற்றித் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சரிசெய்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக அமைச்சர்கள் சிலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பு எல்லையோரங்களில் போராட்டமே தொடங்கியது. கன்னட நாளிதழ்கள் இதுபற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.               உடனடியாக இந்தப் பிரச்சினை தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. தமிழ...