Thursday, May 27, 2010

இந்தியனே, இந்தியாவுக்குள் அகதி

ஒரு காலத்தில் பர்மாவில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து, அகதிகள், இந்தியாவுக்கு வந்தனர்; சமீப காலங்களில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர்.

அதாவது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதைத் தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இப்போது, இந்தியனே, இந்தியாவுக்குள் அகதியாகும் பரிதாபம் நடந்து வருகிறது. உங்கள் வீட்டிலேயே, நீங்கள் அகதி என்றால் எப்படி இருக்கும்?

இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவது, அமெரிக்காவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை!
உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா; இயற்கை வளம் அதிகம்; மனித சக்தி ஏராளம்! அணுகுண்டு செய்து விட்டோம்! உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் பெற்ற நாடாகி விட்டோம் நாம்! எரிவாயு - பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்து விட்டது; உணவு தானியங்களுக்கு முன் போல் திருவோட்டை ஏந்தி, வெளிநாடுகளிடம் செல்லும் நிலை இப்போது இல்லை நம்மிடம் — இவை எல்லாம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன!
இந்தியா ஒரே நாடாக இருந்தால், இன்னும் சில வருடங்களில், தனக்கு சமமாகவோ - தனக்குப் போட்டியாகவோ வந்து விடக் கூடும்; இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இந்தியாவைத் துண்டாட பல வழிகளிலும் முயன்று வருகிறது.
அவற்றில் ஒன்றாக நான் சமீபத்தில் கேள்விப்பட்டது:

இந்தியாவில் உள்ள ஜாதிகள் - அவற்றின் உட்பிரிவுகள் பற்றியும், எந்த ஜாதிக்கு எந்த ஜாதி எதிர் - யாருக்கும், யாருக்கும், நல் உறவு என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய ஏராளமாக பணம் ஒதுக்கி உள்ளதாம்!
இந்த பணத்தை, "உதவித் தொகையாக...' இங்குள்ள ஆராய்ச்சி (பி.எச்டி.,) மாணவர்களுக்கு மிகத் தாராளமாக அளித்து, ஆராய்ந்து வருகிறதாம்! இதே போல மொழி உணர்வுள்ள இயக்கங்கள், சங்கங்கள், குழுக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய உதவி வருகிறதாம்!

"யோவ்  இதனால அமெரிக்கக்காரனுக்கு என்னய்யா பலன்?' என்று கேட்கிறீர்களா?
இப்போ, அமெரிக்கா செலவு செய்யும் பணம் அனைத்தும் மூலதனம் - யாருக்கு யார் எதிர் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களில் பலம் பெற்றவர்களுக்கு நேரடியாகவும், பலம் அதிகம் இல்லாதவர்களுக்கு மறைமுகமாகவும் உதவி, உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை மேலுலகம் அனுப்பி, ஒரு மாநிலத்தவனை, இன்னொரு மாநிலத்தவன், ஒரு ஜாதிக்காரனை, ஒரு மதத்தவனை மற்ற ஜாதி, மத மக்கள் பகையாளியாக நோக்க வைத்து, "அல்டி மேட்டாக' நாட்டைத் துண்டாடுவது தான் அவர்கள் நோக்கம்!
இதன், முதல் கட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. காஷ்மீரில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மூலம் தூண்டிவிட்டு, காஷ்மீரில் சிறுபான்மையினராக இருப்பவர்களை காஷ்மீரை விட்டு துரத்தி அடித்துள்ளது. நம் தாய் நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக நாட்டில் பல பாகங்களுக்கு சிதறிச் சென்றுள்ளனர்!
இதே செயல்முறையைப் பயன்படுத்தி, தமிழகத்திலும் வாலாட்ட திட்டம் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்!


இந்தியனே... நீ விழித்துக் கொள்ளும் நேரம் நெருங்கி விட்டது; இனியும் தூங்காதே!
***

No comments:

Post a Comment

Infolinks

ShareThis