Saturday, November 27, 2010

உலக ஹீரோ


*உலக ஹீரோவாக நேபாள சேவகி தேர்வு;    நம்ம ஊர் கிருஷ்ணனுக்கு 25 ஆயிரம் டாலர் பரிசு!  Related post: http://nallapathivukal.blogspot.com/2010/10/hero.html



                 கொடுமையானண செக்ஸ் வர்த்தகத்திலிருந்து 12000பெண்களைக் காப்பாற்றிய நேபாள பெண்மணி அனுராதா கொய்ராலா ‘உலகஹீரோ’வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த நம்ம ஊர் நாராயணன்கிருஷ்ணனுக்கு 25000 டாலர் பரிசு தரப்பட்டுள்ளது.
தன்னலமற்ற சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தனி நபர்களைஉலக ஹீரோவாக அடையாளம் காட்டும் வகையில் டாப் 10 உலக ஹீரோக்கள்பட்டியலை வெளியிட்டு வருகிறது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி. 2007-ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
குறிப்பிட்ட சமூக சேவர்களின் பின்னணி மற்றும் சேவையைப் படித்து தெரிந்துகொண்டு, சர்வதேச அளவில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சிஎன்என்இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த இரண்டு மாத காலமாக இதற்கான பொது வாக்கெடுப்பு சிஎன்என்இணையதளத்தில் நடத்தப்பட்டு வந்தது. இதற்கான முடிவுகளை சிஎன்என்சேனலின் ஆண்டர்ஸன் கூப்பர்.
இதில் பெருமளவில் வாக்குகளைப் பெற்று அனுராதா கொய்ராலா உலகஹீரோவாக தேர்வு செய்யப்பட்டார்.
உலகம் முழுவதும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமைக்குஎதிராகக் குரல் கொடுத்துவரும் நடிகை டெமி மூர்தான் அனுராதாகொய்ராலாவை அறிமுகப்படுத்தினார்.
அனுராதா கொய்ராலாவும் அவரது மைதி நேபால் அமைப்பும், மிகப் பெரியவிபச்சார சந்தையாகக் கருதப்படும் இந்திய – நேபாள எல்லையில் விற்கப்படும்இளம்பெண்களை தடுத்து காப்பாற்றி வருகின்றனர். 1993-லிருந்து இவர்களால்இதுவரை 12000 பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க ஒவ்வொருவரும் இந்தப் பணியில் எங்களுடன் கைகோர்க்கவேண்டும். பாலியல் தொழிலில் சிறுமிகளே இல்லாத நிலை ஏற்பட வேண்டும்என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அனுராதா கொய்ராலா.
உலக ஹீரோவாக தேர்வு பெற்ற அனுராதாவுக்கு 1 லட்சம் டாலர் பரிசுவழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் அனுராதாவுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் ஹீரோக்களாககடந்த சனிக்கிழமையன்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அந்த 10 பேரில் நம்ம ஊர் நாராயணன் கிருஷ்ணனும் உண்டு. அனுராதா தவிரமற்ற அனைவருக்கும் தலா 25000 டாலர் பரிசாக வழங்கப்பட்டது.
                                                       
ஹாலிவுட்டின் டாப் நடிகர்கள் டெமி மூர், ஹாலே பெர்ரி, ஜெஸிகா ஆல்பா எனஅனைவரும் வந்திருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
 
மற்ற ஹீரோக்கள் – ஒரு அறிமுகம்
க்வாடலுப் அரிஸ்ப் டி லா வேகா (Guadalupe Arizpe De La Vega): 74 வயதாகும்இவர், மெக்ஸிகோவில் ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவி, அதில்தினமும் 900 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவர்களால் கொடுக்கமுடிந்ததைப் பெற்றுக் கொள்கிறார். கொடுக்காவிட்டாலும் அதுபற்றிகவலைப்படுவதில்லை.
சூஸன் பர்ட்டன் (Susan Burton): போதை மருந்துக்கு அடிமையாகி சிறைத்தண்டனை பெற்றவர் சூஸன். ஆனால் பின்னர் அவரே ஒரு தன்னார்வநிறுவனத்தை ஏற்படுத்தி, சிறை சென்று மீண்ட கலிபோர்னிய பெண்களுக்குமறுவாழ்வு மையம் அமைத்து வாழ்வளித்து வருகிறார்.
லிண்டா பான்ட்ரன் (Linda Fondren): உடல் பருமனால் அவதிப்படும் மிஸிஸிப்பிபகுதி மக்கள், உடல் எடையைக் குறைக்க இலவச பிட்னஸ் வசதிகள்,சத்துணவு திட்டங்களை தந்து இதுவரை பல நூறு குண்டு மனிதர்களின் 15000பவுண்ட் எடையைக் குறைத்துள்ளார்.
நாராயனண் கிருஷ்ணன் (Narayan Krishnan): தினசரி 400 மனநலம் பாதித்தஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் அரும்பணியைச் செய்துவரும்மதுரைக்காரர் நாராயணன் கிருஷ்ணன்.
மேக்னஸ் மாக்பார்லன் பாரோ (Magnus MacFarlane-Barrow): மேரி மீல்ஸ் என்றபெயரில் தினசரி உலகம் முழுவதும் உள்ள 4 லட்சம் குழந்தைகளுக்கு அளித்துவருகிறார் பாரோ. 1992-ம் ஆண்டிலிருந்து, இந்த சேவையைத் தொடர்கிறார்இவர்.
ஹார்மோன் பார்க்கர் (Harmon Parker): தனது கட்டுமானத் திறமையைபயன்படுத்தி கென்யாவின் ஆறுகளுக்குக் குறுக்கே நடை மேம்பாலங்களைஅமைத்து மக்களைக் காப்பாற்றி வருகிறார் பார்க்கர். இதனால் கொடியமிருகங்களிடமிருந்தும் மக்களுக்கு பாதுகாப்புக் கிடைத்து வருகிறது. 1997-லிலிருந்து இதுவரை தனிமனிதராக 45 பாலங்களை அமைத்துள்ளார்பார்க்கர்.
அகி ரா (Aki Ra): கம்போடியாவைச் சேர்ந்த இவர் தனது குழுவினருடன் சேர்ந்துஇதுவரை 50000 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளார். இவை அனைத்தும்என்றோ புதைக்கப்பட்டு, இன்னமும் வெடிக்காமல் இருக்கும் ஆபத்தானவெடிகள்.
இவான்ஸ் வடான்கோ (Evans Wadongo): 23 வயதே ஆன இந்த கென்யஇளைஞர், கெரசின் மற்றும் கரி அடுப்பு விளக்குகளின் புகையால் பாதிக்கப்படும்மக்களைக் காக்க இதுவரை 10000 பேருக்கு சூரிய ஒளி விளக்குகளைவழங்கியுள்ளார்.
டான் வால்ராத் (Dan Wallrath): டெக்ஸாஸைச் சேர்ந்த இவர், 2005-ம்ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போரில்படுகாயமடைந்தவர்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக் கொடுக்கும் பணியில்தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இப்போதைக்கு 5 பெரிய அடுக்குமாடிக்குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.
  Related post: http://nallapathivukal.blogspot.com/2010/10/hero.html

2 comments:

Infolinks

ShareThis