Sunday, April 4, 2010

மெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும்


மெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.  




                இந்திய ஆப்பிள்கள் விளைச்சலில் இளைத்ததால்  வந்திறங்கின வெளி நாட்டு ஆப்பிள்கள். பழங்கள் மட்டுமா வந்தன! அத்தனை  பழங்களையும் அழுகாமல் வைத்திருக்க மெழுகு பூசி மினுமினுக்க வைக்கும்    வித்தையும்  வந்திறங்கின. தேன் மெழுகு பூசினால் வேறொன்றும் செய்யாது. பெட்ரோலிய கழிவாய் வரும்  மெழுகை அல்லவா பூசுகிறார்கள். 
          இந்த பெட்ரோலிய கழிவு மெழுகு மெல்ல கொல்லும் இது நிஜம். வீடுகளில் ஏற்றுகின்ற மெழுகுவர்த்தி   செய்ய பயன்படும் மெழுகை மனிதன் உண்ணும் ஆப்பிள் மீது பூசுவதால், அவை குடலில் தங்கி விடும். குடல் அழற்சி உருவாகி புற்று நோயை புறப்பட்டு வர செய்யும். 
         எனவே, எச்சரிக்கை தேவை. ஆப்பிள் பழங்களை அப்படியே கடித்து சாப்பிட வேண்டாம். தோல் சீவி உண்பதே இப்போதைக்கு பாதுகாப்பு.  


.
                           தெரிந்ததை சொல்லி விட்டேன். தெரிவு செய்வது உங்கள் திறமை.

No comments:

Post a Comment

Infolinks

ShareThis