Friday, March 26, 2010

ஐந்தே நாளில் அறிவு ஜீவி ஆவது எப்படி ?


1 ... யாரவது ஒருவரை ( அபாயம் இல்லாதவரை ) கண்டபடி , திட்டி கொண்டே இருங்கள் .

2. தமிழர்கள் , புத்தகம் படிப்பது இல்லை... பளு பிலிம் போன்ற , தொலை காட்சியை பார்கிறார்கள் , என கண்ணீர் விடுங்கள்.... ஆனால், அவர்களுக்கு புரியும்படியோ,அவர்களுக்கு பயன்படும் படியோ, அவர்கள் பிரச்சினை பற்றியோ எதுவும் எழுதாமல், எதாவது லத்தீன் புத்தகத்தை படித்து விட்டு எழுதுங்கள்

3 நாட்டில் பல பிரச்சினை இருக்கும்போது, முதல்வர் கவலை இல்லாமல், விழ நடத்துகிறார் என்று கூறி, சமூக அக்கறையை காட்டுங்கள்... அனால் நீங்களும் மக்களுக்காக கவலை பட வேண்டியது இல்லை..யாரையாவது ஸ்பான்சர் செய்ய சொல்லி , போதையை ஏற்றி கொள்ளுங்கள்...

4 மறக்காமல், அந்த அனுபவம் பற்றி எழுதி, இலக்கியத்தை காப்பற்றுங்கள்

5. கடவுள் இல்லை என்று உரக்க சொல்லுங்கள்... முற்போக்கு அடையாளம் கிடைக்கும்... ஆனால், கடவுள் குற்றத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க, யாரவது சாமியார் காலில் விழுங்கள்

6. அந்த சாமியார், எதாவது சிக்கலில் மாட்டி கொண்டால், கொஞ்சம், கூட தயங்காமல், அவரை பற்றி ஆபாசமாக எழுதி, இலக்கியத்தை காப்ற்றுங்க,,பிறகு வேறு சாமியாரை பிடித்து கொள்ளலாம்..

7. உங்கள் இலக்கியம், பத்திரிகைகளுக்கு புரியாது என்பதால், யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள்... எனவே, பெரிய பத்திரிகளை, திட்டுங்கள்... அந்த பத்திரிகைகளில் எழுதுவது பாவம்... அந்த பழம் புளிக்கும் என சொல்லுங்கள்...ஆனால், அவர்கள், கூப்பிட்டால், அதை மறுத்து, உங்கள் சுய மரியாதையை , நிலை நாட்டாதிர்கள்.. பெருமை பொங்க பேட்டி அளியுங்கள்..
. சினிமாவுக்கும் இது பொருந்தும்.வாய்ப்பு கிடைக்கும் வரை குறை கூறி கொண்டு இருங்கள்

8. உங்களிடம் வயதுக்ற்ற முதிச்சி இல்லை,என யாரும் கூறலாம்... கவலை வேண்டாம்... நான் இளைய தலை முறை எழுத்தாளர் என சமாளியுங்கள்...

9. இதை நிரூபிக்க, பள்ளி மாணவன் போல பேசுங்கள்... (அந்த பெண் என்னையே பாக்குறாட மச்சி.. எல்லா பொண்ணுங்களும் என் dress பாத்து அசந்துட்டாங்க என்பது போல் )

10 நூறு புத்தகம் கூட விற்காத நிலையிலும், உலகம் முழுதும் , என் புத்தகம் படிக்க படுகிறது என தைரியமாக சொல்லுங்கள்.. லத்தின் மொழியில் மொழி பெயர்க்க பட்டாள், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என ஒரு போடு போடுங்கள்..யாருக்கும் லத்தின் தெரியாது அல்லவா ?

No comments:

Post a Comment

Infolinks

ShareThis